வெள்ளி, 8 மே, 2026

என் மதிப்புக்குரிய வழிகாட்டி தங்கவேல் சார் -அரசு போக்குவரத்து கழகம் -மேலாண்மை இயக்குனர் -பணி ஓய்வு .அய்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என் மதிப்புக்குரிய வழிகாட்டி  தங்கவேல் சார் -அரசு போக்குவரத்து கழகம் -மேலாண்மை இயக்குனர் -பணி ஓய்வு .அய்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 



"தங்கவேல் சார் = 'தங்கம்' மாதிரி மதிப்பான வழிகாட்டி" 🥰❤️  

"வெள்ளை தாடி, நீல சட்டை, நிமிர்ந்த நடை = 'அனுபவ' Current Account" 👔🌳  

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா" 🎂🍫🍫🍫  


"மரங்கள் நிழல் கொடுக்கும். தங்கவேல் சார் 'அறிவு' நிழல் கொடுக்கும்" 🌳💡  

"கையில Phone, கால்ல செருப்பு - 'Simple' ஆ இருந்தாலும் 'Value' ஜாஸ்தி" 📱🩴  


---


🏦 VK சிவக்குமார் சார் - "தங்கவேல் ஐயா" Birthday FD:  


1. "வழிகாட்டி = 'Life Time Mentor' - Interest வாழ்க்கை முழுக்க வரும்" 📈🙏  

"கட்டபொம்மன் வாசல்" தேடுனப்போ, "உறவுப்பெட்டகம்" அறிமுகம் பண்ணப்போ, "ஷ்யாம் 430" னு சந்தோஷப்பட்டப்போ...  

*"பின்னாடி" இருந்து "வழி" காட்டுனவரு தங்கவேல் சார் ❤️🤝🥰

"MFC கடை" Board மாதிரி - "AUTHORIZATION CERTIFICATE" கொடுத்தவரு.  


2. "மரங்கள் பின்னாடி = 'வேரு' மாதிரி தங்கவேல் சார்" 🌳🔗  

"நீங்க" உடுமலை "மரம்". "தங்கவேல் சார்" உங்க "வேரு".  

"வேரு" இல்லனா "மரம்" நிக்காது. "வழிகாட்டி" இல்லனா "வாழ்க்கை" நிக்காது.  

"வெயில்ல" நிக்குறாரு. ஆனா "மனசு" குளிர வச்சுட்டாரு பல பேருக்கு.  


3. "Goggles, நெத்தில குங்குமம் = 'Stylish' ஆன 'ஆன்மீகம்'" 😎🔴  

"காலம்" மாறினாலும் "கலாச்சாரம்" மாறாத ஆளுமை 🥰🤝.  

"ஒரு கை Pocket ல. ஒரு கை Phone ல" - 'Confidence' + 'Connection' ரெண்டும் இருக்கு.  

"இதான் சார் 'New Gen' க்கு தேவையான 'Old Gen' Guide".  


4. "பிறந்தநாள் = 'Annual Return' Day" 📅🎁  

"வருஷம்" ஒரு முறை "நன்றி" சொல்ற நாள்.  

  

"குரு" க்கு "சிஷ்யன்" கொடுக்குற "மரியாதை".*  


---


📱 Status - VK சார் "குரு வணக்கம்":  


"தங்கம்"  

"விலை"  

"ஏறும்"  


"தங்கவேல்"  

"மதிப்பு"  

"ஏறும்"  


"வயசு"  

"கூடுது"  


"ஆசீர்வாதம்"  

"கூடுது"  


"வழிகாட்டி"  

"வாழ்க"  

"நூறாண்டு"  


- VK சிவக்குமார்  

#HappyBirthday #ThangavelSir #Guru #Mentor #Udumalai #Respect #MyWorkSpeak  


🎂❤️🥰🙏🍫🌳😊


---  

ஐயா தங்கவேல் சார் க்கு "உடுமலை சொந்தங்கள்" சார்பா வாழ்த்துக்கள் 🙏  


"நீங்க" காட்டுன "வழி" ல தான் சார் இன்னைக்கு "நாங்க" நடக்குறோம்.  

🥰 "ஆரோக்கியம்" தான் "முக்கிய சொத்து".*  


"பிறந்தநாள்" அன்னைக்கு "MFC கடை" க்கு வாங்க ஐயா.  

"காபி" என் "Treat". "ஆசீர்வாதம்" உங்க "Gift" ☕❤️  


"100% அர்ப்பணிப்பு" னு நீங்க சொல்லிக்கொடுத்ததுதான் ஐயா.  

"நீங்க" இல்லனா "நான்" இல்ல.  


Tc 🥰. "தங்கவேல் ஐயா" மாதிரி "தங்கமான மனுஷங்க" இருக்குற வரைக்கும் "உடுமலை" ஜொலிக்கும் ✨📚🖋️🤝❤️🥰🤝❤️🥰என்றும் அன்புடன் சிவக்குமார் ❤️🥰🤝🌈🌈📚🎂🍫🍫

வியாழன், 7 மே, 2026

"N.R.ஜெயகணேஷ் (எ) கணேசன் - விஜயலட்சுமி" - மாப்பிள்ளை வீடு.

 "அடடா... Full பத்திரிக்கை வந்திருச்சு சார்" 📜😍

"700 பேரு பேரு = 'உறவுப்பெட்டகம் Part-2' மாதிரி இருக்கு" 🤝📚  "திருமண அழைப்பிதழ் = 29-05-2026 வியாழக்கிழமை 'சுபமுகூர்த்தம்'" 🗓️💍  🏦 VK சிவக்குமார் சார் - "முகூர்த்த" Time Deposit:1. "முகூர்த்த நேரம் = காலை 6.00 மணிக்கு மேல் 7.35 மணிக்குள்" ⏰🌅

"பூர்வபட்ச திதி, சுபவாசரம், சித்திரை நட்சத்திரம்" - 'பஞ்சாங்கம்' பார்த்து வச்ச முகூர்த்தம்.

"கெளரி பஞ்சாங்கம்" படி "அமிர்தயோகம்". கல்யாணம் "அமிர்தம்" மாதிரி இனிக்கும்.  2. "நிச்சயதார்த்தம் = 28-05-2026 புதன்கிழமை மாலை 5.00 to 6.00" 💐🎊

"முந்தின நாள் 'வரவேற்பு' 6.00 மணிக்கு மேல் அதே மண்டபம்."

"விஸ்வாஸ் மஹால் A/C, திருமுருகன் பூண்டி, திருப்பூர்" - 2 நாள் "Festival".  3. "வாழ்த்துரை = P.S.மணி, K.ராமகிருஷ்ணன், K.பாண்டியன்" 🎤👨‍⚖️

"உடுமலை, திருப்பூர், கோவை" பெரிய மனுஷங்க எல்லாம் "வாழ்த்துரை".

"சிவக்குமார்" பேரு "அழைப்பிதழ்" ல இருக்கா சார்? இருந்தா "VIP" List ல இருக்கீங்க.  4. "குடும்பம் = N.ராஜகோபால் - நாகேஸ்வரி வகையறா" 👨‍👩‍👧‍👦❤️

"N.R.ஜெயகணேஷ் (எ) கணேசன் - விஜயலட்சுமி" - மாப்பிள்ளை வீடு.

"N.R.G.புவனேஸ்வரன் B.B.A., (Logistics)" - "Contact: 96266 99881".

"ரா.முத்துச்சாமி - முத்துவிஜயலட்சுமி (அ) தமயந்தி - Cell: 97875 39579" - மணமகள் வீடு.

"ரெண்டு குடும்பமும் 'Textile, Knit Tex, CRPF, B.Sc., M.Ed'" - படிப்பு, உழைப்பு, தேச சேவை எல்லாம் இருக்கு.  5. "மாப்பிள்ளை Bio = B.Com, (CS) + M.D. Shri Jaiganesh Wash Lookz" 👔🏭

"மணமகள் Bio = B.Sc., (CS) M.Sc., (Data Science)" 👩‍💻📊

"Business + Data Science = குடும்பம் 'Auto-Pilot' Mode ல ஓடும் சார்."

"திருப்பூர்" பனியன் "Business". "Data" வச்சு "World" பூரா Export பண்ணலாம்.  📱 Status - VK சார் "முகூர்த்த" Countdown:  "28-05-2026"

"நிச்சயதார்த்தம்"

"5.00 PM"  "29-05-2026"

"கல்யாணம்"

"6.00 AM"  "விஸ்வாஸ்"

"மஹால்"

"விசுவாசம்"

"வாழ்க"  "ஜெகதீஷ்"

"ஜெயப்பிரபா"

"ஜெயம்"

"எப்போதும்"  - VK சிவக்குமார்

#TiruppurWedding #29052026 #Muhurtham #JaiganeshWashLookz #DataScience #KonguKalyanam #MyWorkSpeak  💍🎉🏠🙏📅😊❤️சார், "Full Details" வந்திருச்சு. "முகூர்த்தம்" 6.00 to 7.35 AM.

"28-ம் தேதி" Evening "Reception". "29-ம் தேதி" காலைல "தாலி".  "வங்கி மேலாளர் ஜெயராமன் மாப்பிள்ளை" யாரு சார்? "உங்க" சொந்தமா? 🤝🏦

"பத்திரிக்கை" ல "700 பேரு" இருக்காங்க. "உடுமலை" முழுக்க "அழைப்பு" போல.  "M.D. + M.Sc" - "படிப்பு" க்கு "படிப்பு" சேர்ந்திருக்கு. "வாழ்க்கை" க்கு "வாழ்க்கை" சேர்ந்திருக்கு.

"100% அர்ப்பணிப்பு" னு நீங்க சொன்ன மாதிரி வாழட்டும் 💯❤️  "திருப்பூர்" போறீங்களா சார்? "மாருதி 800" இல்லனாலும் "Scorpio" ல போயிடலாம் 🚗💨  "பத்திரிக்கை" Save பண்ணிட்டேன். "Google Calendar" ல "Reminder" வச்சுட்டேன் 📱✅  Tc சார். "ஜெய் கணேஷ்" குடும்பத்துக்கு "வாழ்த்து மழை" 🌧️💐


"MFC கடை = கல்யாண பத்திரிக்கை 'Distribution Center' ஆயிடுச்சு" ☕💌😄

"காபி குடிக்க வந்தா 'கல்யாண' சேதியும் Free" 🥰🎉  "May 6, 2026, 12:08 PM - மெயின் பஜார், உடுமலை"

"GOWRI SIVAKUMAR - MFC Franchise Owner" போர்டு கூடவே

"COFFEE IS NOT A DRINK BUT AN EXPERIENCE" - உண்மை சார். 'கல்யாணம்' கூட 'Experience' தான் 😊  🏦 VK சிவக்குமார் சார் - "MFC + மணவிழா" Merger Announcement:1. "பத்திரிக்கை கொடுக்குறது = சிவப்பு சட்டை அண்ணன்" 👔❤️

"வெள்ளை வேட்டி, சிவப்பு கட்டம் சட்டை - 'கொங்கு' கம்பீரம்."

"வாங்குறது = நீங்க, Check Shirt சார் - 'GOWRI SIVAKUMAR'."

"கடைல 'வடை, பஜ்ஜி' Tray இருக்கு. 'முகூர்த்த' சாப்பாடு 'Advance Booking' ஆ?" 😄🍩  2. "MFC Board = Franchise Authorization APRIL 2024 to MARCH 2029" 📜✅

"No 4/1, MENBU STREET, UDUMALPET" - "கல்யாண வீடு" Address மாதிரி "காபி வீடு" Address.

"2026" ல "ஜெயகணேஷ் கல்யாணம்". "2029" வரைக்கும் "MFC License".

"காபி" யும் "கல்யாணம்" மும் "Long Term FD" சார்.  3. "5 பேரு சேர்ந்து பத்திரிக்கை = 5 தலைமுறை உறவு" 🤝👨‍👩‍👧‍👦

"உறவுப்பெட்டகம்" ல 5 தலைமுறை சொன்னீங்க. "இங்க" 5 பேரு சேர்ந்து "உறவு" புதுப்பிக்குறாங்க.

"வெள்ளை, பச்சை, கட்டம் சட்டை" - "வேற வேற துறை". ஆனா "மனசு" ஒன்னு.

"100% அர்ப்பணிப்பு" னு "நேத்து" சொன்னீங்க. "இன்னைக்கு" கடைக்கு வந்து "பத்திரிக்கை" கொடுக்குறாங்க.  4. "Fan, Snacks Counter, Auto வெளிய = உடுமலை 'Live' " 🌴🛺

"பின்னாடி Blue Auto, பொண்ணுங்க, Building" - "ஊரு" பின்னணில "உறவு" முன்னணில.

"MFC" ல "Filter காபி" மாதிரி "உறவு" ம் "Filter" ஆகி "திக்" கா இருக்கு.  📱 Status - VK சார் "MFC" Branch Update:  "காபி"

"கடை"

"இல்ல"  "கல்யாண"

"கச்சேரி"

"Office"  "பத்திரிக்கை"

"வாங்குனா"  "பில்டர் காபி"

"Free"  "ஜெகதீஷ்"

"ஜெயப்பிரபா"

"வாழ்க"  "சிவக்குமார்"

"MFC"

"வளர்க"  - VK சிவக்குமார்

#MFC #Udumalpet #WeddingInvitation #JeyGaneshMarriage #29052026 #FilterCoffee #MyWorkSpeak  ☕💌❤️😊🏠🎉🙏சார், "கடைல" வச்சே "பத்திரிக்கை" வாங்கிட்டீங்க. "Sales" ம் ஆச்சு, "Service" ம் ஆச்சு 😄💰  "சிவப்பு சட்டை அண்ணன்" யாரு சார்? "ஜெயகணேஷ்" சொந்தமா? "முத்துசாமி" குடும்பமா? 🤔  "29-05-2026" - "கல்யாணம்". "அதுக்கு முன்னாடி" MFC ல "காபி Meeting" போடுவோம் ☕🤝  "பல் வலி" போய் "பலகாரம்" சாப்பிடுறீங்க போல. "Tray" ல "வடை" சூடா இருக்கு 😄🦷  "வங்கி மேலாளர் ஜெயராமன் மாப்பிளை" கூட "காபி" சாப்பிட வருவாரா? 🏦☕  Tc சார். "உடுமலை" ல "காபி" க்கும் "கல்யாண" த்துக்கும் "நீங்க" தான் "Brand Ambassador" 💐🏆

"Take-2 Photo = Same 'முகூர்த்த பத்திரிக்கை' Same 'மனசு' Same 'மகிழ்ச்சி'" 📸☕💍"May 6, 2026, 12:04 PM - இப்போ 'பச்சை சட்டை' தம்பியும் Frame ல" 😄👔  "MFC கடை = உடுமலை 'Wedding Invitation Hub' ஆயிடுச்சு சார்" 🏠💌"காபி Decoction மாதிரி 'உறவு' ம் திக்கா இறங்குது" ❤️🔥  🏦 VK சிவக்குமார் சார் - "Second Angle" Audit Report:1. "புது Frame ல புது முகம் = பச்சை சட்டை + ID Card தம்பி" 🆔👨‍💼"கழுத்துல 'Lanyard'. கைல 'பத்திரிக்கை'. கண்ணுல 'மரியாதை'.""வங்கி மேலாளர் ஜெயராமன் மாப்பிள்ளை Team ஆ? இல்ல 'ஜெயகணேஷ்' குடும்ப Team ஆ?""எதுவா இருந்தாலும் 'உடுமலை Team' தான் சார். 'Win-Win' Team."  2. "Counter ல 'Independence Butter Cookies' = சுதந்திரமான உறவு" 🍪🗽"பஜ்ஜி, வடை, Cookies" - "கல்யாண விருந்து" Trial இங்கயே Start."COFFEE IS NOT A DRINK BUT AN EXPERIENCE" போர்டு கீழ "கல்யாணம் IS NOT A FUNCTION BUT AN EMOTION" னு எழுதலாம்.  3. "சிவப்பு சட்டை அண்ணன் = 'Chief Guest' மாதிரி நிக்குறாரு" 👔🎖️"பின்னாடி 'வெள்ளை சட்டை' பெரியவரு - 'Chairman' மாதிரி உட்கார்ந்திருக்காரு.""நீங்க Check Shirt ல 'Managing Director' மாதிரி வாங்குறீங்க.""MFC கடை = 'Board Meeting' நடக்குற 'கல்யாண Company'."  4. "29-05-2026 = 23 நாள் தான் இருக்கு சார்" 📅⏳"இன்னைக்கு May 6. கல்யாணத்துக்கு '3 வாரம்' தான்.""மொய் நோட்டு' Ready பண்ணிடுங்க. 'வெள்ளை வேட்டி' Iron பண்ணிடுங்க.""மாருதி 800" இல்லனாலும் பரவால்ல. "மனசு" ல "ஜெகதீஷ்-ஜெயப்பிரபா" கூட்டிட்டு போயிடலாம்.  📱 Status - VK சார் "MFC" Daily Transaction:  "காலை""காபி""மதியம்""பத்திரிக்கை" 


"கடை""கல்யாண""மண்டபம்""ஆச்சு"  "சிவக்குமார்""பேரு""இல்ல"  "சேவகுமார்""னு""மாத்திடலாம்"  - VK சிவக்குமார்#MFCUdumalpet #WeddingInvitation2 #29052026 #GowriSivakumar #FilterCoffee #KonguBond #MyWorkSpeak  ☕💌🎉👔❤️😊🏠🙏சார், "ரெண்டு Angle" ல Photo எடுத்துட்டீங்க. "மாப்பிள்ளை வீடு" Professional 😄📸  "பச்சை சட்டை தம்பி" கழுத்துல "ID Card". "Bank" ஆளா? "LIC" ஆளா? 🤔"எதுவா இருந்தாலும் 'நல்ல காரியம்' தான் பண்றாரு."  "பல் வலி" போய் "பலகாரம்" சாப்பிடுறீங்க. "Happy" ஆயிட்டீங்க போல 😄🦷🍩  "29-ம் தேதி" விஸ்வாஸ் மஹால் ல "MFC Stall" போடுவோமா? ☕😄"கல்யாண வீட்டு காபி" - "Gowri Sivakumar Special"  Tc சார். "கடை" க்கு வர்ற "கஸ்டமர்" எல்லாம் "கல்யாண சொந்தம்" ஆயிட்டாங்க ❤️

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

 நண்பரின் புதிய கார் பயணம் ....

 

நிறைய இருந்தாலும் அனுபவத்தில் என்  பதில்.


நண்பர் ஒருவரது புதிய டாடா பஞ்ச் கார். 10 கிலோமீட்டர் காரின் உரிமையாளரும் நண்பருமான சொந்தம் இயக்கிக்கொண்டிருக்கும் போது அதன் உட்புறங்களை பார்த்துக் கொண்டே இருந்தேன்.அதனுடைய இயந்திர சக்தி எல்லாவற்றையும் கேட்டறிந்து கொண்டேன்.

திடீரென நான்கு வழிச்சாலையில் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு கதவைத் திறந்து பாஸ் நீங்க ஓட்டுங்க! என்று இறங்கி மாறிக்கொண்டார்.

சாரதி இருக்கையில் ஏறிஅமர்ந்ததுமே அந்தக் கார் ஒரு ஆக்டோபஸ் போல என்னை கவ்விக்கொண்டு விட்டது.


சிறிய வகை காராகவும் இல்லாமல் பெரிய வகை காராகவும் இல்லாமல் ஒரு நடுத்தரமான வாகனம்.

ஆறடி உயர ஆஜானுபாகுவான மனிதருக்கும் கூட ஒரு திருப்தியான இருக்கை.

மிகப்பரந்த மற்றும் விசாலமான முன்புற பார்வை. பிளைண்ட் ஸ்பாட் எனப்படும் பகுதிகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கப்பட்டு இரந்தது

.

வாகனத்தை உயிர்ப்பித்து முதல் கியர் பொருத்தி லேசாக கிளட்ச் லீவர் ரிலீஸ் செய்ததும் வெண்ணையில் கத்தி போல எந்த குலுக்கலும் இல்லாமல் தொடர்வண்டி தண்டவாளத்தில் இயங்க ஆரம்பித்தது போல அவ்வளவு ஸ்மூத்தாக நகர ஆரம்பித்தது.

இரண்டு ,மூன்று, நான்கு, ஐந்து என்று கியர்களை மாற்றி இயக்கும் சமயம் அதனுடைய இயந்திர சக்தியை முழு பரிமாணத்தில் உணர முடிந்தது.

மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் எரிபொருள் இயந்திர வாகனம் தனது சக்தியை ஒரு அசுரன் போல காண்பித்துக் கொடுத்தது.

80/90/ 100 என்று நான்கு வழிச்சாலையில் செல்லும் சமயம் ஒரு சிறு அதிர்வு துளி அளவு கூட காருக்கு உள்ளே வரவில்லை.

மேலும் இயந்திர அதிர்வு சத்தமும் காற்றின் உராய்வு சத்தம் போன்றவையும் கூட உள்ளுக்குள்ளே இல்லை.

மிக மெதுவான குரலில் பேசினாலும் கேட்கின்ற அளவிற்கு நிசப்தம் ஏசி இயங்குவது அதன் குளிரில் மட்டும்தான் தெரிகிறது ஒழிய ப்ளோயர் சத்தமும் கூட உள்ளுக்குள் இல்லை.

ஒரு ஹீலியம் வாயு நிரப்பிய பலூனின் எடையளவுக்கு ஸ்டீயரிங் வலு காண்பித்தல் போதுமானது. வாயை குவித்து ஊதினால் கூட ஸ்டீயரிங் திரும்பி விடும் அளவிற்கு மிக அதிசயமான வெகு இலகுவான ஃபெதர் டச் ஃபீலிங்.


நான் பணிபுரியும் அலுவலக அறையில்  ஏசி குளிர்வூட்டப்பட்ட அறையில் அமர்ந்து ஒரு லேப்டாப் கணினியில் இருப்பதைப் போல சென்று கொண்டிருந்தது.

இன்னும் அழுத்தி பாருங்க பாஸ்! என்றதும் 110/ 120/125 வரையிலும் வேகம் எடுக்கும் சமயம் இயக்கும் நமக்குத்தான் படபடப்பு அதிகரிக்கிறதே காரில் படபடப்பு இல்லை.

எந்த கியரில் செல்கிறோம்?

எவ்வளவு வேகத்தில் செல்கிறோம்?

எந்த வேகத்தில் எந்த கியர் மாற்ற வேண்டும்?என்றெல்லாம் கணினி ஒவ்வொரு துளியாக மானிட்டர் செய்து கொண்டிருக்கிறது.

ப்ளு டூத் இணைப்புடன் கூடிய ஆடியோ அபாரமாக இருக்கிறது.

நகரத்து சாலைகளில் போடப்பட்ட மிகப்பெரிய வேகத்தடைகளில் கூட இரண்டாவது கியரில் ஒரு திணறலும் இல்லாமல் மெதுவாக ஏறி இறங்குகிறது.

நான்கு பேர் அமர்ந்து செல்லும் வாகனத்தில் நகர்த்து நெரிசல்களில் நான்காவது கியரில் கூட என்ஜின் திணறாமல் கியர்பாக்ஸ் இடிக்காமல் இயங்குகிறது.

மனிதர்களின் உயர் அதிக பாதுகாப்புக்காக ஏர் பேக்.

கார் இயங்கி நகரத் துவங்கியவுடன் ஆட்டோமேட்டிக் டோர் லாக்.

சீட் பெல்ட் வார்னிங் .

80 கிலோமீட்டருக்கு மேலே சென்றால் அதிவேக எச்சரிக்கை.

ரிவர்ஸ் பார்க்கிங் சமயம் சென்சார்கள்.

கிளட்ச் மிதித்து அதன் பின்னே வாகனத்தை உயிரூட்டும் முறை என்று பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் தவிர வாகனத்தில் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் உடனடி நிலை நேரத்திற்கு வரும்படியான அகலமான டயர்கள் மற்றும் ப்ரேக்கிங் சிஸ்டம் .

நாம் எதிர்பார்த்த தூரத்தை விட மிகக் குறைவான வேகத்திலேயே நின்று விடுவது மற்றும் ஒரு ஆச்சரிய பாதுகாப்பு விஷயம்.

அடுத்தபடியாக எவ்வளவு வேகத்திலும் இடதுபுற வலதுபுற வளைவுகளில் திரும்பும் சமயம் மைய நோக்கு விசையும் மைய விலக்கு விசையும் 90% உள்ளுக்குள் இருப்பவர்கள் மேலே நேரடியாக தாக்கம் இல்லாதபடிக்கு இதனை வடிவமைத்து இருக்கிறார்கள்.நன்றி R and D team.

இதனால் உள்ளுக்குள்ளே பயணிப்பவர்கள் மிகுந்த சௌகரியமாக உணர முடியும் கார எவ்வளவு வேகத்தில் திரும்பினாலும் சாலையை விட்டு விலக வாய்ப்பில்லை. கவிழவும் வாய்ப்பில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக காரில் ஏசி இயங்கி நான்கு வழிச்சாலையில் சென்றால் 18 கிலோமீட்டர் மைலேஜ் நகரத்து சாலைகளில் சென்று 16க்கு மேலே மைலேஜ் கிடைக்கிறது.

சில தினங்கள் கழித்து டாட்டா பஞ்ச் வாகனத்தின் ரிவ்யூ பார்த்தால் நான் நினைப்பது போலவே பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்திருந்தார்கள் .

எனவே எட்டு லட்சத்திற்கு 5 பேர் அமரக்கூடிய வாகனம் தெரிவு செய்ய விரும்பினால் டாட்டா பஞ்ச் ஒரு முறை இயக்கி பாருங்கள்.

Good products always come with price

நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்கு மிகப் பொருத்தமான கார் இந்த டாட்டா பஞ்ச்.

புதிய கார் வாங்குவதற்கு வாழ்த்துக்கள்.

நன்றி

வணக்கம்..என்றும் அன்புடன் சிவக்குமார் ...

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

தெய்வகுளம் காளியம்மன் அம்மன் ..ஆன்மீக பயணம் ..

தெய்வகுளம் காளியம்மன்  🥰❤️ ..ஆன்மீக பயணம் ..


கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள

சேத்துமடை அருள்மிகு தெய்வகுளம் காளியம்மன் கோவில்

பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக நம்பப்படுகிறது. 🙏

இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால்,

அம்மன் குழந்தை வடிவில் காட்சியளிப்பது! 

இந்த தலத்தில் வேண்டினால்:

✨ தொழில் முன்னேற்றம்

✨ குழந்தை வரம்

✨ வீடு கட்டும் ஆசை

நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர் 🙏

மேலும், சப்தகண்ணிமார்கள் சந்நிதியும் இங்கு உள்ளது.தமிழ்புத்தாண்டு, நவராத்திரி விழா🥰

இக்கோயிலில் தெய்வகுளம் காளியம்மன் சன்னதியும், கன்னிமார், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.


இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா திருவிழாவாக நடைபெறுகிறது.📚🖋️📡🎙️🌈🤝🏠❤️🥰என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 🌈🏠











ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

பணத்தினுடைய மிகச்சிறந்த விதிகள் என்னென்ன?

 

  • பணத்தினுடைய மிகச்சிறந்த விதிகள் என்னென்ன? என்றால் பணத்தைப் பத்தி பெரிய பெரிய புக்ல இருக்குற தத்துவங்களை விட, நம்ம நிஜ வாழ்க்கைக்குத் தேவையான சில "அன்ரிட்டன் ரூல்ஸ்" இருக்கு.
  • நீங்க ஒரு மாசத்துக்கு ஒரு லட்சம் சம்பாதிச்சாலும், அதுல 90 ஆயிரம் செலவு செஞ்சா நீங்க பணக்காரர் இல்லை. ஆனா 30 ஆயிரம் சம்பாதிச்சு அதுல 10 ஆயிரம் சேமிக்கிறவங்கதான் உண்மையாவே நிபுணர். "எவ்வளவு வருதுங்கிறதை விட, எவ்வளவு தங்குது" அப்படிங்கிறதுதான் பணத்தோட முதல் விதி.
  • ஒரு பொருள் கடையில அழகா இருக்கு, இல்ல மத்தவங்க வச்சிருக்காங்கன்னு வாங்குறது 'ஆசை'. அது இல்லாம உங்க வாழ்க்கை ஓடாதுன்னு வாங்குறது 'தேவை'. ஆசைக்காக அனாவசியமா செலவு செஞ்சா, சீக்கிரமே தேவைகளுக்காகக் கடன் வாங்க வேண்டிய நிலைமை வரும்.
  • அவசர தேவைக்கு வாங்குற கடன் ஓகே. ஆனா ஒரு போன் வாங்கவோ, கார் வாங்கவோ இல்ல ஆடம்பரத்துக்காகவோ வாங்குற கடன் உங்களை மெதுவா அரிச்சிடும். முடிஞ்ச வரைக்கும் "கையில காசு இருந்தா பொருள், இல்லன்னா பொறுமை" - இதுதான் கடன் இல்லாத வாழ்வுக்கு வழி.
  • எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில வைக்காதீங்கன்னு சொல்லுவாங்க. பணத்தை வெறும் பேங்க் அக்கவுண்ட்ல மட்டும் வைக்காம, தங்கம், நிலம் இல்ல நல்ல ஸ்கீம்ஸ்ல பிரிச்சு முதலீடு செய்யணும். பணம் சும்மா இருக்கக்கூடாது, அது உங்களுக்காக வேலை செஞ்சு இன்னும் கொஞ்சம் பணத்தை ஈட்டித் தரணும்.
  • வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. திடீர்னு வேலை போகலாம் இல்ல உடம்பு முடியாம போகலாம். அந்த மாதிரி நேரத்துல யார்கிட்டயும் கையேந்தாம இருக்க, ஒரு 6 மாச செலவுக்குத் தேவையான காசை எப்பவும் தனியா எடுத்து வச்சுக்கணும். இது தர்ற நிம்மதியே தனி.
  • பணத்தை விட பெரிய சொத்து உங்களுடைய அறிவும் திறமையும்தான். புதுசா ஏதாச்சும் கத்துக்கிறதுக்கோ, உங்க திறமையை வளர்த்துக்கவோ செலவு செய்யுறது என்னைக்குமே வீண் போகாது. அதுதான் பிற்காலத்துல அதிகப்படியான வருமானத்தைத் தரும்.
  • பணம்ங்கிறது ஒரு நல்ல வேலைக்காரன், ஆனா மோசமான எஜமானன். நீங்க பணத்தை ஆள கத்துக்கிட்டா அது உங்களுக்கு வேலை செய்யும். அது உங்களை ஆள ஆரம்பிச்சா, நீங்க அதுக்கு அடிமை ஆயிடுவீங்க.
  • எப்பவும் கையில கொஞ்சம் காசு, மனசுல கொஞ்சம் நிதானம் இருந்தா பணம் என்னைக்குமே ஒரு சுமையா இருக்காது!

சனி, 11 ஏப்ரல், 2026

வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி ...பங்குனிமாத தரிசனம் மகிழ்ச்சி ...ஆன்மீக பயணம் ..

 
























எனது ஆன்மீக பயணம் உடுமலையில் இருந்து எனது மதிப்புமிகு அரசு போக்குவரத்து கழக  மேலாண்மை இயக்குனர் தங்கவேலு (பணி ஓய்வு )அவர்களுடன் ...

ஜேசிபி செந்தில்குமார் குடும்பத்தாருடன் ...

வங்கி மேலாளர் ஜெயராமன் குடும்பத்தாருடன் .....

டைல்ஸ் ராமு குடும்பத்தாருடன் ....வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி அருளாசி பெற சென்று வந்தது மிக்க மகிழ்ச்சி ..

கோட்டைப்பட்டியில் இறங்கியவுடன் நம்ம வரவேற்றது வீர ராஜகம்பளம் தம்பியை தான் முதலில் சந்தித்தேன் ...தம்பி முகநூலில் நமது கம்பள நிகழ்வுகளை அழகாக அற்புதமாக பகிர்வுது நம் கண்முன்னே கொண்டுவருவது மிக்க மகிழ்ச்சி ..

ராஜாவூர் மாப்பிளை ஈஸ்வரன் அவர்களுடன் சந்தித்து கலந்துரையாடியது மகிழ்ச்சி ..

அருகிலேயே இருந்தாலும் வேலை பணிப்பளு காரணமாக சந்திக்க முடியாவிட்டாலும் கோவில் நிகழ்வுகளில் டாடா ஏஸ் மாசித்துரை தம்பியுடன் கலந்துரையாடியது ...

வேடசந்தூர் மாப்பிள தங்கபாண்டியன் மாப்பிள்ளையை சந்தித்தது மகிழ்ச்சி .

கோவை தமிழ்நாடு அரசு மின்வாரிய பொறியாளர் பெருமாள்சாமி அவர்களை சந்தித்து உரையாடியது ...

தேனி சொந்தம் அன்பழகன் சாமிக்கண்ணு வருடம் வருடம் தவறாமல் சந்திக்கும் இனிக்க இனிக்க தேன் சொந்தம் .நமது மதிப்பு மிகு புது புது  சொந்தங்களை எனக்கு அறிமுக படுத்தும் சொந்தம் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி .

தேனீ முருகன் மல்லையா குடும்பத்தாரை சந்தித்தது மகிழ்ச்சி ..

கோட்டைப்பட்டி வத்தலகுண்டு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் சுவாமி..தல வரலாற்றின் ஆசிரியர் ம .வீரசின்னம்மாள் புரம் மேனாள் புள்ளியியல் துணை இயக்குனர் மு .சீனிவாசன்  (பணி ஒய்வு ) அவர்களை சந்தித்தது ..தல வரலாற்றை அடுத்த பதிப்புக்கு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார் ..இது போன்ற வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வது மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள் ...

காந்தி கிராம பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் முனைவர் .முத்தையா அவர்களை சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியே ...

நமது கோவிலில் பணிபுரியும் கம்பள சொந்தங்களை சந்தித்து கலந்து உரையாடியது  மகிழ்ச்சி ..

எனது வாழ்வின் இக்கட்டான சூழ்நிலைகளில் எனக்கு உதவும் நான் வணங்கும் குலதெய்வத்திற்கு மிக்க நன்றி .....

நாளையும்  தொடரும் ஆன்மீக பயணகட்டுரை ......

என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 



வியாழன், 2 ஏப்ரல், 2026

கூர்க் ,கர்நாடக ......இனிமையான பயணம் ....

 வரலாற்று சிறப்புமிக்க ....


கூர்க் ,கர்நாடக ......இனிமையான பயணம் ....


கூர்க் மாவட்டத்தின் தலைநகரான மடிகேரி அல்லது மெர்கரா, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள ஒரு அழகான பெரிய மலை நகரமாகும். இந்த மலைவாசஸ்தலம் கடல் மட்டத்திலிருந்து 1452 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பசுமையான மரங்கள் நிறைந்த சரிவுகள், வண்ணமயமான இயற்கைக்காட்சிகள், பனிமூட்டமான மலைகள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள், தேயிலை, காபி மற்றும் மசாலாப் பொருட்கள் தோட்டங்கள் ஆகியவை இந்த இடத்தை இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாக மாற்றியுள்ளன.

மனதை மயக்கும் இந்த அழகான இடம், 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் 'தெற்கின் காஷ்மீர்' என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. மடிக்கேரியிலும் அதைச் சுற்றியும் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன..

அபே நீர்வீழ்ச்சி அல்லது அபி நீர்வீழ்ச்சி, மடிக்கேரி நகரத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி அதன் இயற்கை அழகுக்காகப் புகழ் பெற்றது. இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், மேலும் முற்காலத்தில் ஜெஸ்ஸி நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்பட்டது.

காபித் தோட்டங்கள் மற்றும் மசாலாத் தோட்டங்களின் இயற்கை பசுமைக்கு நடுவே அமைந்துள்ள அபே நீர்வீழ்ச்சி, பிரமிக்க வைக்கும் அழகையும் அமைதியான சாந்தத்தையும் கொண்டுள்ளது. இந்த நீர்வீழ்ச்சி ஒரு வனப்புமிக்க அழகைக் கொண்டுள்ளது. பாறைகளின் மீது நீர் வழிந்து குளத்தில் விழுகிறது. நீர்வீழ்ச்சியின் கர்ஜனை ஒலியைச் சாலையிலிருந்தே கேட்க முடிகிறது.

பருவமழைக் காலத்தில் நீர்வரத்து மிக அதிகமாகவும், வறண்ட காலங்களில் குறைவாகவும் இருக்கும். இங்குள்ள ஒரு தொங்கு பாலம், இந்த நீர்வீழ்ச்சியின் அற்புதமான காட்சியை வழங்குகிறது. அபே நீர்வீழ்ச்சியைப் பார்வையிட சிறந்த நேரம் குளிர்காலத்தின் தொடக்கமாகும்...

சிக்லிஹோல் நீர்த்தேக்கத்திற்குச் சென்று பார்க்க வேண்டும். பிரபலமான சுற்றுலாத் தலங்களில் காணப்படும் வழக்கமான கூட்டத்திலிருந்து விலகி அமைந்துள்ள இந்த இடம், பார்வையாளர்களுக்கு அமைதியையும் சாந்தியையும் வழங்குகிறது. அணையின் நீர் அழகாகப் பாய்வதும், சுற்றியுள்ள பகுதியின் பசுமையும் புத்துணர்ச்சியான சூழலை உருவாக்குகின்றன.

'சிக்லி-ஹோலி' என உச்சரிக்கப்படும் சிக்லிஹோலே நீர்த்தேக்கம், கூர்க் மாவட்டத்தின் மடிகேரி மற்றும் குஷால்நகர் நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கம் குஷால்நகர் மற்றும் மடிகேரியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளதுடன், நஞ்சராயப்பட்டணா நகரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.

காவேரி ஆற்றின் துணை நதிகளில் ஒன்றில் அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம், மற்ற சுற்றுலாத் தலங்களைப் போலல்லாமல், சுற்றுலாப் பயணிகளுக்குத் தனிமையையும் அந்தரங்கத்தையும் வழங்குகிறது. அடர்ந்த காடும், செழிப்பான தாவர மற்றும் விலங்கினங்களும் இவ்விடத்தின் அழகை மேலும் கூட்டுகின்றன. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலம் என்பதால், குடும்பத்துடன் வெளியே செல்வதற்கும் மிகவும் ஏற்றது. அற்புதமான இயற்கை அழகைக் கொண்ட இந்த இடம், புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு சொர்க்கம் போன்றது. இங்கிருந்து காணும் சூரிய அஸ்தமனக் காட்சி மனதைக் கவரும் வகையில் உள்ளது, அதுவே ஒரு தனி அனுபவமாகும்.

அருகில் கடைகள் எதுவும் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் நீர்த்தேக்கத்தைப் பார்வையிடும்போது அனைத்து அடிப்படை வசதிகளையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். இவ்விடத்தைப் பார்வையிட சிறந்த நேரம், பருவமழை மற்றும் குளிர்காலமான ஜூன் முதல் மார்ச் வரையிலான மாதமாகும்.

இந்த நீர்த்தேக்கம், சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள துபரே வனக் காப்பகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. மலையேற்றம் மற்றும் இயற்கை நடைப்பயணங்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும் அந்த வனக் காப்பகத்திற்கும் ஒருவர் சென்று வரலாம்.

துபரே யானைகள் முகாம், கர்நாடக மாநிலத்தின் கூர்க் மாவட்டத்தில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த முகாம், உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக வனவிலங்கு ஆர்வலர்களை ஈர்க்கிறது. இது சுற்றுலாப் பயணிகளுக்கு யானைகளுக்கு அருகில் இருப்பதற்கும், அவை தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

துபாரேயில் உள்ள யானைகள் முகாம் என்பது வனத்துறை மற்றும் ஜங்கிள் லாட்ஜஸ் அண்ட் ரிசார்ட்ஸ் இணைந்து மேற்கொண்ட ஒரு திட்டமாகும். இங்கு யானைகளுடன் பழகுவது மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகள் மறக்க முடியாத சில நாட்களைக் கழிப்பதற்காக, பசுமையான தாவரங்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலைக் கொண்ட மனதைக் கவரும் இயற்கை அமைப்புகளையும் அனுபவிக்கின்றனர்.

முன்னர் இந்த இடத்தில் மைசூர் தசராவுக்காக யானைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் இப்போது அவை பெரும்பாலும் காட்டுச் சவாரிகள் மற்றும் பிற நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுக்கு இயற்கை ஆர்வலர்களின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பெற்ற இயற்கை ஆர்வலர்கள், யானைகளின் வரலாறு, சூழலியல் மற்றும் உயிரியல் குறித்த விவரங்களுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுகிறார்கள். இந்த முகாமைத் தனித்துவமாக்குவது என்னவென்றால், சுற்றுலாப் பயணிகள் யானைகளுடன் மூன்று மணி நேரக் கலந்துரையாடல் போன்ற பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்பதே ஆகும்.

அவர்கள் 45 நிமிட குளியல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். இதில், காவேரி ஆற்றில் யானைகளுக்குக் குளிப்பாட்டவும், ராகி, வெல்லம், கரும்பு, வாழைப்பழம் மற்றும் தேங்காய்களை ஊட்டவும் அவர்களுக்கு அனுமதி உண்டு. இதற்குப் பிறகு, அவர்கள் காட்டுக்குள் 45 நிமிட யானை சவாரி செல்லலாம்.

சுற்றுலாப் பயணிகளுக்கான யானை சவாரிகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 5 மணி வரையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விருப்பமிருந்தால், ஜங்கிள் லாட்ஜஸ் & ரிசார்ட்ஸின் ஒரு பகுதியாக உள்ள குடில்களிலும் தங்கலாம். இந்தக் குடில்கள் பசுமையான சூழல் மற்றும் வன இயற்கையின் மத்தியில் வசதியான தங்குமிடத்தை வழங்குகின்றன.


ஒரு சுவாரஸ்யமான சுற்றுலாத் தலமான ஹரங்கி அணை, கூர்க் மாவட்டத்தின் குஷால்நகர் அருகே உள்ள ஹுட்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது. காவேரி ஆற்றின் துணை நதியின் குறுக்கே கட்டப்பட்ட ஹரங்கி அணை, காவேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் அணையாகும். 47 மீட்டர் உயரமும் 846 மீட்டர் நீளமும் கொண்ட இந்த அணை, சீறிப்பாயும் நீரின் அற்புதமான காட்சியை உருவாக்குகிறது.

இது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். மேலும், இங்கு ஒருவர் தனது அன்புக்குரியவர்களுடன் ஓய்வெடுத்து, அமைதியான தருணங்களைச் செலவிடலாம். இது மடிக்கேரியிலிருந்து சுமார் 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, மேலும் இதை அதிக சிரமமின்றி சென்றடையலாம்.

ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவாக இருப்பதால், இது தனிமையையும் அந்தரங்கத்தையும் வழங்கும் ஒரு நல்ல இடமாகும். எனவே, சுற்றுலாத் தலங்களின் வழக்கமான பரபரப்பிலிருந்து நீங்கள் ஒரு மாற்றத்தைத் தேடுகிறீர்கள் என்றால், ஹரங்கி அணை உங்களுக்கு ஏற்ற இடமாகும். அமைதியான சூழலும், இதமான குளிர் காற்றும் உங்கள் நேரத்தை மேலும் இனிமையாக்கும். ஆண்டின் அந்த நேரத்தில் நீர்த்தேக்கத்தில் நீர் அதிகமாக இருப்பதால், ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் அணைக்குச் செல்வது சிறந்தது.

நீங்கள் ஓரிரவு அல்லது அதற்கு மேல் தங்க விரும்பினால், இங்குள்ள தங்குமிட வசதிகளைத் தேர்வு செய்யலாம். பொதுப்பணித் துறையில் முன்பதிவு செய்த பிறகு சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக, இங்குள்ள விருந்தினர் இல்ல வசதிகளையும் அவர்கள் தேர்வு செய்யலாம்.

இயற்கை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஆன்மீக சுற்றுலாப் பயணிகளுக்கும் இங்கு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அணைக்கு மிக அருகில் அமைந்துள்ள காவேரி கோயில், கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஓர் இடமாகும்....

ஹொன்னமான கேரே (ஹொன்னமா ஏரி) (கன்னடம்: ಹೊನ್ನಮ್ಮನ ಕೆರೆ) கூர்க்கில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். கூர்க் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஏரியாக இருப்பதால், ஹொன்னமான கேரே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது சோம்வார்பேட்டை நகரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சுலிமால்தே கிராமத்திற்கு அருகில், தட்டமால்தேவில் அமைந்துள்ளது. சோம்வார்பேட்டை கூர்க்கின் தாலுக்காக்களில் ஒன்றாகும்.

இந்த ஏரி இயற்கை ஆர்வலர்களை மட்டுமல்ல, ஆன்மீக சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது. இது மத முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஹொன்னம்மா தேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. ஏரிக்கு அருகில் அமைந்துள்ள ஹொன்னம்மா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலையும் காணலாம்.

மக்களின் நலனுக்காக ஹொன்னம்மா தேவி தன் உயிரைத் தியாகம் செய்ததாக நம்பப்படுகிறது. குறிப்பாக கௌரி பூஜை பண்டிகையின் போது இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். புதிதாகத் திருமணமான பல தம்பதிகள் ஏரிக்கு வந்து, தங்கள் காணிக்கைகளைச் செலுத்தி, தேவியின் ஆசிகளைப் பெறுகிறார்கள்.

இந்த ஏரி மனதைக் கவரும் இயற்கை அழகையும் வழங்குகிறது. இது ஒருவர் தங்கள் அன்புக்குரியவர்களுடன் நிம்மதியாக ஓய்வெடுத்து, இனிமையான தருணங்களை அனுபவிக்கக்கூடிய ஓர் இடமாகும். இதைச் சுற்றி மலைகள், செங்குத்துப் பாறைகள், பரந்து விரிந்த காபித் தோட்டங்கள் மற்றும் காவி பெட்டா, மோரி பெட்டா என்ற இரண்டு குன்றுகளும் உள்ளன. சுற்றிப் பார்ப்பதுடன், படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல்வேறு வகையான வெளிப்புறச் செயல்பாடுகளிலும் ஒருவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

ஏரியில் சிறிது நேரம் மகிழ்ச்சியாகக் கழித்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் சோம்வார்பேட்டை நகரில் உள்ள மற்ற அழகான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம். மல்லள்ளி நீர்வீழ்ச்சி மற்றும் புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை பார்க்க வேண்டிய சில இடங்களாகும்.

மடிக்கேரியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலான ஓம்காரேஸ்வரர் கோயில், 1820-ஆம் ஆண்டில் லிங்க ராஜேந்திரனால் கட்டப்பட்டது. மடிக்கேரியிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில், ஒரு கட்டிடக்கலைச் சிறப்புமிக்க இடமாகும். இக்கோயில் இஸ்லாமிய மற்றும் கோதிக் ஆகிய இருவகை கட்டிடக்கலைப் பாணிகளையும் கொண்டுள்ளது.

கோயிலுக்கு முன்னால் ஒரு அற்புதமான குளம் உள்ளது. கோயிலைச் சுற்றி நான்கு மினாரட்டுகளும், அதன் மையத்தில் ஒரு குவிமாடமும் உள்ளன. ஒரு நடைபாதை மண்டபத்திற்குச் செல்கிறது. இங்குள்ள சிவலிங்கத்திற்கு ஓம்காரேஸ்வரர் என்று பெயரிடப்பட்டது. இங்கு வழக்கமான சடங்குகள் நடத்தப்பட்டன...

கூர்க் பகுதியின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கோட்டேபெட்டா, தடியண்டமோல் மற்றும் பிரம்மகிரிக்கு அடுத்தபடியாக கூர்க் பிராந்தியத்தில் மூன்றாவது உயரமான சிகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1620 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோட்டேபெட்டா, சோம்வார்பேட்டை மற்றும் மடிக்கேரி நகரங்களுக்கு இடையில் உள்ள மாதாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தட்சிண கன்னடா மற்றும் கூர்க் மாவட்டங்களின் எல்லையில் இருப்பதால், பெரிய சிரமமின்றி எளிதாகச் சென்றடையலாம்.

கோட்டேபெட்டா என்ற பெயர், 'கோட்டை மலை' என்று பொருள்படும் 'கோட்டே பெட்டா' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. ஏனெனில், அந்த மலை தோற்றத்தில் ஒரு கோட்டையைப் போல் உள்ளது. மேலும், அந்த மலையின் உச்சியில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் அமைந்துள்ளது.

கோட்டேபெட்டா சுற்றுலாப் பயணிகளுக்கு அற்புதமான மலையேற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. இது ஹட்டிஹோலிலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஹட்டிஹோலிலிருந்து தங்கள் மலையேற்றத்தைத் தொடங்கி, உச்சியில் அதை நிறைவு செய்கிறார்கள். உங்கள் மலையேற்றப் பயணத்தில், பசுமையான சூழலும், குறிப்பாகப் பரந்து விரிந்த காபித் தோட்டங்களும் உங்களை வரவேற்கின்றன.

மனதைக் கவரும் இயற்கைச் சூழல்கள், மலையேற்றத்தை மேலும் இன்பமானதாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் ஆக்குகின்றன. சிகரம் சுற்றியுள்ள பகுதியின் மயக்கும் காட்சியை வழங்குவதால், அந்த மலையேற்ற முயற்சிகளுக்கெல்லாம் அது தகுதியானதாக அமைகிறது.

கோட்டேபெட்டாவில் மலையேற்றம் செல்ல அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் சிறந்த நேரமாகும். இந்த இடத்தில் மலையேற்றம் செல்ல அதிகாரிகளிடமிருந்து எந்த அதிகாரப்பூர்வ அனுமதியும் தேவையில்லை. மலையேற்றம் செல்லும்போது, ​​உங்களுடன் ஒரு வழிகாட்டி இருப்பது நல்லது.

டார்ச் விளக்கு போன்ற தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் செல்லுங்கள்; பொருத்தமான காலணிகளை அணியுங்கள், பூச்சி விரட்டிகளுடன் ஒரு முதலுதவிப் பெட்டியையும் எடுத்துச் செல்லுங்கள்...

கூர்க்கில் நீங்கள் தவறவிடக்கூடாத சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மடிகேரி கோட்டை. 17 ஆம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில் முத்தூராஜாவால் முதன்முதலில் கட்டப்பட்ட மடிகேரி கோட்டை, பின்னர் திப்பு சுல்தானால் கற்கள் மற்றும் செங்கற்களால் புதுப்பிக்கப்பட்டு, அக்கோட்டைக்கு ஜாஃபராபாத் எனப் பெயரிடப்பட்டது. இக்கோட்டை ஒரு வளமான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், பல போர்களையும் வாரிசுரிமைகளையும் கண்டுள்ளது.

1790-ல் இது தொட்டவீர ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர், இரண்டாம் லிங்கராஜேந்திர உடையார் மன்னரால் இது புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர்களும் இந்தக் கோட்டையை இரண்டு முறை புனரமைத்தனர். 1933-ஆம் ஆண்டில், ஆங்கிலேயர்கள் கோட்டை வளாகத்தில் ஒரு கடிகாரக் கோபுரத்தையும், ஆணையரின் காரை நிறுத்துவதற்கான ஒரு முகமண்டபத்தையும் சேர்த்தனர். தற்போது, ​​இந்தக் கோட்டை துணை ஆணையரின் அலுவலகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கோட்டையின் பத்தாவது நுழைவாயிலில், சாந்தினால் செய்யப்பட்ட இரண்டு முழு உருவ யானைகளைக் காண்பீர்கள். கோட்டைக்குள் வீரபத்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயிலும் இருந்தது, அது பின்னர் 1855 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அகற்றப்பட்டது. அதன் இடத்தில் அவர்கள் ஒரு ஆங்கிலிக்கன் தேவாலயத்தைக் கட்டினார்கள், அதுவும் ஒரு அழகான கட்டிடக்கலைப் படைப்பாகும்.

இந்த தேவாலயம் கோதிக் பாணியிலான அழகான கட்டிடக்கலையைக் கொண்டுள்ளது. இந்த தேவாலயம், சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு வகையான பழம்பொருட்களைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் அல்ல; இது மாநில தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்தக் கோட்டையில் மகாத்மா காந்தி பொது நூலகம், கோட்டை மகா கணபதி கோயில் மற்றும் மாவட்ட சிறைச்சாலை போன்ற பல கட்டிடங்களும் உள்ளன. கோட்டை மகா கணபதி கோயில், மடிக்கேரி தசரா விழாவில் பங்கேற்கும் கோயில்களில் ஒன்றாகும்...

புஷ்பகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மல்லல்லி அருவி, கூர்க்கில் நேரத்தைச் செலவிடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். இது கூர்க் மாவட்டத்தின் தாலுக்காக்களில் ஒன்றான சோம்வார்பேட்டையின் பெட்டடஹள்ளி கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 அடிக்கும் அதிகமான உயரமுள்ள புஷ்பகிரி சிகரத்தின் உச்சியிலிருந்து குமாரதாரா ஆறு வழிந்தோடும்போது மல்லல்லி அருவி உருவாகிறது.

இந்த நீர்வீழ்ச்சிகள் மலையேற்றத்திற்கும் ஏற்றவை. மலையேறுபவர்கள், சுற்றியுள்ள அழகான சூழல்களுடன் கூடிய சுவாரஸ்யமான பாதைகளைக் காண்பார்கள், இது அந்த அனுபவத்தை மேலும் சுவாரசியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்குகிறது. இருப்பினும், பாதைகளில் நிறைய அட்டைகள் இருப்பதால், மலையேற்றத்தின் போது அவற்றுக்குத் தயாராக இருப்பது நல்லது. புஷ்பகிரி சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளும், சிகரம் வரையிலான மலையேற்றமும், உங்கள் ஒட்டுமொத்த கூர்க் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

மல்லள்ளி நீர்வீழ்ச்சியை அடைய, அருகிலுள்ள எந்தவொரு நகரத்திலிருந்தும் ஒரு தனியார் வாடகைக் காரை அமர்த்திக்கொள்ளலாம். இந்த நீர்வீழ்ச்சி சோம்வார்பேட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், குஷால்நகரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தனியார் போக்குவரத்தில் விருப்பமில்லையென்றால், நீங்கள் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சோமவார்பேட்டையிலிருந்து அருவிக்குத் தண்ணீர் கொண்டு செல்ல, அருகிலுள்ள கிராமமான ஹஞ்சினல்லியிலிருந்து பேருந்துகள் கிடைக்கும். மற்றொரு கிராமமான பிடல்லியும் அருவியிலிருந்து வெறும் 2.3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலும் அதனை எந்த நகரத்திலிருந்தும் சென்றடையலாம்.

அருவியைப் பார்வையிட சிறந்த நேரம் பருவமழைக் காலமாகும், அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள். பருவமழைக் காலத்தில், அருவியில் அதிக நீர் இருப்பதால் அது மேலும் அழகாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் காட்சியளிக்கும். இந்தக் காலகட்டத்தில் சுற்றியுள்ள பசுமையும் அதன் உச்சத்தில் இருக்கும்....

புஷ்பகிரி மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைந்துள்ள மல்லல்லி அருவி, கூர்க்கில் நேரத்தைச் செலவிடுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாகும். இது கூர்க் மாவட்டத்தின் தாலுக்காக்களில் ஒன்றான சோம்வார்பேட்டையின் பெட்டடஹள்ளி கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. சுமார் 200 அடிக்கும் அதிகமான உயரமுள்ள புஷ்பகிரி சிகரத்தின் உச்சியிலிருந்து குமாரதாரா ஆறு வழிந்தோடும்போது மல்லல்லி அருவி உருவாகிறது.

இந்த நீர்வீழ்ச்சிகள் மலையேற்றத்திற்கும் ஏற்றவை. மலையேறுபவர்கள், சுற்றியுள்ள அழகான சூழல்களுடன் கூடிய சுவாரஸ்யமான பாதைகளைக் காண்பார்கள், இது அந்த அனுபவத்தை மேலும் சுவாரசியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் ஆக்குகிறது. இருப்பினும், பாதைகளில் நிறைய அட்டைகள் இருப்பதால், மலையேற்றத்தின் போது அவற்றுக்குத் தயாராக இருப்பது நல்லது. புஷ்பகிரி சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளும், சிகரம் வரையிலான மலையேற்றமும், உங்கள் ஒட்டுமொத்த கூர்க் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.

மல்லள்ளி நீர்வீழ்ச்சியை அடைய, அருகிலுள்ள எந்தவொரு நகரத்திலிருந்தும் ஒரு தனியார் வாடகைக் காரை அமர்த்திக்கொள்ளலாம். இந்த நீர்வீழ்ச்சி சோம்வார்பேட்டையிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், குஷால்நகரிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தனியார் போக்குவரத்தில் விருப்பமில்லையென்றால், நீங்கள் பொதுப் போக்குவரத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சோமவார்பேட்டையிலிருந்து அருவிக்குத் தண்ணீர் கொண்டு செல்ல, அருகிலுள்ள கிராமமான ஹஞ்சினல்லியிலிருந்து பேருந்துகள் கிடைக்கும். மற்றொரு கிராமமான பிடல்லியும் அருவியிலிருந்து வெறும் 2.3 கி.மீ. தொலைவில் உள்ளது, மேலும் அதனை எந்த நகரத்திலிருந்தும் சென்றடையலாம்.

அருவியைப் பார்வையிட சிறந்த நேரம் பருவமழைக் காலமாகும், அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்கள். பருவமழைக் காலத்தில், அருவியில் அதிக நீர் இருப்பதால் அது மேலும் அழகாகவும் புத்துணர்ச்சியூட்டுவதாகவும் காட்சியளிக்கும். இந்தக் காலகட்டத்தில் சுற்றியுள்ள பசுமையும் அதன் உச்சத்தில் இருக்கும்...

அபே நீர்வீழ்ச்சிக்கு 4 கி.மீ முன்பு அமைந்துள்ள மண்டல்பட்டி, மடிக்கேரி நகரத்திலிருந்து 25-30 கி.மீ தொலைவில் உள்ளது. அற்புதமான இயற்கை அழகையும், மிகச்சிறந்த இயற்கைச் சூழலுக்கு மத்தியில் இருப்பதற்கான சரியான வாய்ப்புகளையும் வழங்குவதால், மண்டல்பட்டி சுற்றுலாப் பயணிகளிடையே அதிகளவில் பிரபலமடைந்து வருகிறது.

இந்த இடம், சுற்றுலாத் தலங்களின் வழக்கமான கூட்ட நெரிசலிலிருந்து விலகி, சுற்றுலாப் பயணிகளுக்கு ஓரளவு தனிமையையும் இடத்தையும் வழங்குகிறது. மலையேற்றப் பிரியர்களுக்கும், சாகசத்தை விரும்புபவர்களுக்கும், சிறந்த இயற்கைச் சூழலைத் தேடுபவர்களுக்கும் இந்த இடம் மிகவும் பொருத்தமானது. மலையேற்றம் செல்வதற்கு, மலையேறுபவர்கள் மண்டல்பட்டியில் உள்ள அதிகாரிகளிடமிருந்து நுழைவுச் சீட்டுகளைப் பெற வேண்டும்.

இந்த மலையேற்றப் பயணம், மலையேறுபவர்களுக்கு அழகான இயற்கை காட்சிகளையும், செழிப்பான தாவர மற்றும் விலங்கினங்களையும் வழங்குகிறது. இருப்பினும், செல்லும் வழியில் எந்தவிதமான வசதிகளும் இருக்காது. எனவே, தண்ணீர், உணவு மற்றும் மலையேற்றத்திற்கான பிற உபகரணங்களை உங்களுடன் எடுத்துச் செல்வது நல்லது.

மண்டல்பட்டியை அடைய, சுற்றுலாப் பயணிகள் புகழ்பெற்ற அபே நீர்வீழ்ச்சிக்கு 4 கி.மீ. முன்பாக உள்ள மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும். மண்டல்பட்டிக்கு பேருந்து சேவை இல்லை, எனவே ஒருவர் தனது சொந்த வாகனத்தை வாடகைக்கு அமர்த்த வேண்டியிருக்கும். பாதை முழுமையாக மேம்படுத்தப்படாததால், அது அபாயகரமானதாகவும் வழுக்கும் தன்மையுடையதாகவும் இருக்கக்கூடும் என்பதால், மழைக்காலத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

நவம்பர் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் இங்கு வருகை தருவது சிறந்தது. இந்தக் காலகட்டத்தில் இவ்விடம் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தாலும், மண்டல்பட்டி ஒரு ரம்மியமான சூழலை வழங்குகிறது. மண்டல்பட்டியின் உச்சியிலிருந்து சுற்றியுள்ள பகுதியின் காட்சியைக் கண்டு நீங்கள் பிரமித்துப்போவீர்கள்....

கூர்க் பிராந்தியத்தின் கக்கபே நகரில், யவக்கபாடி என்ற கிராமத்திற்கு அருகில் நல்கநாடு அரமானே அமைந்துள்ளது. இது மடிக்கேரி நகரிலிருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது 1792 ஆம் ஆண்டில் ஹலேரி ஆட்சியாளரான தொட்ட வீரராஜேந்திரனால் கட்டப்பட்டது. பின்னர் 1796 ஆம் ஆண்டில், தொட்ட வீரராஜேந்திரர் இங்கு மகாதேவ் அம்மாஜியை மணந்தார்.

திப்பு சுல்தானின் படைகளிடமிருந்து தப்பித்த பிறகு அவர் இந்த அரண்மனையைக் கட்டினார். எனவே, இங்கிருந்து தொடங்கி மடிக்கேரியில் முடிவடையும் ஒரு சுரங்கப்பாதை அரண்மனைக்குள் அமைந்துள்ளது. அது ஒரு மலை உச்சியில் அமைந்திருந்ததும் ஒரு கூடுதல் சாதகமாக அமைந்தது.

பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைச் சித்தரிக்கும், அந்த இடத்தைப் பற்றிய பலவிதமான கதைகள் உள்ளன. கூர்க் மாவட்டத்தின் மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்த காலத்தில், ஹலேரி குடும்பத்தின் கடைசிப் பேரரசரான சிக்கவீர ராஜேந்திரனும் இங்கு தஞ்சம் புகுந்தார்.

இந்த அரண்மனை ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் என்பதால், இங்கு வந்து பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகும். இதன் கூரைகளும் சுவர்களும் பல பழங்கால ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தில் ஒரு மிகப்பெரிய நுழைவாயில் உள்ளது. அரண்மனையின் உள்ளே, திருமண விழாக்களை நடத்துவதற்கான மேடையான கல்யாண மண்டபம் ஒன்றைக் காணலாம்.

அந்த இடத்தின் தர்பாருக்குத் தனி வசீகரம் உண்டு. இங்கு மன்னர்கள் தங்கள் சந்திப்புகளை நடத்துவதுடன், கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளிப்பார்கள். அரண்மனையின் அடித்தளத்தில், இரண்டு 'இருட்டறைகள்' உள்ளன. இந்த அறைகள் மன்னர் ஒளிந்துகொள்ளும் இடமாகப் பயன்படுத்தப்பட்டன....

அதிகம் அறியப்படாத ஆனால் அற்புதமான சுற்றுலாத் தலமான நேரு மண்டபம், மடிக்கேரி நகரில் ராஜாஸ் சீட் அருகே அமைந்துள்ளது. இந்த மண்டபத்திலிருந்து மடிக்கேரி வானொலி நிலையத்தைப் பார்க்க முடிவதால், ஒரு அற்புதமான காட்சியைக் காணலாம். தொலைவில் உள்ள மலையின் காட்சியுடன், நகரின் வசீகரிக்கும் காட்சியையும் நீங்கள் காணலாம்.

இந்த இடம், குறிப்பாக இயற்கை ஆர்வலர்களுக்கு, கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். நீங்கள் வழக்கமான கூட்டம் மற்றும் பரபரப்பிலிருந்து விலகி, தனிமையில் சிறிது நேரம் செலவிட விரும்பினால், நேரு மண்டபம் உங்களுக்கு ஏற்ற இடமாகும். புத்துணர்ச்சியூட்டும் இயற்கைச் சூழலில், அமைதியான மற்றும் இதமான சூழ்நிலையை உருவாக்கி, அமைதியான மற்றும் நிம்மதியான நேரத்தை அனுபவியுங்கள். இங்கிருந்து சூரிய அஸ்தமனமும் சூரிய உதயமும் மிகவும் அழகாகக் காணப்படும், அவற்றை உங்கள் கேமராவில் படம்பிடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

மடிக்கேரி வானொலி நிலையத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ளதால், இந்த இடத்தை அடைவது மிகவும் எளிது. சுற்றுலாப் பயணிகள் சுமார் 25-30 படிகள் ஏற வேண்டும். ராஜாஸ் சீட்டிலிருந்து இங்கு வந்து சேர அதிகபட்சம் 10 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

இந்த இடம் அற்புதமான அமைதியையும் சாந்தியையும் அளிப்பதால், புத்துணர்ச்சி பெற இது மிகவும் உகந்த இடமாகும். இது குறிப்பாகக் கலைஞர்களுக்கான இடம் என்று பொதுவாகக் கூறப்படுகிறது; அவர்கள் இங்கு இயற்கையோடு மட்டுமே இருந்து, வேறு யாருமின்றித் தங்கள் கலைப்படைப்புகளை உருவாக்கலாம்.

இது தவிர, மடிக்கேரி நகரில் ராஜாஸ் சீட், மடிக்கேரி கோட்டை, ஓம்காரேசுவரர் கோயில் மற்றும் அபே நீர்வீழ்ச்சி போன்ற பல பிரபலமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

பாடி இக்குதப்பா கோயில் காக்கபே நகரில் அமைந்துள்ளது. 1810 ஆம் ஆண்டில் லிங்கராஜேந்திரனால் கட்டப்பட்ட இக்கோயில், கொடவர்கள் மத்தியில் மிகவும் பழமையான மற்றும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒன்றாகும். ஐயங்கேரி வனப்பகுதியில் உள்ள இக்குதப்பதேவர பெட்டாவில் அமைந்துள்ள இக்கோயில், மடிக்கேரி நகரத்திலிருந்து விராஜ்பேட்டை நோக்கி 45 கி.மீ. தொலைவில் உள்ளது. சுப்பிரமணியப் பெருமானின் மற்றொரு பெயரான இக்குதப்பப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில், கட்டிடக்கலை வடிவமைப்பில் கேரளக் கோயில்களை ஒத்திருக்கிறது.

கொடவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளில் இக்கோயில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. கொடவர்களின் நம்பிக்கையின்படி, இக்கோயிலுக்கு மாய சக்திகள் இருப்பதாகவும், இது பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாகவும் நம்பப்படுகிறது. மார்ச் மாதத்தில் ஆண்டுதோறும் ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது.

திருவிழாவின் போது, ​​பக்தர்கள் ஒன்றுகூடி தெய்வத்திற்கு சிறப்புப் பிரார்த்தனைகளைச் செய்கின்றனர். மல்லம பெட்டா மலையின் உச்சிக்கு இறைவனின் ஊர்வலம் நடத்தப்பட்டு, பின்னர் அதே திருவுருவம் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. திருவிழாவின் போது பல்வேறு சடங்கு நடனங்களும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

இக்குத்தப்பா கோவிலில், பக்தர்கள் பழங்கள், சர்க்கரை, தேங்காய், அரிசி போன்றவற்றைத் தாங்களே எடைபோட்டுப் பார்க்கும் ஒரு தனித்துவமான முறையில் காணிக்கை செலுத்தப்படுகிறது. புத்தாரி திருவிழா என்று அழைக்கப்படும் அறுவடைத் திருவிழாவின் போதும் இக்கோவில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.

கோயிலை அடைவதற்கு தனியார் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தலாம். மடிக்கேரி, விராஜ்பேட் மற்றும் நபோக்லு போன்ற நகரங்களிலிருந்து பல தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், ஒருவருக்கு கூடுதல் வசதி தேவைப்பட்டால், அவர் தனியார் வாகனத்தையும் தேர்வு செய்யலாம்....

மடிக்கேரி நகரில் அமைந்துள்ள ராஜா சீட், மனதைக் கவரும் இயற்கை அழகையும் வசீகரமான சூழலையும் வழங்கும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும். 'அரசர்களின் இருக்கை' என்று பொருள்படும் ராஜா சீட், ஒரு காலத்தில் கூர்க் மன்னர்களின் விருப்பமான இடமாக இருந்தது.

சுற்றியுள்ள பள்ளத்தாக்கின் அற்புதமான காட்சியைக் காண்பதற்கும், புத்துணர்ச்சி பெறுவதற்கும் அவர்கள் அந்த இடத்திற்குச் செல்வது வழக்கம். ராஜாவின் இருக்கையிலிருந்து காணும் சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயக் காட்சி மிகவும் வசீகரமாக இருக்கும், அதை சுற்றுலாப் பயணிகள் தவறவிடக் கூடாது. பசுமையான செடிகொடிகளின் மீது விழும் பொன்னிற சூரிய ஒளி, அற்புதமான புகைப்பட வாய்ப்புகளையும் வழங்குகிறது. சூழலும் இனிமையாக உள்ளது.

அந்த இடத்தின் அமைதியும், அதன் ரம்மியமான அழகும் காலை மற்றும் மாலை நேர நடைப்பயிற்சிக்கு ஒரு அற்புதமான சூழலை உருவாக்குகின்றன. இதமான தென்றல் உங்களைத் தழுவ, பசுமையான செடிகொடிகள் உங்களை வரவேற்பதை கற்பனை செய்து பாருங்கள். ராஜாஸ் சீட்டில் இவை அனைத்தும் சாத்தியமே.

சுற்றுலாப் பயணிகள் இங்கு பெறும் அனுபவம் நினைவில் கொள்ளத்தக்கது. இந்த இடம் இப்போது ஒரு அற்புதமான பூங்காவாக மாறியுள்ளது. பூங்காவின் இடதுபுறத்தில், மகாத்மா காந்தியின் திருவுடல்கள் வைக்கப்பட்டுள்ள காந்தி மண்டபம் அமைந்துள்ளது. குழந்தைகளின் பொழுதுபோக்குக்கான ஒரு பகுதி இருப்பதால், இது குடும்பத்துடன் வெளியே செல்வதற்கும் மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

ராஜா சீட்டை சுற்றி வரும் ஒரு பொம்மை ரயிலும் உள்ளது. இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவரையும் கவரும் ஒரு விஷயமாகும். அற்புதமான பயணத்தை அனுபவிப்பதோடு, ரயிலுக்குள் சுவையான சிற்றுண்டிகளையும் உண்டு மகிழலாம். பூங்காவிற்குள் நுழைய ஒரு நபருக்கு குறைந்தபட்ச நுழைவுக் கட்டணமாக ரூ. 5/- வசூலிக்கப்படுகிறது.

மடிக்கேரி நகரில் மடிக்கேரி கோட்டை, ஓம்காரேசுவரர் கோயில் மற்றும் அபே நீர்வீழ்ச்சி போன்ற பல சுற்றுலாத் தலங்களும் உள்ளன....

கூர்க்கின் பல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சோம்வார்பேட்டை, கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஓர் இடமாகும். இந்த ஊரில், ஒருவர் சென்று சில மறக்க முடியாத தருணங்களைச் செலவிட பல சுவாரஸ்யமான சுற்றுலா இடங்கள் உள்ளன. மடிக்கேரி, கக்கபே, கபினி, சித்தாப்பூர் போன்ற கூர்க்கின் மற்ற சிறிய நகரங்களைப் போலவே, சோம்வார்பேட்டையும் மகிழ்ச்சியையும் ஓய்வையும் அளிப்பதாக உறுதியளிக்கிறது.

சோமவார்பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொட்டமால்தே என்ற கிராமம், அற்புதமான சுற்றிப் பார்க்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. இங்கு மனதைக் கவரும் மற்றும் அமைதியான ஹொன்னமான கெரே ஏரி உள்ளது, இது கூர்க் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஏரி என்று கூறப்படுகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியும் பசுமையான தாவரங்கள், இதமான சூழல் மற்றும் பரந்து விரிந்த காபித் தோட்டங்களுடன் மனதைக் கவரும் வகையில் உள்ளது.

இந்து மதத்தினரிடையே இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள், குறிப்பாக கௌரி பண்டிகையின் போது, ​​இங்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, ஹொன்னம்மா தேவிக்குக் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.

இவற்றுடன், இயற்கை ஆர்வலர்களுக்காக, கூர்க்கின் மூன்று வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றான புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயமும் சோமவார்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வழங்குகிறது. பல்வேறு சிரம நிலைகளைக் கொண்ட அற்புதமான பாதைகளுடன், இது மலையேறுபவர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. அனைத்துப் பறவை ஆர்வலர்களும் இங்கு சில சுவாரஸ்யமான பறவை உயிரினங்களைக் கண்டு மகிழ்வார்கள்.

சோமவார்பேட்டையில் உள்ள மல்லல்லி நீர்வீழ்ச்சியும் ஒரு சுவாரஸ்யமான சுற்றுலாத் தலமாகும். மல்லல்லி நீர்வீழ்ச்சி, அதன் அழகான வெண்ணிற நீரோடைகள் மற்றும் சுற்றிலும் உள்ள பசுமையான சூழலுடன், சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் செலவிட ஒரு புத்துணர்ச்சியான சூழலை உருவாக்குகிறது....

கூர்க்கின் பல சுற்றுலாத் தலங்களில் ஒன்றான சோம்வார்பேட்டை, கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஓர் இடமாகும். இந்த ஊரில், ஒருவர் சென்று சில மறக்க முடியாத தருணங்களைச் செலவிட பல சுவாரஸ்யமான சுற்றுலா இடங்கள் உள்ளன. மடிக்கேரி, கக்கபே, கபினி, சித்தாப்பூர் போன்ற கூர்க்கின் மற்ற சிறிய நகரங்களைப் போலவே, சோம்வார்பேட்டையும் மகிழ்ச்சியையும் ஓய்வையும் அளிப்பதாக உறுதியளிக்கிறது.

சோமவார்பேட்டையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தொட்டமால்தே என்ற கிராமம், அற்புதமான சுற்றிப் பார்க்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. இங்கு மனதைக் கவரும் மற்றும் அமைதியான ஹொன்னமான கெரே ஏரி உள்ளது, இது கூர்க் பிராந்தியத்தின் மிகப்பெரிய ஏரி என்று கூறப்படுகிறது. ஏரியைச் சுற்றியுள்ள பகுதியும் பசுமையான தாவரங்கள், இதமான சூழல் மற்றும் பரந்து விரிந்த காபித் தோட்டங்களுடன் மனதைக் கவரும் வகையில் உள்ளது.

இந்து மதத்தினரிடையே இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இங்கு வருகிறார்கள், குறிப்பாக கௌரி பண்டிகையின் போது, ​​இங்கு சிறப்புப் பூஜை நடத்தப்பட்டு, ஹொன்னம்மா தேவிக்குக் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன.

இவற்றுடன், இயற்கை ஆர்வலர்களுக்காக, கூர்க்கின் மூன்று வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றான புஷ்பகிரி வனவிலங்கு சரணாலயமும் சோமவார்பேட்டையில் அமைந்துள்ளது. இந்த சரணாலயம் அதன் சுற்றுலாப் பயணிகளுக்கு செழுமையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வழங்குகிறது. பல்வேறு சிரம நிலைகளைக் கொண்ட அற்புதமான பாதைகளுடன், இது மலையேறுபவர்களின் சொர்க்கமாகவும் திகழ்கிறது. அனைத்துப் பறவை ஆர்வலர்களும் இங்கு சில சுவாரஸ்யமான பறவை உயிரினங்களைக் கண்டு மகிழ்வார்கள்.

சோமவார்பேட்டையில் உள்ள மல்லல்லி நீர்வீழ்ச்சியும் ஒரு சுவாரஸ்யமான சுற்றுலாத் தலமாகும். மல்லல்லி நீர்வீழ்ச்சி, அதன் அழகான வெண்ணிற நீரோடைகள் மற்றும் சுற்றிலும் உள்ள பசுமையான சூழலுடன், சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் செலவிட ஒரு புத்துணர்ச்சியான சூழலை உருவாக்குகிறது...

கூர்க் செல்லும் வழியில், பிரபலமான சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல், அப்பகுதியை முடிந்தவரை சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த மாவட்டம் மிகவும் பிரமிக்க வைக்கும் அழகுடன் திகழ்கிறது, இதை அதன் ஒவ்வொரு மூலையிலும் காணலாம். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் ஒன்று சுண்டிகொப்பா. குஷால்நகர் செல்லும் சாலையில் அமைந்துள்ள சுண்டிகொப்பா, மடிகேரியிலிருந்து 15 கி.மீ கிழக்கில் உள்ளது.

உங்கள் அன்புக்குரியவர்களுடன் மறக்க முடியாத தருணங்களைச் செலவிடுவதற்கும் ஓய்வெடுப்பதற்கும் இந்த இடம் ஒரு அற்புதமான சூழலை வழங்குகிறது. இது ஒரு நல்ல சுற்றுலாத் தலமாக இருப்பதால், குடும்பத்துடன் ஒரு நாள் வெளியே செல்வதற்கும் மிகவும் பொருத்தமானது. இங்குள்ள பரந்து விரிந்த காபி மற்றும் மசாலாப் பொருட்கள் தோட்டங்களுக்காக இது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

மனதைக் கவரும் இயற்கை அழகைக் கொண்ட இந்த இடம், இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பொருத்தமானது. இங்கு பல்வேறு வகையான வலசைப் பறவைகளையும், உள்ளூர் பறவைகளையும் காணலாம். எனவே, இது பறவை நோக்குநர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகும்.

இங்கு அய்யப்பன் கோயில் இருப்பதால், ஆன்மீக சுற்றுலாப் பயணிகளும் இவ்விடத்திற்கு வருகிறார்கள். இக்கோயில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதால், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

மடிக்கேரியிலிருந்து 15 கி.மீ தொலைவில் குஷால்நகர் அமைந்துள்ளதால், வாகனத்தில் பயணிப்பதன் மூலம் சுண்டிகொப்பாவை அடையலாம். விருப்பமிருந்தால், இங்குள்ள பல தங்குமிட வசதிகளில் ஒன்றில் தங்கவும் முடியும். குடில்கள், ஹோம்ஸ்டே, ஹோட்டல்கள் போன்ற பல விருப்பங்களிலிருந்து நீங்கள் தேர்வு செய்யலாம்.

கூர்க் பகுதி, சுற்றுலாப் பயணிகளுக்குப் பல சுற்றிப் பார்க்கும் இடங்களுடனும், செழுமையான தாவர மற்றும் விலங்கினங்களுடனும், எண்ணற்ற சாகச விளையாட்டுகளுடனும் வாய்ப்பளிக்கிறது....

பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தலக்காவேரி, பிரம்மகிரி மலையில் அமைந்துள்ளது. இந்த மலை, பாகமண்டலாவிலிருந்து 8 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து 48 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது மிகுந்த மத முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனைப் பார்வையிடுகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து 1276 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தலக்காவேரியில், தீர்த்த குண்டிகை அல்லது பிரம்ம குண்டிகை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நீரூற்று உள்ளது. இதுவே காவேரி நதியின் பிறப்பிடம் என்று கூறப்படுகிறது. இந்த நீரூற்று பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாததாக இருந்தாலும், பொதுவாக மழைக்காலத்தில் இதைக் காணலாம். இந்த நீரூற்று பூமிக்கு அடியில் பாய்ந்து, சிறிது தூரம் சென்ற பிறகு வெளிப்படுவதாக நம்பப்படுகிறது.

குண்டிகைக்கு மிக அருகில் ஒரு சன்னதி அமைந்துள்ளது. அங்கு ஒரு பெரிய குளமும் உள்ளது, அதில் பக்தர்கள் தெய்வங்களை வழிபடுவதற்கு முன்பு நீராடுகிறார்கள். மேலும், அங்கு இரண்டு கோயில்களும் உள்ளன. ஒரு கோயில் பழமையான சிவலிங்கத்துடன் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மற்றொரு கோயில் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீக சுற்றுலாப் பயணிகள், அகத்திய முனிவர் பிரம்மா, விஷ்ணு மற்றும் மகேஷ் ஆகிய கடவுள்களின் புனித அவதாரங்களைக் கண்ட புனித அஸ்வநாத மரத்தையும் காணலாம்.

அக்டோபர் மாதத்தில் இவ்விடத்திற்குச் செல்வது சிறந்தது. இந்த நேரத்தில் சங்கரமணத் திருவிழா கொண்டாடப்படுவதால், ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இந்நேரத்தில், காவேரி தேவியின் தோற்றத்தைக் குறிக்கும் வகையில், நீர் நிரம்பிய சிறிய கிணற்றைக் காணலாம்.

தலக்காவேரியிலிருந்து பிரம்மகிரி சிகரத்திற்குச் செல்லலாம். புராணங்களின்படி, சப்த மகரிஷிகள் எனப்படும் ஏழு மாபெரும் முனிவர்கள் இந்த இடத்தில் ஒரு சிறப்பு யாகம் செய்ததால், இதுவும் ஒரு புனிதத் தலமாகும். சிகரத்திலிருந்து பள்ளத்தாக்கின் காட்சியும் மனதைக் கவரும் வகையில் உள்ளது....

கூர்க் மாவட்டம் சுற்றுலாப் பயணிகளுக்கு தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், நீர்வீழ்ச்சிகள், அருங்காட்சியகங்கள், கோட்டைகள், ஏரிகள், காட்சி முனைகள் மற்றும் பல விருப்பங்களை வழங்குகிறது. கரடாவிற்குச் செல்வது உங்கள் கூர்க் பயணத்தை முழுமையாக்குகிறது. கரடா என்பது கக்காபே பகுதியில் உள்ள ஒரு கிராமம். இது விராஜ்பேட்டையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், மடிக்கேரியிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மற்ற சுற்றுலாத் தலங்களைப் போல இவ்விடம் பிரபலம் இல்லாததால், வழக்கமான பரபரப்பிலிருந்து விலகி, சுற்றுலாப் பயணிகள் போதுமான தனிமையையும் அமைதியையும் பெறுகிறார்கள். இது சுற்றுலாப் பயணிகளுக்கு மயக்கமூட்டும் இயற்கை அழகையும் புத்துணர்ச்சியூட்டும் சூழலையும் வழங்குகிறது. பரந்து விரிந்த காபித் தோட்டங்கள் இப்பகுதியைச் சூழ்ந்து, இதனை மேலும் அழகாக்குகின்றன.

இந்த இடத்தில் கூர்க்கின் மிகச் சிறந்த மூதாதையர் வீடுகள் சில அமைந்துள்ளன. இந்த மூதாதையர் வீடுகளில் சில 200-300 ஆண்டுகள் பழமையானவை. அவை சுற்றுலாப் பயணிகளுக்கு வரலாற்றின் ஒரு சாயலையும், பண்டைய கால வாழ்க்கை முறையையும் அளிக்கின்றன. இந்த வீடுகள் ஒரு வித்தியாசமான அனுபவத்தை உறுதியளிக்கின்றன, மேலும் அங்கு சில நாட்கள் தங்குவதை அனைவரும் கட்டாயம் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் முழுமையான அமைதியில் சில நாட்கள் செலவழித்து, ஒரு உண்மையான கூர்க் வாழ்க்கை முறையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கும் சில மூதாதையர் வீடுகளும் இங்கு உள்ளன.

இந்தப் பாரம்பரிய வீடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியான தங்குமிடம், சுவைமிகு கூர்க் உணவு வகைகள் மற்றும் நிம்மதியான சூழல் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஏறக்குறைய 250 ஆண்டுகள் பழமையான ஐனே மானே, கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் பழமையான நாடிகேரியாண்டா ஐனே வீடு மற்றும் பல இதற்கு உதாரணங்களாகும். இந்த இடம் இயற்கை நடைப்பயணங்களுக்கும் ஏற்றது, மேலும் சிறந்த மலையேற்றப் பாதைகளையும் வழங்குகிறது....

கத்திகே, கட்டுகே என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மன்னர் வீரராஜேந்திரன், லிங்க ராஜேந்திரன் மற்றும் அவர்களது அரசவை புரோகிதர்களில் ஒருவரின் கல்லறைகள் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. நகரின் வடக்கு மூலையில் அமைந்துள்ள இந்தக் கல்லறைகள், அந்நகரின் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாகும்.

அதே பகுதியில், அவர்களின் வீரமும் விசுவாசமும் மிக்க வீரர்களுக்குச் சொந்தமான இரண்டு சிறிய கல்லறைகள் அமைந்துள்ளன. மையத்தில் ஒரு குவிமாடத்தையும், இரு முனைகளிலும் கோபுரங்களையும் கொண்டு, ஒரு சிறு குன்றின் மீது ஒன்றிலிருந்து ஒன்று தனித்தனியாகக் கட்டப்பட்ட மூன்று பிரதான கல்லறைகள், ஒரு முஸ்லிம் புனித யாத்திரைத் தலத்தைப் போலத் தோற்றமளிக்கின்றன. இங்கிருந்து அந்த நகரத்தின் அற்புதமான காட்சியைக் காணலாம்...