ஞாயிறு, 17 ஜூலை, 2016

மகிழ்ச்சி......
பொள்ளாச்சி சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .மாபெரும் கார் திருவிழா 
2016
ஆடி பட்டம் தேடி விதை என்பார்கள் ...விவசாயத்திற்கு மட்டும் அல்ல அனைத்து வர்த்தக வாகன வியாபாரத்திற்கும் தான் பொருந்தும் ..

 நம்ம பொள்ளாச்சியில்  நடைபெற்ற எங்களின்  சுந்தரம் பைனான்ஸ்ன் சுபிட்ஷம் .... மாபெரும் கார் திருவிழவிற்கு வந்திருந்த அனைத்து விலைமதிக்க முடியாத வாடிக்கையாளர்களுக்கு அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்..

இரண்டு நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் அவர்களுக்கு தேவையான வாகனங்களையும் .புது வாகனங்களுக்கு முன் பதிவும் செய்தது மகிழ்ச்சியான தருணங்கள்.

இதில் கலந்துகொண்ட அனைத்து டீலர்களுக்கும் அருமையான வர்த்தக வியாபாரமும் ,முன்பதிவுமும் செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .

இத்திருவிழாவிற்கு வந்துஇருந்த பெரியவர்களைவிட சிறுவர்கள் கலந்துகொண்டு இத்திருவிழாவை மிகவும் சிறப்பித்தார்கள் ...சிறுவர்களின் புது திறனை அறிய அவர்களுக்கு ஓவிய போட்டியும் நடத்தி அவர்களுக்கு சிறு பரிசு பொருட்களும் அளித்தது அவர்களுக்கு ஊக்கப்படுத்தியதாக  இருந்தது...

வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வாகனங்களை அளித்தது எங்களுக்கு மனநிறைவும் இருந்தது ..

எங்களுக்கு உறுதுணையாக இருந்த எங்களின் உயரதிகாரிகள்  .. .திரு .பாலசுப்ரமணியம்,கணேஷ் ,அவர்களும் மற்றும் எங்களின் ,பொள்ளாச்சி ,கோயம்புத்தூர் ,திருப்பூர் ,மேலாளர்களும் கூடவே இருந்தது  எங்களுக்கு மகிழ்ச்சியின் தருணங்கள்....

இதில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்களுக்கும் ,அனைத்து டீலர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறோம் .  



















      





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக