புதன், 26 மார்ச், 2025

உடுமலை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...

உடுமலை கல்லூரி  முதல்வர் ஜெயக்குமார் அவர்களின் வழிகாட்டி ...


நேற்று எங்கள் அமைப்பின் சார்பில் நேற்று கல்லூரியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்விக்காகவும் ,வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுக்காக கையெழுத்து ஆகியது .மிக்க மகிழ்ச்சி ..நேற்று முதல்வருடன் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது அவரின் இந்த துறைக்கு வந்ததற்கு அவரின் வழிகாட்டி நம் சமுதாய கல்வி வளர்ச்சிக்கு காரணமான கரப்பாடி பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்லவேண்டும் என்றார் .அவர் சிறு வயதில் தன் தந்தையுடன் பூபாளம் முருகேசபாண்டியன் அவர்களை சந்திக்க என் தந்தையுடன் செல்லும் பொழுது தன் தனி தன்மையை தமிழ் துறையில் சிறந்து விளங்குவார் இத்துறையை படிக்கவேண்டும் வழிகாட்டியவர் அவரின் வழிகாட்டுதலில் இந்த முதல்வர் பணிக்கு வந்துள்ளேன் என்று கூறியது எனக்கு மாற்றட்ட மகிழ்ச்சியாக இருந்தது ..முதல்வரின் ஊரு கரப்பாடி அருகே இருக்கும் கொல்லப்பட்டி காளியபுரம் எனும் கிராமம் .பள்ளிப்படிப்பு  காளியபுரம் ,கல்லூரி படிப்பு கோவை சி பி எம் கல்லூரி யில் முடித்து .பேராசிரியராக ஹிந்துஸ்தான் கல்லூரி பணிபுரிந்து தற்பொழுது உடுமலை வித்யா சாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது என்றார் .அதுவும் உங்களின் உடுமலை வரலாறு அமைப்புடன் கல்வி மற்றும் வரலாறு தொல்லியியல் சார்ந்த நிகழ்வுகளை நடத்த வாய்ப்பு கிடைத்து எங்கள் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பு என்று கூறி நன்றி தெரிவித்தார் ..


குறிப்பு :நம் கம்பள சமுதாயத்தில் அருமையான கல்வியாளர் கவிஞர் பூபாளம் முருகேச பாண்டியன் அய்யா அவர்கள்   பல தரப்பட்ட மக்களுக்கு வழிகாட்டியாக இருந்தது பெருமையே .வாழ்த்துக்கள் ...என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 




வெள்ளி, 21 மார்ச், 2025

கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா?

 கேள்வி : வீட்டுமனை வாங்குவதற்கு வங்கிக்கடன் கிடைக்குமா? 

என் பதில் : 📚📚✍️✍️

வீட்டு மனை வாங்குவதற்கு வங்கி கடன் கிடைக்கும். அதில் சில பல அம்சங்கள் உள்ளன.

அது வீட்டு மனையாக இருக்க வேண்டும்.

விவசாய நிலமாக இருக்க கூடாது.

ஏதேனும் நகராட்சி, மாநகராட்சி போன்றவற்றின் கட்டுக்குள் வர வேண்டும்.

பொதுவாக, மனையின் மதிப்பில், 70% வரை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அரசாங்கத்தின் வரி விலக்கு கிடைக்காது.

இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு இது கிடையாது.

வீட்டுக் கடன் போல், நீண்ட காலம் காலவரையறை வழங்கப்படாது. அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை இருக்கலாம். இதற்கு மாறாக, வீட்டுக்கடன் 30 ஆண்டுகள் வரை கூட இருக்கலாம்.

வீட்டு மனையுடன் வீடு கட்டுவதற்கான கடன் வாங்கும் போது, குறிப்பிட்ட ஆண்டுகளுக்குள்,உதாரணமாக 2 வருடங்கள், வீடு கட்டி முடித்திருக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்காவிடில், அது வீட்டுக் கடனாக கருதப்படாமல், வட்டி விகிதம் அதிகரிக்கப்படும்.

வீட்டு மனைக் கடனுக்கு காலவரையறை குறைவாகையால், மாதாந்திர தவணை அதிகமாக இருக்கும்.

வீட்டுக் கடனை விட, வீட்டு மனைக் கடனுக்கு வட்டி விகிதம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

குறிப்பு : இடத்தின் மதிப்பு என்றும் இறங்காது ...அதன் மதிப்பு நீண்டகாலங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ..உடனே பணமாக மாற்றமுடியாது ..

நன்றி ..🏠

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)

Question: Is a bank loan available to buy a Site House ? My answer: 📚📚✍️✍️

 Question: Is a bank loan available to buy a Site House ?

My answer: 📚📚✍️✍️

A bank loan is available to buy a  site house. There are several features in it.

It must be a house.

It must not be agricultural land.

It must come under the control of any municipality, corporation, etc.

Generally, a loan is given only up to 70% of the value of the land.

There is no government tax exemption.

Must be a citizen of India.

This is not the case for overseas Indians.

Unlike a home loan, a long term is not given. It can be up to a maximum of 15 years. In contrast, a home loan can be up to 30 years.

When taking a loan to build a house with a house, the house must be completed within a certain number of years, for example 2 years. If the construction is not completed, it will not be considered a home loan and the interest rate will be increased.

Since the term of a home loan is short, the monthly installment will be higher.

The interest rate for a home loan is slightly higher than a home loan.

Note: The value of the land never depreciates...its value is useful for the long term..it cannot be converted into cash immediately..

Thank you..🏠

Sivakumar.V.K

(Home Loans,Home Loans To NRIs)

புதன், 19 மார்ச், 2025

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )

 பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம் , தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில் )









புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!








(மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம்.


 (மார்ச் 20) சர்வதேச கதை சொல்லல் தினம். கதை சொல்வதன் அவசியத்தை நாம் எல்லோருமே அறிந்ததே. அது ஒரு மாயம் உலகம். அது அடங்காத அனுபவத்தை தரவல்லது. சர்வதேச கதை சொல்லல் தினமான மார்ச் 20 அன்று குழந்தைகளுடன் அமர்ந்து எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் கதைச் சொல்லி மகிழ்விப்போம். அது பள்ளியோ வீடு வீதியோ பூங்கவோ எங்கே குழந்தைகளைப் பார்த்தாலும் நாளை கதை சொல்வோம். நாளை தொடங்கும் / தொடரும் கதை சொல்லல் தொடர்கதையாட்டும். Happy Story Telling.

என் ஷியாம் செல்ல குட்டி ..தூங்குவதற்கு முன் ...ஷ்யாமுடன் பிறந்த 2 வருடங்களிருந்து கவனிக்கும்கேட்க்கும் திறன் எல்லா குழந்தைகளுக்கு வருவதுபோல் ...கூரிய திறன் மூலம் நான் கதை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன் ...அவனுக்கு பிடித்த ராஜா ராணி ,அம்புலிமாமா கதைகள் ..பாட்டி வடை சுட்ட கதைகள் இரவு தூங்காவதற்கு முன் சொல்லிக்கொண்டு பழக்கப்படுத்தி இருந்தேன் ...பள்ளியில் சேர்ந்த வுடன் ..இன்று வகுப்பில் நடந்த நிகழ்வுகள் ..ஆசிரியர் சொல்லி கொடுத்தா கதைகள் ...சகா நண்பர்கள் சொன்ன செய்திகள் ...அவருடைய பாணியில் பேசி தூங்கவைப்பேன் ..அதுவும் அவருக்கு வளர்ந்த 6 வயது முடிய கதைகள் கேட்டு என் தோளில் கட்டிபிடித்தி தூங்கியவன் என் செல்ல ஷியாம் குட்டி ...
கனவு.........(ஷ்யாம் அப்பா ....)
கண்ணு தூங்கிட்டியாப்பா.....
இன்னும் இல்லப்பா... தூக்கம் கண்ணை அசத்துது..
.
அப்பா .தூங்குனப்புறம் என்ன பா நடக்கும்..''
நீ கண்ணை மூடுவே..வெளியிலே நடக்குற எதுவும் தெரியாது..கொஞ்ச நேரத்திலே நல்லா தூங்கிடுவே.
ஆனா நீ காலையிலே இருந்து பார்த்தது நெனச்சது, பேசினது. விளையாடினது, சண்டை போட்டது எல்லாம் தூக்கத்திலே .உனக்குள்ளே கனவிலே வந்து போகும்..
அப்ப கண்ணுக்குள்ளே பட்டாம் பூச்சி பறக்குமா?
அப்புடித்தான்
அது எப்புடி.. ஒரு நாள் பூரா நடந்தது முழுசும் ஒரு ராத்திரி கனவுல வருமா?
ஆமாம் கண்ணு வரும்... அதான் மூளை பகல்லே சிந்திக்கிற தைவிட ராத்திரிலேஎதான் அதிகமா வேலை செய்யுதாம்..
எதுக்கு அந்த வேலை ராத்திரிலே
அப்பத்தான் நீ நிம்மதியா பழச தேவையில்லாததை மறக்க முடியும்..
எதுக்கு பழச மறக்கணும்
பழச மறந்தா தான் புதுசு புதுசா நெறைய விஷயம் உள்ளே போகும்.
சரி சரி இப்ப தூங்கு..
, அப்பா...அப்பா இன்னும் ஒரேஒரு விஷயம்.
என்ன சொல்லு சாமி..
இப்படி தெனம் கனவு காணுறோம் ..ஆனா மனசிலே ஒண்ணுமே நிக்கலியே..
ஆமாம் சாமி.. எல்லா கனவும் 95% கனவு கண்ணு முழ்ச்சி 30 நிமிடத்திலே மறந்துடும்.
ஏ அப்பா அப்புடி..
அதையே நெனச்சுகிட்டு இருந்தா உடலுக்கு குழப்பம் வந்துடும்லே..அதான்..
சரி கண்ணு தூங்குடா.
கதை கேட்டு தூங்கிய காலமெல்லாம் ...வாழ்வின் வழியை ..கனவை ..எதிர்காலத்தில் கதைகள் சொல்லி தூங்கவைப்போமா .என்று தெரியவில்லை ...ஷியாம் பிறந்த உடுமலை லட்சுமி மருத்துவமனை ..அவன் வளர்ந்த கோவை வடவள்ளி ....என் ஷ்யாமின் நினைவுகள் என்றும் மறைவது இல்லை ...என்றும் அன்புடன் சிவக்குமார்

சனி, 15 மார்ச், 2025

 தம்பி .நேற்று பெரியப்பா வின் புகைப்படம் பற்றி பெருமைகளை பகிருங்கள் என்று கூறி இருந்தீர்கள் ..அருமை ..வாழ்த்துக்கள் ..எனக்கு நேரம் கிடைக்கும்பொழுது பகிர்கிறேன் ..அதற்கு முன் நீங்கள் அவரிடம் நேர்காணல் போன்று இயல்பாக பேசுங்கள் 

பெரிய அப்பா ..தோட்ட வேலை ..உழவு சம்பந்தப்பட்ட செய்திகளை  பேசும்பொழுது  அவரிடம் கேட்கவேண்டும் .(இயல்பாக பேசவேண்டும் ,செய்தியாக கேட்க கூடாது .நேரடியாக கேட்கும் பொழுது சொல்ல மாட்டார்கள் .இது எல்லாம் எதற்கு என்று விரும்ப மாட்டார்கள் .உழவு என்ன என்ன வகை உள்ளது .மண் னின் தன்மை  செம்மண்ணில் உழுவதற்கும் கரிசல் மண்ணின் உழுவுதற்கும் வேறுபாடு உள்ளது . .வெள்ளாமைக்கு உகந்த காலம் உள்ளது ..

உழும் மாடுகள் பற்றி அவைகளின் தன்மை ..அதன் வகைகளில் பற்றி  கேளுங்கள் நோட்டில் எழுதி வையுங்கள் அதை மொபைலில் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து கொள்ளுங்கள் ..நேரம் கிடைக்கும் பதிவிடலாம் .புகைப்படம்  எடுக்கும்பொழுது இயல்பாக எடுக்கவேண்டும் போட்டோக்கு போஸ் கொடுத்து எடுக்க கூடாது . 


நீங்களே நேர்காணல் செய்து பதிவிடலாம் ..உங்களுக்கும் தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு . நேர்காணல் செய்து தட்டச்சு செய்து எனக்கு அனுப்புங்கள் ஏதாவது திருத்தம் செய்து அனுப்புகிறேன் 


நம்மை சுற்றி ஏராளமான தகவல் கிடைக்கும் தெரிந்து கொள்ள வாய்ப்பு .

இது எல்லாம் நமக்கு கிடைக்கும் நேர மேலாண்மை யில் இது போன்ற தகவலை பதிவிடலாம் ..





வெள்ளி, 14 மார்ச், 2025

என் பார்வையில் .. தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்


 என் பார்வையில் ..

தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட் 

, நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. அரசு நடத்தும் மதுபானக் கழகமான டாஸ்மாக்-ல் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்காக அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்கியுள்ளது.


முக்கிய சிறப்பம்சங்கள்:


-வீட்டுவசதித் திட்டம்: கலைஞர் கனவு இல்லம் வீட்டுவசதித் திட்டத்திற்கு ₹3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, இது மாநிலம் முழுவதும் உள்ள வறிய குடிமக்களுக்கு ஒரு லட்சம் புதிய வீடுகளை வழங்கும் ¹.

-கல்வி கடன்கள்: ஒரு லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் கல்விக் கடன்களுக்கு ₹2,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது ¹.

-குளோபல் சிட்டி: சென்னைக்கு அருகில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு உலகளாவிய நகரம் உருவாக்கப்படும், உள்கட்டமைப்பை மேம்படுத்தி வீட்டு வசதிகள், அகலமான சாலைகள் மற்றும் பூங்காக்களை வழங்கும் ¹.

-பெண்கள் நலன்: மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு ₹3,600 கோடியும், மகளிர் உரிமை தோகை திட்டத்திற்கு ₹13,027 கோடியும், புதுமை பெண் திட்டத்திற்கு ₹420 கோடியும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.

-உள்கட்டமைப்பு மேம்பாடு: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு பட்ஜெட் முன்னுரிமை அளிக்கிறது.


சிவக்குமார் V K 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை .



என் பார்வையில் ... தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட்,

 


என் பார்வையில் ...

தமிழ்நாட்டின் 2025-26 பட்ஜெட், 

நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கல்விக்கு முன்னுரிமை அளித்து, பெண்கள் நலன் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க நிதியை ஒதுக்குகிறது. புதிய விமான நிலையம் மற்றும் செயற்கைக்கோள் நகரம் உட்பட பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணம் மற்றும் நகர்ப்புற திட்டங்கள் போன்ற முதன்மைத் திட்டங்களில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது.


முக்கிய சிறப்பம்சங்கள்:


- நலத்திட்டங்கள்: அரசு நடத்தும் மதுபான நிறுவனமான டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், பெண்கள் நலன் மற்றும் மாணவர் முயற்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி.

-உள்கட்டமைப்பு மேம்பாடு: பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற திட்டங்கள், வீட்டுவசதி மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளித்தல்.

-கல்வி*: தேசிய கல்விக் கொள்கை (NEP) மீதான கருத்து வேறுபாடுகள் காரணமாக தொழிற்சங்க நிதி வெட்டுக்கள் இருந்தபோதிலும், கல்விக்கான தொடர்ச்சியான ஆதரவு.

-பொருளாதார வளர்ச்சி: உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.


பட்ஜெட் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகள் அரசாங்க ஊழல்களையும், தேசிய கல்விக் கொள்கையை மாநிலம் நிராகரித்ததையும் விமர்சிக்கின்றன. இருப்பினும், திமுக அரசு அதன் நலன் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு உறுதியுடன் உள்ளது


சிவக்குமார் .V K 

நிதி ஆலோசகர் 

உடுமலைப்பேட்டை .

ஞாயிறு, 9 மார்ச், 2025

திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை















 திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை
இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கிநீர்மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,

வெள்ளி, 7 மார்ச், 2025

மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰 நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

 மகளிர் தினம்....மார்ச் 8🥰மகளிர் தின வாழ்த்துக்கள் 🥰


நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...🌷🌷🌷🌷🌷

மகளிர் தினம்
அதிகாலை எழுந்து
வீட்டு வேலைகளை முடித்து
பிள்ளைகளையும் கணவரையும்
கவனித்து அனுப்பி
மாமியாருக்கும் மாமனாருக்கும்
சமைத்து வைத்து
அலுவலகம் சென்று
நாள் முழுவதும்
உழைத்து களைத்து
வீடு திரும்பியதும்
மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்கு
மறுமொழி கூறாமல் மௌனித்து
மாமனாரின் அதிகாரங்களுக்கு
அடிபணிந்து அடங்கி
கணவரிடம் வேண்டி கெஞ்சி
அனுமதி பெற்று
சமைத்து முடித்து கிளம்பி போகிறாள்
மகளிர் தின பட்டிமன்றத்தில்
மேடை ஏறி பெண் விடுதலை
பற்றி முழக்கமிட .........

நம் கம்பள சமுதாயத்தில் பெண்கள் ...

திருமதி சிவரஞ்சனி -வழக்கறிஞர் -கோவை 

கல்வியில் முதுகலை மற்றும் வழக்கறிஞர் படிப்பு ..நம் சமுதாயத்தின் வளரும் வழக்கறிஞர் ..இவரிடம் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வளர்ந்து வருபவர் ..தன் தந்தையின் கனவை நிறைவேற்றியவர் ..கனவு நிறைவேறும்போது ..அருகில் தந்தை இல்லை ..அவரின் ஆத்ம ,ஆசியும் எப்பொழுதும் உண்டு ..கம்பள விருட்சத்தின் முதல் உறுப்பினர் ...செயல் துணைத்தலைவர் ..பொறுப்பாக தன பணியை செவ்வனே செய்து வருபவர் .இவரின் அரசியல் குரு ..வைகோ அவர்கள் ..ம தி மு கா ..கோவை வழக்கறிஞர் பெண்கள் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளது எங்களுக்கு பெருமையே.. 

திருமதி .சுமதி மோகன் -கடவூர் இளவரசி 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நமது சமுதாயத்தின் கலாச்சாரம் ,பண்பாடு ,கல்வி ,தொழில் முன்னேற்ற கருத்துக்கள் ..வாழக்கையில் வளர்வதற்கான சிந்தனைகள் ,ஆலோசனைகள் ,வழங்கி நம் சமுதாய மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளார் ...கம்பள விருட்சம் அறக்கட்டளையில் உறுப்பினர் ,கௌரவ ஆலோசகராக உள்ளார் . ..இவரின் இன்னும் வரலாற்று சிறப்பு மிக்க தகவல்களுடன் சில தினங்களில் பகிர்கிறேன் .

திருமதி .நீலவேணி ரமேஷ் -பேராசிரியர் -உடுமலை 
கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..இவர் GVG பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் ..இவர் கம்பள சமுதாய  தளத்தில் அதிகம் வருவதில்லை..கல்லூரி சேருவதற்கு செல்லும்பொழுது அங்கு சேருவதற்கான தன்னாலான உதவிகள் செய்து தருவார் ..கல்வி சம்பந்தமான மேற்படிப்பு தகவல்களை தந்து நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் செய்து தருவார் ..
 
திருமதி .சத்யா பரமசிவம்  ...-தனியார் துறை -கோவை 
கல்வியில் ..முதுகலை பட்டம் பெற்றவர் ..நல்ல திறமைசாலியான ,தைரியம் மிக்க பெண்மணி ...கடந்தகாலங்களில் திருமணத்திற்கு பின் ...பெண் தொழில்முனைவோராக இருந்தவர் ..இமயமலை அளவுக்கு வாழ்க்கையில் உயர்நதவர் .. தனியார் நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து வருகிறார் ..இவரிடம் தையரியத்தையும் ,விடாமுயற்சியும் கற்று கொள்ளலாம் .

திருமதி .காயத்திரி செந்தில்குமார் -விவசாயம் -அடிவள்ளி 

கல்வியில் முதுகலை பட்டம் பெற்றவர் ..பட்டப்படிப்பு பெற்றதும் பணிக்கு செல்லாமல் ..விவசாயம் என் உயிர் மூச்சு ..என்று தற்பொழுது புது புது விவசாய தொழில்நுணுக்கங்களை கற்று ..விவசாயத்தில் பசுமை புரட்சியை செய்துகொண்டுள்ளார் ...தற்காலத்தில் விவசாயத்தை மறக்கும் சூழ்நிலையில் தன் கடுமையான உழைப்பின் மூலம் வளர்ந்து வருவது எங்களுக்கு பெருமை ..இவரும் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் புது உறுப்பினர் ..

திருமதி .செல்வி விஜயகுமார் -தொழிலதிபர் -உடுமலை 

கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..இவர் சமையல் எரிவாயு நிறுவன முகவர்  உடுமலைப் பகுதியில் சமையல் எரிவாயு வினியாகஸ்தர் ..தன் கடுமையான உழைப்பின் மூலம் தன் கணவருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பெண்தொழில்முனைவோர் ..இவரிடம் சுறுசுறுப்பும் ,விடாமுயற்சியையும் கற்று கொள்ளலாம் ..

தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் -Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் )-உடுமலை ஜிலேபி நாயக்கன் பாளையம் ..
தேனீ என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சுறுசுறுப்பு ...வீரம் விளைந்த மண் ...வீரம் மிகுந்து ஊரின் அருகில் இருக்கும் தம்மநாயக்கன்பட்டி யில் இருந்து ..ஜில்லேப்பா நாயக்கன்பாளையம் ஊருக்கு மருமகளாக வந்து நம் கம்பளசமுதாயத்தில் எரிசனம்பட்டியில் சொந்தமாக தையல் கூடம் அமைத்து ..பயற்சி அளித்துக்கொண்டு சிறந்த சிறு பெண் தொழில் முனைவோராகம் ,அரசு ஊரக வளர்ச்சி துரையின் கீழ் இயங்கும்குழுவில்  நம் ராஜகம்பள சமுதாயத்தில் ஒரு தங்கபெண்மணி திருமதி .செல்வராணி செந்தில்குமார் - Cluster facilitater   (தொகுப்பு வழி நடத்துனர் ) அவர்களை சந்தித்தேன் ..நம்ம மாப்பிளை கார்த்தி SR அறிமுகம்  செய்துவைத்தார் ..நம் சமுதாயத்தில் ஆரவாரம் இன்றி  அமைதியாக .இத்துறையில் எரிசனம்பட்டியில் சுற்றி இருக்கும் பொது மக்களுக்கு  இத்துறையை கொண்டு சேவை செய்து வருகிறார்..கம்பள விருட்சத்தின் உறுப்பினர் ..நம் சமுதாய சொந்தங்களுக்கு தொழில் முனைவு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் .. 

திருமதி .கார்த்திகேயனி முருகராஜ் -தொழில்முனைவோர் -பொம்மு நகலகம் .வழக்கறிஞர் அலுவுலகம் -திருப்பூர் 

தன் குழந்தைகளுக்கு ஒரு முன்னேற ஒரு முன்னோடியாக வழிகாட்டியாக இருப்பது ..இப்போது இருக்கும் காலகட்டத்தில் ...சமுதாயத்தில் ..பெரியவர்களை மதிப்பதும் ..நண்பர்களின் சிறந்த நட்புகளை பெறுவதும் ..வாழ்வியலுக்கு சரியான புரிதல்கள் இருக்கும் ..அதனால் தான் ..தன் குழந்தைச்செல்வங்கள் ..கார்த்திகேயனி முருகராஜ் அவர்கள்  ,தன் ..அலுவுலகம் ..வீட்டுப்பொறுப்புகள் கவனித்து கொள்கிறார்  ,ஒரு மகள் பல் மருத்துவர் ,இரண்டாவது மகள் பள்ளிப்படிப்பு முடித்து தன் தொழில் வாரிசாக வழக்கறிஞர் தொழில் படிப்பு ,தன தங்கையின் மகள் .என்ஜினீயர் ..கல்வி தகுதியின் மூலம் ..நம் கம்பள சமுதாயத்தில் ஒரு முன்னோடியாக வலம் வரமுடிகிறது ...நம் பெற்றோர்கள் ,முப்பாட்டன்கள் எல்லோரும் கூலி வேலை செய்து ..கல்வி என்ற சொத்தை கற்றுக்கொடுத்து ,தான் சேர்க்கும் சொத்து கூட ஒரு கட்டத்தில் அழிந்து போகலாம் ..கல்வி எந்த சூழ்நிலையிலும் தான் இருக்கும் வரை அழிக்க முடியாது .. ..வாழ்க்கையை கற்றுக்கொடுக்கிறார்கள் .. இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ..நம் சமுதாயத்தில் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது ..கம்பள விருட்சத்தின் புது உறுப்பினர் ..


திருமதி .ஜெகதீஸ்வரி ஜோதிமுத்து அவர்கள் சிறு அறிமுகம்
Lic Agent &  Central Bank Villege Service Centre Incharge at மைவாடி(Myvaadi )

நம் கம்பள சமுதாயத்தில் ஜெகதீஸ்வரி அவர்கள் 1993 ஆண்டின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 446/500 மதிப்பெண் பெற்ற மாணவி...  அதிகபட்சமானது அப்பொழுது.   இவர் கல்வியினால் இப்பொழுதும் ...தன் சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கு பொதுநலப்பணிகளையும் ...நம் சொந்தங்களுக்கும் ...தற்பொழுது கம்பள விருட்சத்தின் ஆலோசனை குழுவில் வழிகாட்டியாக உள்ளார் என்பது கூடுதல் செய்தி ...


திருமதி கோமதி மணி -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
இவர் பள்ளி படிப்பு ..பெரியகோட்டை கிராம பஞ்சாயத்து வார்டு ஆலசோகராக பணிபுரிந்து உள்ளார் ..இவரின் பணிகள் நல்ல திட்டங்கள் மூலம் அந்த கிராமங்களுக்கு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் .


திருமதி ஆண்டாள் சந்திரன் -பஞ்சாயத்து போர்டு தலைவர் -ஜிலேபி நாயக்கன்பாளையம் -

கல்வி பள்ளிப்படிப்பு ...இவரின் பணிகள் நம் சமுதாயம் அதிகம் உள்ள மக்கள் கொண்ட jn பாளையத்தில் ..வளர்ச்சிக்கு உறுதுணையாக பணியாற்றி உள்ளார் ..

திருமதி .சுசிலா -முன்னாள்  கிராம பஞ்சாயத்து ஆலோசகர்-உடுமலைப்பேட்டை -பெரியகோட்டை 
கல்வி பள்ளிப்படிப்பு ..இவர் பெரியகோட்டை கிராம மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளார் ..இவர் தனியார் பஞ்சாலை நிறுவனத்தில் பணி செய்துகொண்டு ..தங்கள் ஊரில் இருக்கும் பொது மக்களுக்கும் ,நம் சொந்தங்களுக்கும் தனியார் வங்கிகளில் சுய உதவி குழுக்கள் நிதியை பெற்று இன்றைய காலகட்டத்துக்கு பொருளாதார நிதி  உதவி செய்துகொண்டுள்ளார்.இவர் கம்பள சமுதாயத்தில் வரன் தேடுபவர்களுக்கு .வர பிரசாதமாக நல்ல படித்த ,படிக்காத இளைய சொந்தங்களுக்கு திருமண ஜாதகம் பெற்று பரிமாறி கொண்டு இன்று முடிய நல்ல நிலையில் வாழ்க்கையை அமைத்து கொடுத்துள்ளார். இவரின் கம்பள சமுதாய பணி ஈடுஇல்லாதது ....  

திருமதி .பிரேமலதா -எஸ் .அம்மாபட்டி -உடுமலைப்பேட்டை 

கல்வியில் இளநிலை  பட்டம் பெற்றவர் ..இவர் நமது கீர்த்திவீரர் வீரர் எதுலப்பர் வாட்ஸாப்ப் குழு ஆரம்பித்து நம் சமுதாய சொந்தங்களை ஒருங்கிணைக்க மதிப்பு மிக்க பகிரளி மூலம் உலகம் முழுவதும் உள்ள கம்பள சொந்தங்களை இணைத்து இன்று பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் குழுவிற்கு இவரின் சரியான படைப்பாற்றல் ,யோசனை வெகு அருமை ..யாரும் சிந்திக்காத சிந்தனையை உருவாக்கி கம்பள செய்திகளை பரிமாறி கொண்டிருப்பதற்கு இவரின் மதிப்புமிக்க யோசனை என்றும் மறவாது ..

திருமதி  .மகாலக்ஷ்மி -தனியார் துறை -உடுமலைப்பேட்டை -கரப்பாடி 
கல்வியில் இளநிலை பட்டம் பெற்றவர் ..தற்பொழுது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ..நம் கம்பள விருட்சம் அறக்கட்டளையின் முதல் உறுப்பினர் ஆரம்பித்தது முதல் இன்று வரை நம் அறக்கட்டளையின் செயல்களுக்கு பக்க பலமாக இருந்து பணிபுரிந்து வருகிறார் 

திருமதி .வீரலட்சுமி ராஜவேல் ..(ஆண்டிபட்டி )

சாப்டூரில் பிறந்து  நீலகிரி மற்றும் கொடைக்கானலில் உள்ள  பள்ளியில் சிறப்பான கல்வி கற்கும் பாக்கியம் பெற்றும் பெண்பிள்ளைகள் அதிக படிப்பு தேவை இல்லை என்ற குடும்ப  சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக  படிப்பை தொடரமுடியாமல் இருந்து . 

திருமணத்திற்கு பிறகு என் கணவரின் உதவியோடு மேல் படிப்பு படித்து முதுநிலை பட்டதாரி ஆகி  16 மாணவர்களுடன் தொடங்கிய ஒரு சிறிய தனியார் பள்ளியில் முதல்வராக சேர்ந்து 10 ஆண்டுகளில் 1000 க்கு மேல் மாணவர்கள் படிக்கும் பள்ளியாகவும்  சரளமாக ஆங்கிலம் பேசும் திறன் மற்றும் self confidence, நேர்மறை சிந்தனை  மேம்படுத்தும் இடமாகவும் உருவாக்கியது.

மேலும் 20 ஆண்டுகளாக  பணி செய்த 2 பள்ளியிலும் நல்ல திறன் மிகுந்த முதல்வர் என்று மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேர் பெற்றுள்ளேன்.
 
பிறந்த வீடான சாப்டூர் பாளையம் பற்றிய வரலாற்று செய்திகளை திரட்டுவதில் ஆர்வம் உண்டு.


திருமதி.செல்வராணி..எஸ் .அம்மாபட்டி .உடுமலைப்பேட்டை .
குமரேசன்.
விவசாயபண்ணை
நிர்வாகஇயக்குனர்.
எஸ்அம்மாபட்டி
படிப்பு: பள்ளிபடிப்பு 
1998ல்.தமிழ்மொழிப்
பாடதேர்வில்முதல்பரிசுவென்றவர்.
அழிந்து வரும் தமிழ் கலாச்சாரம் பண்பாடு
நிகழ்வு களைபாதுகாக்க
முழுமுயற்சியில்தன்னை
ஈடுபடுத்திக்
கொண்டிருப்பவர்.
கீர்த்தி வீரர் எத்தலப்பர்குழுமற்றும்கம்பளத்துப்பெண்கள்
குழுவில்இணைந்து
வரலாறு மற்றும் அன்றாட நிகழ்வுகளை அனைவரும்அறிந்து 
கொள்ள மிகுந்த முயற்சி மேற்கொள்பவர்.குறுகியகாலகட்டத்தில் தமது

நட்பு வட்டாரத்தை
பெருக்கிக்கொண்டவர்.
தன்னம்பிக்கை தைரியம்
எழுத்தாற்றல் மிக்கவர்📗✒️✒️🤝🥰செல்வராணி
சிம்மராசி
இவர் ஆணாகப்பிறக்க
வேண்டியவர்
கற்பனை வளம்
சிந்தனைஆற்றல்
எழுத்தார்வம் மிக்கவர்,தன்னால் தனது சமூகம் உயரவேண்டும் என்பதில் ஆர்வம் மிக்கவர்,தமிழகத்தின் இரும்பு பெண்மணி  ஜெயலலிதாவுக்கும் சிம்மராசி தான் மகம் நட்சத்திரம்,கம்பளம் சமுதாயத்தில் உள்ள அனைத்து உறவுகள் பற்றி அறிய
முயற்சி மேற்கொண்டுள்ளவர்,ஆண் பெண் பேதம் அற்றவர்,சிம்ம ராசி உள்ளவர்கள் அதிகம் தன் சொந்தங்களை நேசிப்பவர்,வீரமிக்கவர்கள் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் ஆண் பெண் எத்தனை கூட்டமாக இருந்தாலும் தன்  பேச்சால் அனைவரையும் தனது கருத்துகளால் ஆளுபவர் ✒️📗📗🤝🥰📡🎙️🎙️


திருமதி அனிதா ஜெயராமன் ( பொன்னாலம்மன் சோலை -உடுமலைப்பேட்டை )
வளர்ந்து வரும் விவசாய தொழில்முனைவோர் 
தன் சகோதரருடன் இணைந்து  தொழில்முனைவோராக திகழ்வதுடன் பொதுதளத்தில் சமுதாய முன்னேற்றங்களிலும் எதிர் காலச் சூழ்நிலைகளுக்கு தகந்த கல்வி மற்றும் பொருளாதார உயர்வுக்கும் தன்னை இணைத்துக்கொண்டு செயல்படுகிறார்...


திருமதி மகுடீஸ்வரி ராமசாமி (விளாமரத்துப்பட்டி-உடுமலைப்பேட்டை 
இவர் விவசாய பண்ணை நிறுவன மேலாளர் ,விவசாய தொழில்முனைவோர் ஆவார்,விவசாய பண்ணையில் தென்னை மரங்கள் ,மற்றும் ஊடுபயிர்கள் அதற்கு தகந்த ஆலோசனைகள் வழங்கிநீர்மேலாண்மையை கற்றுக்கொண்டு நிர்வாகம் செய்து இலாபத்துடன் மேலாண்மை செய்பவர் .குறைந்த இடத்தில நேரம் கிடைக்கும் பொழுது ,காளான் வளர்ப்பு ,தேனீ வளர்ப்பு தொழிலை கற்று நிர்வாகம் செய்து ஆலோசனை வழங்குபவர் .கால்நடை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர் ,மேலும் இவர் தன் கணவரின் டைல்ஸ் காண்டிராக்ட் தொழிலுக்கு பக்க பலமாக இருந்து கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாக செயல்படுபவர் ..
 
எஸ் .தெய்வநாயகி (கே .வல்லகொண்டபுரம் -உடுமலைப்பேட்டை )முதுகலை பட்டதாரி .
பொள்ளாச்சி கலை கல்லூரியில்  பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.கணிதத்தில் முனைவர் படிப்பு படித்து வருகிறார்...நம் பெண் குழந்தை சொந்தங்களுக்கு கல்வி விழுப்புணர்வு மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார் .

நம் கம்பள சமுதாய பெண் தெய்வங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் 

நாளையும் தொடரும் ...உங்களின் சிவக்குமார் ...உடுமலைப்பேட்டையிலிருந்து ....9944066681...வாட்ஸப் எண் ...👍🌷🌷🌷🌷🌷