வெள்ளி, 24 ஏப்ரல், 2026

 நண்பரின் புதிய கார் பயணம் ....

 

நிறைய இருந்தாலும் அனுபவத்தில் என்  பதில்.


நண்பர் ஒருவரது புதிய டாடா பஞ்ச் கார். 10 கிலோமீட்டர் காரின் உரிமையாளரும் நண்பருமான சொந்தம் இயக்கிக்கொண்டிருக்கும் போது அதன் உட்புறங்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதனுடைய இயந்திர சக்தி எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டேன்.

திடீரென நான்கு வழிச்சாலையில் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கதவைத் திறந்து பாஸ் நீங்க ஓட்டுங்க! என்று இறங்கி மாறிக்கொண்டார்.

சாரதி இருக்கையில் ஏறிஅமர்ந்ததுமே அந்தக் கார் ஒரு ஆக்டோபஸ் போல என்னை கவ்விக்கொண்டு விட்டது.


சிறிய வகை காராகவும் இல்லாமல் பெரிய வகை காராகவும் இல்லாமல் ஒரு நடுத்தரமான வாகனம்.

ஆறடி உயர ஆஜானுபாகுவான மனிதருக்கும் கூட ஒரு திருப்தியான இருக்கை.

மிகப்பரந்த மற்றும் விசாலமான முன்புற பார்வை. பிளைண்ட் ஸ்பாட் எனப்படும் பகுதிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கப்பட்டு இரந்தது

.

வாகனத்தை உயிர்ப்பித்து முதல் கியர் பொருத்தி லேசாக கிளட்ச் லீவர் ரிலீஸ் செய்ததும் வெண்ணையில் கத்தி போல எந்த குலுக்கலும் இல்லாமல் தொடர்வண்டி தண்டவாளத்தில் இயங்க ஆரம்பித்தது போல அவ்வளவு ஸ்மூத்தாக நகர ஆரம்பித்தது.

இரண்டு ,மூன்று, நான்கு, ஐந்து என்று கியர்களை மாற்றி இயக்கும் சமயம் அதனுடைய இயந்திர சக்தியை முழு பரிமாணத்தில் உணர முடிந்தது.

மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எரிபொருள் இயந்திர வாகனம் தனது சக்தியை ஒரு அசுரன் போல காண்பித்துக் கொடுத்தது.

80/90/ 100 என்று நான்கு வழிச்சாலையில் செல்லும் சமயம் ஒரு சிறு அதிர்வு துளி அளவு கூட காருக்கு உள்ளே வரவில்லை.

மேலும் இயந்திர அதிர்வு சத்தமும் காற்றின் உராய்வு சத்தம் போன்றவையும் கூட உள்ளுக்குள்ளே இல்லை.

மிக மெதுவான குரலில் பேசினாலும் கேட்கின்ற அளவிற்கு நிசப்தம் ஏசி இயங்குவது அதன் குளிரில் மட்டும்தான் தெரிகிறது ஒழிய ப்ளோயர் சத்தமும் கூட உள்ளுக்குள் இல்லை.

ஒரு ஹீலியம் வாயு நிரப்பிய பலூனின் எடையளவுக்கு ஸ்டீயரிங் வலு காண்பித்தல் போதுமானது. வாயை குவித்து ஊதினால் கூட ஸ்டீயரிங் திரும்பி விடும் அளவிற்கு மிக அதிசயமான வெகு இலகுவான ஃபெதர் டச் ஃபீலிங்.


நான் பணிபுரியும் அலுவலக அறையில்  ஏசி குளிர்வூட்டப்பட்ட அறையில் அமர்ந்து ஒரு லேப்டாப் கணினியில் இருப்பதைப் போல சென்று கொண்டிருந்தது.

இன்னும் அழுத்தி பாருங்க பாஸ்! என்றதும் 110/ 120/125 வரையிலும் வேகம் எடுக்கும் சமயம் இயக்கும் நமக்குத்தான் படபடப்பு அதிகரிக்கிறதே காரில் படபடப்பு இல்லை.

எந்த கியரில் செல்கிறோம்?

எவ்வளவு வேகத்தில் செல்கிறோம்?

எந்த வேகத்தில் எந்த கியர் மாற்ற வேண்டும்?என்றெல்லாம் கணினி ஒவ்வொரு துளியாக மானிட்டர் செய்து கொண்டிருக்கிறது.

ப்ளு டூத் இணைப்புடன் கூடிய ஆடியோ அபாரமாக இருக்கிறது.

நகரத்து சாலைகளில் போடப்பட்ட மிகப்பெரிய வேகத்தடைகளில் கூட இரண்டாவது கியரில் ஒரு திணறலும் இல்லாமல் மெதுவாக ஏறி இறங்குகிறது.

நான்கு பேர் அமர்ந்து செல்லும் வாகனத்தில் நகர்த்து நெரிசல்களில் நான்காவது கியரில் கூட என்ஜின் திணறாமல் கியர்பாக்ஸ் இடிக்காமல் இயங்குகிறது.

மனிதர்களின் உயர் அதிக பாதுகாப்புக்காக ஏர் பேக்.

கார் இயங்கி நகரத் துவங்கியவுடன் ஆட்டோமேட்டிக் டோர் லாக்.

சீட் பெல்ட் வார்னிங் .

80 கிலோமீட்டருக்கு மேலே சென்றால் அதிவேக எச்சரிக்கை.

ரிவர்ஸ் பார்க்கிங் சமயம் சென்சார்கள்.

கிளட்ச் மிதித்து அதன் பின்னே வாகனத்தை உயிரூட்டும் முறை என்று பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் தவிர வாகனத்தில் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் உடனடி நிலை நேரத்திற்கு வரும்படியான அகலமான டயர்கள் மற்றும் ப்ரேக்கிங் சிஸ்டம் .

நாம் எதிர்பார்த்த தூரத்தை விட மிகக் குறைவான வேகத்திலேயே நின்று விடுவது மற்றும் ஒரு ஆச்சரிய பாதுகாப்பு விஷயம்.

அடுத்தபடியாக எவ்வளவு வேகத்திலும் இடதுபுற வலதுபுற வளைவுகளில் திரும்பும் சமயம் மைய நோக்கு விசையும் மைய விலக்கு விசையும் 90% உள்ளுக்குள் இருப்பவர்கள் மேலே நேரடியாக தாக்கம் இல்லாதபடிக்கு இதனை வடிவமைத்து இருக்கிறார்கள்.நன்றி R and D team.

இதனால் உள்ளுக்குள்ளே பயணிப்பவர்கள் மிகுந்த சௌகரியமாக உணர முடியும் கார எவ்வளவு வேகத்தில் திரும்பினாலும் சாலையை விட்டு விலக வாய்ப்பில்லை. கவிழவும் வாய்ப்பில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக காரில் ஏசி இயங்கி நான்கு வழிச்சாலையில் சென்றால் 18 கிலோமீட்டர் மைலேஜ் நகரத்து சாலைகளில் சென்று 16க்கு மேலே மைலேஜ் கிடைக்கிறது.

சில தினங்கள் கழித்து டாட்டா பஞ்ச் வாகனத்தின் ரிவ்யூ பார்த்தால் நான் நினைப்பது போலவே பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருந்தார்கள் .

எனவே எட்டு லட்சத்திற்கு 5 பேர் அமரக்கூடிய வாகனம் தெரிவு செய்ய விரும்பினால் டாட்டா பஞ்ச் ஒரு முறை இயக்கி பாருங்கள்.

Good products always come with price

நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு மிகப் பொருத்தமான கார் இந்த டாட்டா பஞ்ச்.

புதிய கார் வாங்குவதற்கு வாழ்த்துக்கள்.

நன்றி

வணக்கம்..என்றும் அன்புடன் சிவக்குமார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக