ஞாயிறு, 27 நவம்பர், 2016

நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம்....
உடுமலை கோவை திருப்பூர் திண்டுக்கல் பகுதிகளை மையமாக வைத்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம் மற்றும் கலந்துரையாடல் கார்த்திகை மாதம் 12ம் நாள் 27.11.2016ம் தேதி ஞாயிற்றுக்கிழைமை காலை 10.00மணியளவில் உடுமலை பெதப்பம்பட்டி அருகில் சோமவாரபட்டி அருள்மிகு கண்டியம்மன் கோவிலில் அருமையான நிகழ்வாக நடைபெற்றது..இதில் இன்று சிறப்பு விருந்தினராக திருப்பூர் வழக்கறிஞர் ச.முருகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நமது கல்வி குழுமத்தின் செயல்பாடுகள்,வளர்ச்சி திட்டங்கள் ,எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு, முன்னற்ற கருத்துக்களையும் ,வழிமுறைகளையும் ,நமது உறுப்பினர்களுக்கு ,பயனுள்ள தகவல்களையும் ,சரியான ஆலோசனைகளையும்  வழங்கி  நமது  குழுமத்திற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும்  அளித்தது..நாளுக்கு நாள் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ,வருகையும் அதிகரித்தது  குழுமத்திற்கு மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.இன்று குழுமத்துக்கு புதிதாக வருகை தந்த பெண் வழக்கறிஞர் .செல்வி .ரஞ்சனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .நிகழ்வுகளை அருமையாக வழிநடத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு நன்றிகள் ...  

சனி, 10 செப்டம்பர், 2016

காடு என் வீடு .......

இன்று என் நண்பரின் மகன் பிறந்த நாள் விழாவை மகிழுச்சியுடன் கொண்டாட பக்கத்தில் இருக்கும் அமராவதி பழங்குடியினர் படிக்கும் மழலைச்செல்வங்களுடன் கொண்டாடியது அருமையான நிகழ்வாகவும் ,மனநிறைவாகவும் இருந்தது ...இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் மிகந்த அர்ப்பணிப்புடன் மிகந்த பொறுமையுடனும் இக்குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது கடவுளுக்கு செய்யும் நன்றியாக கருதுகிறார்கள் .

 மலைகளில் இயற்கையை காப்பாற்றி நம் உலகத்திற்கு வனவிலங்குகள் ,மரங்களை உயிர்ப்புடன் ,செழுப்புடனும் நம் வாழ இக்குழந்தைகளின்  பெற்றோர்கள் பணியாற்றி கொண்டுஇருக்கிறார்கள் .தன் குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற கல்வியின் முக்கியத்தை அறிந்து  இச்சிறு வயதில் பெற்றோரை பிரிந்து கல்வி கற்றுகொண்டுஇருக்கிறார்கள். தன்நம்பிக்கையை நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும்...நண்பரின் தன்னால் முடிந்த அவர்களின் மகிழ்ச்சிக்கு சிறு உதவியாக பிடித்த விளையாட்டு பொருட்கள் அன்புடன்  அளித்து வந்தோம் ..அருகில் இருக்கும் அமராவதி ராணுவப்பள்ளியில் படித்த பழைய மாணவர்கள் வருடம் ஒருமுறை வரும்போது இப்பள்ளிக்கு  ஒருமுறை விஜயம் செய்து வாருங்கள் உங்களுக்கும் மனநிறைவு கிடைக்கும்.    









   


வியாழன், 21 ஜூலை, 2016

மகிழ்ச்சியில் மட்டும் பங்கு கொள்ளும் நண்பர்களை விட கஷ்டகாலங்களில் ,துக்க காலங்களில் கூடவே இருக்கும் நண்பர்களால் தான் வாழ்க்கை சக்கரம் உருண்டுகொண்டு இருக்கிறது ...அந்த நண்பர்களில் ஒருவரில் இந்த நண்பனும் ஒருவர் ....என் இனிய நண்பன்  ....அப்சல்...க்கு அன்பு கலந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஞாயிறு, 17 ஜூலை, 2016

மகிழ்ச்சி......
பொள்ளாச்சி சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .மாபெரும் கார் திருவிழா 
2016
ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள் ...விவசாயத்திற்கு மட்டும் அல்ல அனைத்து வர்த்தக வாகன வியாபாரத்திற்கும் தான் பொருந்தும் ..

 நம்ம பொள்ளாச்சியில்  நடைபெற்ற எங்களின்  சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .... மாபெரும் கார் திருவிழவிற்கு வந்திருந்த அனைத்து விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்..

இரண்டு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் அவர்களுக்கு தேவையான வாகனங்களையும் .புது வாகனங்களுக்கு முன் பதிவும் செய்தது மகிழ்ச்சியான தருணங்கள்.

இதில் கலந்துகொண்ட அனைத்து டீலர்களுக்கும் அருமையான வர்த்தக வியாபாரமும் ,முன்பதிவுமும் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

இத்திருவிழாவிற்கு வந்துஇருந்த பெரியவர்களைவிட சிறுவர்கள் கலந்துகொண்டு இத்திருவிழாவை மிகவும் சிறப்பித்தார்கள் ...சிறுவர்களின் புது திறனை அறிய அவர்களுக்கு ஓவிய போட்டியும் நடத்தி அவர்களுக்கு சிறு பரிசு பொருட்களும் அளித்தது அவர்களுக்கு ஊக்கப்படுத்தியதாக  இருந்தது...

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வாகனங்களை அளித்தது எங்களுக்கு மனநிறைவும் இருந்தது ..

எங்களுக்கு உறுதுணையாக இருந்த எங்களின் உயரதிகாரிகள்  .. .திரு .பாலசுப்ரமணியம்,கணேஷ் ,அவர்களும் மற்றும் எங்களின் ,பொள்ளாச்சி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் ,மேலாளர்களும் கூடவே இருந்தது  எங்களுக்கு மகிழ்ச்சியின் தருணங்கள்....

இதில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கும் ,அனைத்து டீலர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம் .