வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?
sivakumarshyam
புதன், 17 டிசம்பர், 2025
வீட்டு கடன் திட்டத்தில் முன் இஎம்ஐ முறை சிறந்ததா?
ஞாயிறு, 14 டிசம்பர், 2025
இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...
இன்றைய கல்லூரி நண்பர்கள் சந்திப்பு 30 வருடங்கள் கடந்து ...
இன்று காலை கல்லூரி நண்பர்கள் சந்திப்பு திருமூர்த்தி அணை கால்வாய் கரையில் கல்லூரி நண்பர் குருவாயூரப்பன் பண்ணை தோட்டத்தில் அருமையான சந்திப்பு ....அருமையான தோட்டக்கலை நிபுணர் ..பண்ணை தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து . தற்பொழுது உள்ள விவசாய நடைமுறைகளை கொண்டு தொலைநோக்கு திட்டங்களுடன் விவசாய துறையில் கடந்த 25 வருடங்களுக்கு மேல் கால்பதித்து வளர்ந்து வருபவர் ..அவருடன் கலந்துரையாடியது மிக்க மகிழ்ச்சி ...
கல்லூரி நண்பர்கள் மலரும் நினைவுகளாக மலர்ந்தது ..பேராசிரியர் வசந்தகுமார் பேசியது மிக்க மகிழ்ச்சி ..இன்றைய இளைய தலைமுறையினர் கல்வியில் முன்னோக்கு திட்டங்களுடன் படித்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அவர்களே தேடிக்கொள்கின்றனர் ..அவர்களுக்கு நண்பர்கள் போல சில ஆலோசனைகளை மட்டும் நம் கூறினாலே அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர் கூறியது மிக்க மகிழ்ச்சி ..அதே போல் பேராசிரியர் மனோகரன் அவர்களும் அதே போல் முன்மொழிந்தார் ...நன்றிகள் பல ...
மணிகண்டன் ....திருப்பூர் என்றாலே இவரின் ஹோம் தியேட்டர் வீடு தான் ஞாபகம் வரும் ..இவரின் பணி இன்று வீடு கட்டும்பொழுதே சமையல் அறை புத்தக அறை போன்று ஹோம் தியேட்டர் க்கு அறை இந்த காலகட்டத்தில் வீட்டில் தேவையான பொழுதுபோக்கு அறையாக வாழ்வில் இடம்பெற்று விட்டது ..இவரின் பணியின் மூலம் பல வாடிக்கையாளர்களுக்கு பணியாற்றி வருகிறார் .இன்றய தொழில்நுட்பம் குறித்து தகவல்களை பரிமாறிக்கொண்டார் ..நன்றிகள் .
தொடரும் கல்லூரி நண்பர்களின் சந்திப்பு பதிவு .....நாளை ..
செவ்வாய், 9 டிசம்பர், 2025
Periods நேரத்தில் Napkin பயன்
Periods நேரத்தில் Napkin பயன்படுத்துவதில் தொடைகளுக்கு நடுவே எரிச்சல், இரவு நேரங்களில் PAD விலகுவதால் ஆடைகளில் கறை , கூடுதலாக கால் வலி என படுத்தி எடுத்த நேரத்தில் இந்த Period Panty சொர்க்கமாக இருக்கிறது.
kin வைக்க அவசியமில்லை. Light Weight ஆக அதே சமயம் நடுவில் இருக்கும் பஞ்சு Soft ஆக இருப்பதால் Napkin போன்ற உணர்வே தோன்றவில்லை. இரவு நேரங்களில் உடைகளில் கறையும் படிவதில்லை
வியாழன், 4 டிசம்பர், 2025
வெங்கிடுசாமி பெரியப்பா ..அருமையான சொந்தம் பந்தமும் ....இன்றும் ..
வெங்கிடுசாமி பெரியப்பா ..அருமையான சொந்தம் பந்தமும் ....இன்றும் ..
என் தாய் தந்தையின் உற்ற நண்பர் சொந்தமும் ...எங்கள் தாய் தந்தை திருமணம் தளி ஜல்லிபட்டியில் எங்கள் அம்மாவின் வீட்டில் நடந்தது ..அப்பா எரிசனம்பட்டி பில்லவா நாயக்கன் சாலையூர் எனது அப்பா சிறுவயதில் தாய்தந்தை இழந்து ..பெரியகோட்டையில் எங்கள் அத்தை வீட்டில் வளர்ந்தார் ..திருமணத்திற்கு தளி ஜல்லிபட்டியில் மாப்பிள்ளை வீடு என்று வெங்கிடுசாமி பெரியப்பா அவர்களின் வீட்டில் இருந்து தான் அழைத்து வந்தார்கள் ..எங்கள் அம்மா .எங்கள் பெரியம்மா அவர்களின் குடும்ப சொந்தங்களாக செல்ல பிள்ளையாக சிறு வயது முதல் வளர்ந்தார்கள் ..எப்போதும் இவரை சந்திக்க சென்றாலும் ..அம்மா .மற்றும் உடன் பிறந்த சொந்தங்களை கேட்டு நலம் விசாரித்து கொண்டு இருப்பார்கள் ....
இது போன்ற சொந்தங்கள் அமைவது வரம் .......இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியப்பா அவர்களுக்கு ....
என்றும் அன்புடன் ..உடுமலை சிவக்குமார்
கார்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர்.
கார்த்திகை மழை கண்டு கண் விழிக்கும் பெருமைமிக்கது செங்காந்தள் மலர்.
இது ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் உள்ளது. இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மழைக் காலத்தில் அதிகமாகக் காணக் கிடைக்கும் கார்த்திகை பூ செங்காந்தள். இம்மலர் குறித்து தமிழ் இலக்கியங்கள் சிறப்பாகப் பேசுகின்றன.
தமிழகத்தின் மாநில மலராகவும், தமிழ் கடவுள் முருகபெருமான் பிறந்த மாதத்தில் இந்த மலர் பூப்பதனால் முருகக் கடவுளுக்குப் பிடித்த மலர் என்ற சிறப்பினையும்
இது பெறுகிறது. தமிழ் நிலத்தையும், தமிழர்தம் வீரத்தையும் குறியீடாகக் கொள்ளப்படுகின்ற
கார்த்திகை பூக்களை போருக்குச் செல்லும்போது பண்டைய தமிழ் மன்னர்கள் மாலையாக அணிந்து கொண்டார்கள் என்கிறது சங்க நூல்கள். சிலப்பதிகாரத்தில் இந்தப் பூவின் இதழ்களை பெண்களின் அழகிய விரல்களோடு ஒப்புமைப்படுத்தி சொல்லியிருப்பார்கள்.
தீச்சுடர் போல் காட்சி அளிக்கும் செங்காந்தள்
மலர் செடியின் வேர் பகுதியை கண் வலி கிழங்கு, கலப்பை, வெண்தோன்றி, கார்த்திகை கிழங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர் செடியின் அனைத்து பாகங்களிலும் ‘கோல்ச்சிசின்' என்ற அல்கலாய்டுகள் அதிகமாகக் காணப்படுகிறது.
இதன் வேர் நச்சுத்தன்மை கொண்டது. இதன் இலை மற்றும் தண்டு நம் மேல் பட்டால் சருமத்தில் அரிப்பு உண்டாகும். இந்தக் கிழங்கில் உள்ள ‘கோல்ச்சிசினும்', 'சூப்பர்பைனும்' மருத்துவக் கூறுகளாகும்.
இந்தச் செடியின் கிழங்கில் இருந்து புதிய கொடிகள் கிளை விட்டுப் படரும். இலைகளின் நுனி நீண்டும், சுருட்டும் பற்று கம்பிகள் போல அருகில் உள்ள மரம், செடி போன்றவற்றை பற்றிப் பிடித்து வளரக்கூடியது. இதன் பூக்கள் பெரியவை. முதலில் பச்சை நிறத்துடனும், பிறகு வெண்மை கலந்த மஞ்சள், பிறகு மஞ்சள், செம் மஞ்சள், சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு என நிறங்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் வெண்காந்தள், செங்காந்தள் என்று இரு வேறு மலர்களாக வர்ணிப்பார்கள்.
திங்கள், 24 நவம்பர், 2025
குழந்தைகள் சுவற்றில் வரையும் வண்ண வண்ண ஓவியங்கள் ...
குழந்தைகள் சுவற்றில் வரையும் வண்ண வண்ண ஓவியங்கள் ...
நேற்று நண்பரின் வீட்டுக்கு ஒரு நிகழ்வுக்காக சென்று இருந்தேன் ..நம்மை சுற்றி இருக்கும் பார்வையில் காண. சிறு வயதில் செய்த சில சில குறும்புகளுடன் வீட்டின் சுவற்றில் அழகான வண்ண வண்ண ஓவியங்கள் மனதில் நிழலாடிய வண்ண வண்ண ஓவியங்கள் மனதில் ......
- படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன்: குழந்தைகள் சுவர்களில் வரையும் ஓவியங்கள் அவர்களின் கற்பனைத்திறனின் வெளிப்பாடாக அமைகின்றன. அவர்கள் வரையும் படங்கள் யதார்த்தமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை; மாறாக, அவை அவர்களின் மனதில் உருவான கற்பனைகளின் பிரதிபலிப்பாகும்.
- பல்வேறு கருப்பொருள்கள்: குழந்தைகள் பொதுவாக விலங்குகள், பூக்கள், வீடுகள், சூரியன் மற்றும் மேகங்கள் போன்ற இயற்கை காட்சிகளை வரைகின்றனர். மேலும், அவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பலவிதமான உருவங்களையும், வடிவங்களையும் ஓவியங்களாக உருவாக்குகிறார்கள்.
- கலை வளர்ச்சி: சுவர்களில் ஓவியம் வரைவது குழந்தைகளின் கலை வளர்ச்சிக்கு ஒரு சிறந்த வழியாகும். இது அவர்களுக்கு பல்வேறு வண்ணங்கள், கோடுகள் மற்றும் வடிவங்களைப் பயன்படுத்த உதவுகிறது.
- கவனிப்பு: சில சமயங்களில், குழந்தைகள் தங்கள் ஓவியங்களை வரைவதற்கு மெல்லிய கோடுகளைப் பயன்படுத்துவார்கள். இது அவர்களுக்கு வரையும்போது கோடுகளை சரியாக அமைக்கவும், தேவைப்பட்டால் திருத்தங்கள் செய்யவும் உதவுகிறது.
- சுவரில் வரைவதன் முக்கியத்துவம்: இது குழந்தைகளின் படைப்பாற்றலை ஊக்குவிப்பதுடன், அவர்கள் சுவரில் வரைவதைத் தடுக்காமல், அவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான தனி இடத்தை வழங்குவது மிகவும் முக்கியமானது. இது அவர்களின் ஆர்வத்தைத் தூண்டி, படைப்பாற்றலை மேம்படுத்த உதவுகிறது. ......
எண்ணற்ற வெள்ளைத் தாள்கள் கலர் பென்சில்கள் உங்கள் குழந்தையின் முன் இருக்கட்டும். குழந்தை முன் ஏதாவது வரையுங்கள் . இது என்ன என்று கேளுங்கள். எதைச் சொன்னாலும் கை தட்டுங்கள். இது தொடரந்தால் குழந்தை கிறுக்க ஆரம்பித்து விடும்.
6 வயது ஆனவுடன் ஓவியப் பள்ளியில் சனி ஞாயிறு வகுப்புகளில் சேருங்கள். எண்ணற்ற புத்தகங்கள் வாங்கிக் கொடுங்கள். ஓவியம் பழகிவிடும்.
எத்தனை பேருக்கு தெரியும் நம் தாத்தா ,பாட்டிகள் தன் பேரக்குழந்தைகள் வரையும் ஓவியங்கள் தன் குழந்தை பருவ வெளிப்பாடுகளே .....என்று ......
என்றும் அன்புடன் சிவக்குமார் ....
சனி, 22 நவம்பர், 2025
2009ல் அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது.
அப் (Up) எனும் ஆங்கில திரைப்படம் வந்தது...






