செவ்வாய், 21 மார்ச், 2017

நமக்கு எப்படியும் பொண்ணு அமஞ்சுரும்னு
கொஞ்சநஞ்ச நம்பிக்க இருந்துச்சு...
 நீயாநானா ப்ரோக்ராம் பாத்தேன்...
இப்பவே ஆன்மீக பயணத்துல அடியெடுத்து
வெக்கறது நல்லதுனு தோனுது...

சிரிக்க ...சிந்திக்க மட்டும் ....

திங்கள், 20 மார்ச், 2017

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..கடமலைக்குன்று ,N செண்டராயபுரம்,தேவதானப்பட்டி காமாட்சியம்மன் கோவில்  )
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!



பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)

பயணங்கள் முடிவதில்லை .....( பாபநாசம் நீர்விழ்ச்சி...அகஸ்தியர் கோவில் ..சொரிமுத்தையனார் கோவில் ..)
புதிய அனுபவங்களை நமக்குபுத்துணர்ச்சி அளிக்கிறது,ஒய்வு எடுக்க எங்கெங்கோ பயணகிறோம்.
நம் மனம் ஒய்வு எடுக்க விரும்பினாலும் சரி ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் ,ஒய்வு என்பது ஒரு பணியை முடித்து புதிய பணியை தொடங்குவதிற்காக இருக்கும்.அப்போதுதான் நம் பணியை ஒரு புத்துணர்ச்சியுடன் ,புது பொலிவுடன் தொடங்கமுடியும் .
புதிய காட்சிகள் ,புதிய இடங்கள் ,புதிதாக நண்பர்களை சந்திக்கும் பொழுது நமக்கு புதிய சிந்தனைகள் பிறக்கின்றன.
இன்றய அசுர வேக வாழ்கையில் பணத்தை தேடுவதிலேயே நம் நேரத்தை தொலைதுகொண்டு இருக்குறோம் .
இம் மாதிரியான பயணங்களில் பல புதிய
சுவாரசியங்கள் நமக்கு தெரிவதில்லை .நம்முடைய பயணம் உல்லாச பயணமாக இருந்தாலும் ,ஆன்மீக பயணமாக இருந்தாலும் அதன் அனுபவங்கள் மிகவும் சுவாரசியமானவை.
பாபநாசம் நீர்விழ்ச்சி நோக்கி செல்லும்போது கடையம் வழியாக வயல் சூழ்ந்த பசுமை அன்னை நம் பயணத்தை அழகாக்கிறாள் ,ஒரு பக்கம் குற்றால மலைத்தொடர் பசுமை போர்த்திய வனகாடுகள் நம் கண்ணுக்கு குளிர்விக்கிறாள்.பாபநாசம் சிவன் கோவில் கோபுரம் முதலில் நம் கண்ணுக்கு தரிசினம் தருகிறார்.காலை வேளையில் மனத்திற்கு பக்தி பரவசததுடன் தரிசித்து விட்டு மெதுவாக முண்டந்துறை வன சரக தேவதை அன்போடு வரவேற்கிறாள்.
முதலில் வனசரக காவலர்கள் வரும் வாகனங்களை செவ்வானே பரிசோதனை செய்து வழியனுப்புகிறார்கள் அவர்கள் செய்யும் பணி தெய்வ வழிபாட்டுக்குரியது.வனத்தில் தடை செய்யப்பட்ட பாட்டில்கள் புகைப்பான் ,பிளாஸ்டிக் பொருட்கள்,பார்வையிட வருபவர்கள் வனத்தில் தூக்கி எரிந்து விடாமல் இருக்கவும், இங்கு இருக்கும் வன விலங்குகளுக்கு தீங்கு நேராத வகையில் தங்கள் கடமையை வனசரக காவலர்கள் செவ்வனே செய்கிறார்கள். நாங்கள் செல்லும் வாகனம் வேக அளவு 20 டு 30 கிலோ மீட்டர் மிதமான வேகத்தில் வன விலங்குகளை பார்த்தவாறே தெந்தரவு இல்லாது ஊர்ந்து சென்றோம்.போகும் வழியெல்லாம் சிங்கவால் குரங்குகள் தன்குட்டியுடன் விளையாடி கொண்டும் ,குடிநீர் வரும் தண்ணீர் குழாய்களில் தண்ணீர் குடித்துக்கொண்டு வரும் பயணிகளை மகிழ்வித்து கொண்டிருகின்றன.புள்ளி மான்களும் பயம் அறியாது எங்களை பார்த்தாவரே கண்சிமிட்டி விட்டு வனத்துக்குள் துள்ளி குதித்து ஓடியது.மயில்கள் தன் தோகை விரித்து மழை வருவதிற்கான அறிகுறியை காட்டி நடந்து கொண்டிருந்தின.இவை எல்லாம் இயற்கை அன்னை நமக்கு கொடுத்து சென்ற அரிய பொக்கிஷங்கள்...
பாபநாசம் நீரிவிழ்ச்சி யின் சத்தம் அரை மைல் தூரத்திற்கு நம் செவிகளில் ரிங்ககரமிடுகிறது.நீர்விழ்ச்சியுடன் அந்த குளிர் சாரல் நீர்விழ்ச்சி முகத்தில் பன்னீர் துளிகளாக படர்கிறது.நீர்விழ்ச்சி அருகே வரும் பயணிகள் வழிகாட்டியாக அங்கு வாழும் மலைவாழ் அரசர் ஒருவர் நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது பாறைகளில் வழிக்க விழாமல் நடக்குமாறு நமக்கு வழிகாட்டுகிறார்.நீர்விழ்ச்சியில் குளிக்கும்போது நம் நாடி நறும்பு எல்லாம் ஊடுருவி உடலின் வெப்பத்தை தணிக்கிறது.
நீர்விழ்ச்சி ஒட்டி மலை பாதை வழியாக சென்றால் மேல கம்பீராமாக அகஸ்தியர் கோவில் பெரிய பாறைகளின் நடுவே நமக்கு காட்சி அளிக்கிறது.வான் உயரந்த பாறைகளுகிடையே நடுவே அமைந்திருக்கும் இக் கோவில் வாழ்க்கை பயணத்தில் பார்த்து பரவசப்படும் ஒரு புண்ணியஸ்தலமாகும். அகஸ்தியர் சிலை சிற்ப வேலைபாடுகள் அருமையான சிற்ப கலைஞனின் கை வண்ணத்தை காட்டுகிறது.
மெதுவாக காரையார் அணை வழியாக அருள்மிகு சொறி முத்தையனார் கோவிலுக்கு பயணித்தோம் .வழியில் பழமையான மரப்பாலம் 1992 இல் புயல் மழையால் அடித்த செல்லப்பட்ட பாலத்துக்கு பதிலாக ஒருபுதிய அழகான இரும்பு பாலம்வழியாக நதியை கடந்து சென்றோம்.
புதிய சிந்தனை ,ஆசைகள் ,தேடல் ,தோற்றம் ,நம் குணம் என்று மனிதர்களுக்கு மனிதன் மாறுபடுவதுபோல,இடங்களும் மாறுபடுகின்றன....வாழ்க்கை பயணங்கள் என்றும் முடிவதில்லை ...நம்மோடு .....!!!!!!!!!!

வெள்ளி, 17 மார்ச், 2017

கோவை ,திருப்பூர் வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் ...

தமிழ்நாட்டில் ஏன் சிறந்த மாவட்டமாக விளங்க காரணம்...
மாநில செயல்தலைவர் திரு .முருகவேல் ,
மாநில கௌரவ ஆலோசாகர் திரு .ராமகிருஷ்ணன்
கழக தலைவர்கள் எல்லாரும் இளைஞர்களை நியமித்ததுதான் நன்றாக செயல்பட காரணம்...

திரு .ராமு
திரு .சந்திரசேகர்
திரு .கோபாலசாமி
திரு .கருணாநிதி
திரு .டிஜிட்டல் ராஜேந்திரன்
திரு .ஜெகதீஷ்
திரு.தீபம் தண்டபாணி
திரு .மாசிதுரை
திரு .முருகராஜ்
திரு .ஜெய்கணேஷ்
திரு .முத்துசாமி
திரு .முத்துராஜ்
திரு  .செல்வம்


விரைவான செயல்பாட்டுக்கு முன்னோடியாக திகழ்கிறார்கள்

எனக்கு தெரிந்து 55 கிளை கழகங்கள் கொண்ட மாவட்டமாக திகழ காரணம்
கழகத்தில் இருக்கும் ஒற்றுமை ,குழுவாக செயல்பட காரணமாகும் .

இனி வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு ,வியாபார வளர்ச்சி சம்மந்தமாக கலந்துரையாடி வழிவகை செய்யப்படும் .
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

 உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

 மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
 மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

வியாழன், 16 மார்ச், 2017

இன்று மூன்று  வருடங்களுக்கு பிறகு கோவையில் என் மூத்த வழக்கறிஞர் நண்பர்களை என் வியபார சம்பந்தமாக சந்திக்க சென்றிருந்தேன்

திரு .சுந்தரவடிவேல் (சிபிஐ மூத்த வழக்கறிஞர் )பந்தையசாலை
திருமதி .ஷர்மிளா -கோபாலபுரம்
திரு .ஸ்ரீனிவாசன் -கோபாலபுரம்
திரு .குருசாமி -ஜவான்ஸ் building
திரு .நவீன்குமார் -வடவள்ளி
திரு .சரவணன் -கணபதி
திரு .சிவகுமார் -RSPURAM
திரு .தொல்காப்பியன் -கோபாலபுரம்
திரு .ராமகிருஷ்ணன் -AIRINDIA
இன்னும் என் வழக்கறிஞர் நண்பர்களை சந்திக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன் ..

இதில் மதிய நேர உணவை கோர்ட் வளாகத்தில் உள்ள விலை குறைந்த ருசிமிக்க உணவை ஸ்ரீனிவாசன் நண்பருடன் பகிர்ந்துண்டது மகிழ்ச்சியே .
வடவள்ளி செல்லும்பொழுது மட்டும் மனதை கல்லாக்கி கொண்டு தான் சென்றேன் .. என் ஷ்யாமுடன் விளையாடிய ,பள்ளி சென்ற  நினைவுகளால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.வியாபார விஷயமாக செல்லும்பொழுது எந்த ஒரு மன நிலைக்கும் ஆட்படக்கூடாது கூடாது என்று மனதை கல்லாகி கொண்டேன் .

இன்று விலைமதிப்பு மிக்க நேரம் சென்றதே தெரியவில்லை ..கோபாலபுரம் பகுதி முதலில் எல்லாம் சினிமா விநியோகஸ்தர்கள் அதிகம் உள்ளபகுதியாக இருந்தது .இப்போது சுற்றியும் வழக்கறிஞர் அலுவலகமாக காட்சி அளிக்கிறது .கோர்ட் வளாகத்திற்கு எதிர்புறம் உள்ள அன்னபூர்ணாவில் சுவைமிக்க காபி சுவைத்துவிட்டு விலைபட்டியலை பார்க்கும்போது கொஞ்சம் ஜெர்க்குதான் ..




புதன், 15 மார்ச், 2017

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்

உடுமலைப்பேட்டை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம்  மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் எதிர்வரும் ஞாயிறு (19-03-2017)மாலை 4.00 மணி அளவில் மாவட்ட சங்க கட்டிடமான குமரன் டைப் ஆபீஸ் வளாகத்தில் கலந்துஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது .அது சமயம் மாவட்ட ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை வழங்கிட வேண்டுகிறோம்

மாநில செயல் தலைவர் திரு .முருகவேல்-தொடர்பு எண் - 9751617920
மாநில செய்தி தொடர்பாளர் : சிவக்குமார் -9944066681

ஞாயிறு, 5 மார்ச், 2017


Sivakumar Kumar added 9 new photos — feeling happy with Afzal Noor in Udumalaippettai.
Just now ·

என் கல்லூரி நாட்கள்..Vidyasagar College of Arts and Science-Udumalpet
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு-05-03-2017
கல்லூரியின் முதல்நாள் - கடந்து வந்த நம் அனைவராலும் மறக்க முடியாத ஒன்று. அந்த நாள் கல்லூரியே கலர்புல்லாக இருந்தது. வகுப்பறையில் அருகிலிருந்த முகவரி தெரியாத நண்பனிடம் முதலில் சொன்ன 'ஹாய்'. அதுவே நாளடைவில் மாமா, மச்சி என்று வளர்ந்தது. பலருடன் பழகியிருந்தாலும் கடைசியில் பத்து பேரின் நினைவே நெஞ்சில் நிற்கின்றது.
அடுத்து கல்லூரி வாழ்வின் முக்கியப் பகுதி ‍ராகிங். கல்லூரி தொடங்கிய முதல் வாரத்திலேயே ரப்பர் செருப்பு அணிந்து சென்றது நினைவிவுள்ளது. இது செருப்போடு மட்டும் நிற்காமல் உடை, மீசை என்ற அனைத்திலும் சென்றது. தொடக்கதில் துன்பமாகத் தோன்றினாலும், நாளடைவில் அதுவே சீனியர்களின் நட்புக்குப் பாலமாக அமைந்தது.கேண்டீனின் மசாலா தோசையில் மசாலாவை தேடியதும், தேவையற்ற நேரங்களில் தேனீரருந்தியதும் நினைவிலிருப்பவையே. கேண்டீனின் திட்டு - சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும் மற்ற‌ வகுப்புத்தோழர்களை பார்த்துப் பழகி மனவிட்டு பேசுமிடம் அதுவே. கேண்டீனின் பத்து ரூபாய் மேட்டரை இன்று நினைத்தாலும் இனிப்பாகவே உள்ளது.
கல்லூரியின் முதல் வகுப்பு ...பேராசிரியர் .பங்கஜம் அவர்களின் மேலாண்மை வகுப்பு ..முதல் நாள் வகுப்பு முடிந்தவுடன் ..ஏதோ ஒரு கம்பனிக்கு நிர்வாகி ஆனதுபோல் போன்ற உணர்வு.. வணிகவியலக்கு பேராசிரியர் சுடலைமுத்து ,மரகதம்,நாராயணன் அவர்கள் ,கணக்கு பாடப்பிரிவுக்கு பேராசிரியர் சத்தியநாதன் ,தனுசு கோடி அவர்களிடம் கற்றகல்வி ,இன்று உயர்வான தொழில்முனைவோர்களையும்,தொழில் அதிபர்களையும்,அறிஞர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதற்கு நம் கல்லூரியில் படித்த கல்வியறிவு என் வாழ்க்கையும் உயர்த்திருக்கிறது ..
தமிழுக்கு அமுது என்று பெயர் போல் ..பேராசிரியர் இந்திரஜித் அய்யா அவர்களின் தமிழ் வகுப்பு ..அனைத்து தகவலையும் உள்ளடக்கிய வகுப்பாக அமைந்தது வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வுகள் ..
இன்று கல்லூரியில் படித்த நண்பர்களை கண்ணன் ,ஸ்ரீனிவாசன் ,செல்வராஜ் ,பாலகுமார் ,சுதாகர் ,விஜயசேகர் ,பாலகிருஷ்ணன், 20 வருடங்கள் கழித்து பார்க்கும்போது கல்லூரியின் மலரும் நினைவுகள்.வாழ்வின் பொன்நாள்.
நமது நண்பர் வெளிநாட்டில் வசிக்கும் அப்சல் நூரின் கவிதையை வசித்து முடித்தவுடன் மாணவர்களின் கரவொலி அடங்க சில நிமிடங்கள் ஆனது .வாழ்த்துக்கள்.
எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக் கொண்டிருந்த நாவலாசிரியனும், எழுத்தாளனும் உருப்பெருவார்கள் நம்பிக்கை உள்ளது
கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த நமது கல்லூரியின் தாளாளர் .திரு .சத்தியநாதன் ,மற்றும் கல்லூரியின் தலைவர் .சு .சுப்பிரமணியன் ,மற்றும் கல்லூரியின் முதல்வர் .மருதுபாண்டியன் அவர்களுக்கும் .என் மனமார்ந்த நன்றிகள் .,...









புதன், 1 மார்ச், 2017

இன்று செந்தில்குமார் -கௌசல்யா -கொடிங்கியம் ஆவல்பட்டி அரண்மனையாரின் திருமணவரவேற்பு நிகழ்வு நம் இளையசமுதாயம் சிரிப்பு சத்தம் ..கலாய்ப்பு களும்  இப்போது இருக்கிற இறுக்கமான சூழ்நிலையை மனதை வெகுஇலகுவாக்கிறது ..பில்லா நாய்க்கன் சாலையூர் சமையல் கலைஞரின் கைவண்ணத்தில் மல்லிகை சாதம் ,இயற்கை கம்மங்கூழ்  திருமணவரவேற்பு சாப்பாடு அருமை ..

வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக மாநில செயல்தலைவர் .முருகவேல் ,சாமிகுணம் ,செந்தில் ராம் ,திருப்பூர் கார்த்தி மற்றும் நம் சொந்தங்களுடன் மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி புன்னைகையுடன் விடைபெற்றோம்....