மாவீரர் விருப்பாட்சி கோபால்நாயக்கர் நினைவு விழா (25-11-2014)
விடுதலை
வீரர் கோபால் நாயக்கர் ( விருப்பாட்ஷி ஜமீன்)
விருப்பாட்ஷி
ஜமீனின் 19-ஆம் பாளையக்காரராக திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர் (1763-1801) பட்டமேற்று, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்து
வந்தார். இவர் பதவிக்கு வந்து பத்தாம் ஆட்சியாண்டில் இருந்தே வெள்ளைக் கும்பினி அரசுக்கும், இவருக்கும் பனிப்போர் ஆரம்பமாகியது.
1772-ல் முத்து வடுகநாதரை ஆங்கில அரசு படுகொலை செய்தது. ஆதரவிழந்த அவரது மனைவி வேலுநாச்சியாரையும்
மகள் வெள்ளச்சி நாச்சியாரையும் விருப்பாட்சி அரண்மனையில் எட்டு ஆண்டுகள் அனைத்து வசதிகளையும்
செய்து சொந்த சகோதரி போல பாதுகாத்து வந்தார்.
1800-ல் கோவையில் தென்னிந்தியப் புரட்சி நடைபெறுவதற்கு கோபால் நாயக்கர்
தளகர்த்தராக விளங்கினார். திண்டுக்கல் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை நிறுவி அதன் தளகர்த்தராக
விளங்கினார். துண்டாஜி வாக், கேரளவர்மா, தீரன் சின்னமலை, திண்டுக்கல் லக்கமநாயக்கர், தள எதுலப்ப நாயக்கர் ஆகியோர் இதன்
மற்ற உறுப்பினர்களாவர்.
மொகரம்
பண்டிகையன்று கோவையில் உள்ள ஆங்கிலக் கோட்டையைத் தகர்த்து, அதை மீட்பது என்று திட்டம் தீட்டப்பட்டது.
03-06-1800 என்ற நாள் குறிக்கப்பட்டது. விருப்பாட்சியில் இருந்து படைகள் அனுப்பப்பட்டது.
கோவையில் வழக்கத்தை விட வீரர்கள் அதிகமாக இருப்பதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள்
மொகரம் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னர், புதிய ஆட்களை கைது செய்ய ஆரம்பித்தனர்.
இதனால் நிலை குலைந்த வீரர்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
வீரபாண்டிய
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்பு அவரது சகோதரர் ஊமைத்துரை பாளையங்கோட்டைச் சிறையில்
அடைக்கப்பட்டிருந்தார். கோபால் நாயக்கர் அவரை மீட்பதற்கான திட்டத்தையும், பண உதவிகளையும் செய்து தன்னுடைய
படை வீரன் பொட்டிப் பகடை தலைமையில் முந்நூறு வீரர்களை அனுப்பி, ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோரையும் அவருடன்
இருந்த பதினைந்து வீரர்களையும் மீட்டனர். (1801 பிப்.12) இது வெள்ளையருக்கு கடுங்கோபத்தை
ஏற்படுத்தியது.
கோபால்
நாயக்கரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்ட வெள்ளையர்கள், மற்ற பாளையக்காரர்களிடம் இருந்து
உதவி வராதவாறு பிரித்தனர். ஊமைத்துரையையும், மருது பாண்டியர்களையும் திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற பகுதிக்கு
விரட்டினர். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெரும் படையைத் திரட்டினர். 1801 மார்ச்
17-ஆம் நாள் லெப்டினட் கின்னஸ் தலைமையில் ஆங்கிலப் படை விருப்பாட்சியைத் தாக்கியது.
கோட்டை முழுமையாக முற்றுகை இடப்பட்டது.
சரணடையுமாறு
வெள்ளைக் கும்பினி அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து, 72 வயதான கோபால் நாயக்கர் சுரங்கப்பாதை
வழியாக தன் நம்பிக்கைக்குரிய வீரர்களுடன் தப்பி கருமலைக் காட்டுக்குள் மறைந்து விட்டார்.
கோட்டையில் இருந்த கோபால் நாயக்கர் மனைவி பாப்பம்மாள், ஊனமுற்ற 14 வயது மகன் பொன்னப்ப
நாயக்கர், கோபால்
நாயக்கரின் மூத்த மகன் முத்துவேல் நாயக்கரின் மகள்கள் பொன்னம்மாள், வெள்ளையம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு
திண்டுக்கல் மலைக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
போர்க்களத்தில்
மறைந்து விட்ட கோபால் நாயக்கரின் தலைக்கு 2000 ரூபாயை விலையாக வைத்தனர். (இன்றைக்கு
அதன் மதிப்பு சுமார் 4 கோடி) கருமலைக் குன்றுகளில் தங்கியிருந்த கோபால் நாயக்கரை அவரது
எதரிகள் காட்டிக் கொடுத்தனர். 1801-ம் ஆண்டு மே மாதம் 4ஆம் நாள் கோபால் நாயக்கர் கைது
செய்யப்பட்டார். 4 மாதம் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டார். 1801-ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதம் 21-ம் நாள் விருப்பாட்சிக் கோட்டை முன்பு தூக்கிலிடப்பட்டார். கோட்டை
முற்றிலும் அழிக்கப்பட்டு அங்கு ஆமணக்கு விதை விதைக்கப்பட்டு வருடாவருடம் கும்பினி
அரசுக்கு ஆமணக்கு வருமானம் எவ்வளவு என்று கணக்கு காட்டப்பட்டது.
Note:
விடுதலைப் போராட்டத்தில் திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்
நாயக்கரின் பங்கு விடுதலைக்காக தனித்தனியாகப் போராடிக்கொண்டிருந்த பாளையக்காரர்களை
ஒன்றிணைக்க முயற்சித்தவர்களில் முக்கியமானவர்
விருப்பாச்சி கோபால் நாயக்கர். திப்பு சுல்தான், மருதுபாண்டியர், கன்னட துந்தாசிவாக்கியர், மலபார் கேரளவர்மன் ஆகியோர் இணைந்து
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் திட்டமிட்டனர். இதற்கு தீபகற்பக் கூட்டமைப்பு
என்று பெயர். 1799-ம்
ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதும் ஆங் கிலேய அதிகாரி பானர்மேன், 'இதுபோலத்தான் நீங் களும் தூக்கிலிடப்படுவீர்கள்’ என்று எச்சரிக்கை செய்தபிறகும் எதிர்ப்பைக்
காட்டினார். அதன்பிறகு இவரும் கைது செய்யப்பட்டு திண்டுக்கல்லில் 1801-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். மக்கள்
மறந்துபோன தியாகிகளில் ஒருவர் கோபால் நாயக்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக