சனி, 9 பிப்ரவரி, 2019

வரலாறு தெரியவேண்டும் எதற்காக?

கல்வி சமூகத்திற்காகவும், பொருளாதார மேம்பாட்டிற்காகவும் பாடுபடும் நல் உள்ளங்களே,
வரலாறு எதற்காக?
,
இன்றைய கல்வி முறையைக் கொண்டுவர இதற்கு முன் இருநூறு ஆண்டு கால கல்வி வரலாறு  காரணமாக இருந்தது.

இன்றைய நீர்மேலாண்மையைக் கொண்டு வரும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே வரலாறு கண்ட கரிகாலன் கொண்டு வந்தது உலகத்திற்கான நீர் மேலாண்மை, ஆயிரம் மருத்துவமனைகள் இங்கு கொண்டு வந்து நோய்கள் தீர்க்க பாடுபட்டாலும் இன்று நிலவேம்பு கசாயம் கொடுக்கச் சொன்னது எந்த வரலாறு தெரியுமா?
ஏட்டுக்கல்வி , கணிப்பொறிக்கல்வி என எந்தக் கல்வி வந்தாலும் அத்தனைக்கல்வி கேள்விகளுக்கும் முன்தோன்றிய மூத்த குடி என்று பெருமை பேசுவதுஎந்த வரலாறு?
நீங்களும், நானும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில்  பணம் சம்பாதித்து விடலாம் ஆனால் நாம் செலவழித்த, சேர்;ந்துப் படித்த அழகானநினைவுகளை எதன் அடிப்படையில்  படைத்திருப்பாய், ஒரு மனிதன் நடப்பதற்கு முன்னோக்கிச்செல்கிறான்,  ஒடுவதற்கு முன்னோக்கி செல்கிறான் ஆனால்
ஆனால் உயரமாகச் செல்வதற்கும், பந்தயத்தில்  அடுத்தவர்களை முந்துவதற்கும்  ஏன் பின்னோக்கிச் சென்று முன்னோக்கி ஓட வேண்டும்,
ஏனெனில் பத்தடி பின் சென்றால் ஐந்தடியேனும் உயரம் செல்லலாம்,  இருபதடி பின் சென்றால் ஆறடி உயரம் செல்லலாம்.

வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நீங்கள் பின்னோக்கிச் செல்கின்றீர்களோ, அதைவிட இருமடங்கு தூரம் முன்னோக்கி செல்வதற்கான அளவே வரலாறு
இந்த வரலாறு சமூக வரலாறு, பொருளாதார  வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, நீங்கள் கூறும் அத்துனை நிகழ்வுகளும் வரலாறே,
சுருக்கமாகச்சொன்னால்  இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு மக்கள் வரலாறு யாரும் இதுவரைக்கும் படைத்ததில்லை,

இதுவரைக்கும் நமக்குச் சொல்லப்பட்ட வரலாறு  ஒரு கருத்தியல் அடிப்படையில், ஒரு தரப்பட்ட பார்வையின் அடிப்படையில், ஒரு குறித்தசமூகத்தின் அடிப்படையில், ஆனால் உடுமலை வரலாறோ இன்று லட்சக்கணக்கான மனித உள்ளங்களில் பேட்ட பாடலாகவும், திருமூர்த்தி மலை மண்ணு பாடலாகவும் வலம்வந்து கொண்டிருக்கிறது. மற்றவர்கள் எவ்வளவு தான் அள்ளிக்கொடுத்தாலும் இந்த மண்ணின் மனத்திற்கும் ஊரின் பாசத்திற்கும்  ஈடாகாது, எங்க மக்கள் எங்களுக்கு உசிரு,  இந்த மண்ணே எங்களுக்கு பாசம்.  தொடரும் உடுமலை வரலாறு  அனைவருக்காகவும், உங்களு;காகவும்,தொடர்ந்து பேசும் . . .

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 9944066681👍🐘🐘🐘💓💓🌷🌷

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக