திங்கள், 2 டிசம்பர், 2024

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே

மறைந்து போன வரலாறுகளை மீட்டெடுப்பது புத்தகங்களே என்கிறார்-புரட்சியாளர் சேகுவேரா 


நல்ல நூல்களும் சிறந்த ஆசிரியர்களும்‌



நல்ல ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார் -நேரு


முத்து பவளம் சிற்பி வகையான மீன்கள் போன்றவற்றை தன்னகத்தே தாங்கி நிற்கும் சமுத்திரம் போன்றவை புத்தகங்களாகும் என்கிறார் காந்தியடிகள்


கூற்றுக்கிணங்க..


அருமைச் சகோதரர் உடுமலைப்பேட்டை சிவக்குமார் அண்ணன்

அவர்கள்

1.கரைவழி நாடும் நாகரீகமும்(வேளாண்மை)

2.கரைவழி நாடும் நாகரீகமும் (வரலாறு)

3.தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலை போர் ஆகிய புத்தகங்களை எனக்கு கொடுத்திருந்தார்..


படித்ததில் -முதலில் புரிந்து கொண்டது திறந்த வெளியில் காற்றில் கலந்த வரலாறுகளை புத்தகங்களில் ஏற்றி ஆவணங்களாக வெளியிடுவது என்பது எவ்வளவு உழைப்பு

எவ்வளவு களப்பணி என்பதை ஆழமாய் அறிய நேர்ந்தேன்..

மேலும் புத்தக வெளியீட்டு விழா என்று ஏதாவது செய்தி வந்தால் அதை சாதாரணமாக கடந்து போனதுண்டு ஆனால் இந்த புத்தகங்களையெல்லாம் படிக்கின்ற போது 

அந்த வெளியீட்டு விழாவிற்கு வருமுன் அந்த புத்தகத்திற்கான உழைப்பை எண்ணி வியக்கின்றேன்.


மேலும் கரைவழி நாடும் நாகரீகமும் என்ற நூலில் குறிப்பிட்ட அந்த கோவில்களுக்கு சென்றிருக்கின்றேன் அதைப்பற்றிய வரலாறுகளை ஆவணமாய் படிக்கின்ற போது கடவுகளும் கோயில்களும் வரலாறுகளை தன்னகத்தே எவ்வளவு அழகாக தாங்கி இருக்கின்றது என்பதை அறிந்து வியந்து போனேன்..

மேலும் ..

வேளாண்மை

நெல் விவசாயம்,

நெற்கூடு,

போக்கியம் கந்தாயம்,

விவசாய தெய்வங்கள் 

விவசாய விழாக்கள்

கல்வெட்டு விவரங்கள்

கோயில் தல வரலாறுகளையெல்லாம் படிக்கின்ற போது அந்த நிகழ்வுகளுக்குள்ளாக நம்மை அழைத்துச்சென்ற உணர்வு ஏற்படுகின்றன.


தென் கொங்கு நாட்டின் முதல் விடுதலைப்போர் நூல் அந்த வரலாற்று காலத்திற்கே அழைத்துச்செல்லும் வண்ணம் எழுத்து வடிவமைப்பு அழகிய சொல்லாடல்களும் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு 


ஒவ்வொரு புத்தகங்களும் 


ஒவ்வொரு பக்கத்தை திரும்பும் போதும் 


ஒரு ஆகச் சிறந்த வரலாறுகள் அமைந்திருப்பது உண்மையில் 

அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய

நூல்களாகும்..



மேலும் இதற்காக உழைப்பை நல்கிய 


உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ பொறுப்பாளர்கள் அனைவரும் வணக்கத்திற்கு உரியவர்களே..


அருமைச்

சகோதரர்

சிவக்குமார் அவரின் வாயிலாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதுடன்

எதிர்காலத்தில் இன்னும் பல சிறந்த படைப்புகள் வர வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்..


என....

அனிதா ஜெயராமன்.📗✒️✒️✒️🎙️🎙️📡📡📡🌱🌳🌴🏘️🏡🏠🎧✈️



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக