தெய்வகுளம் காளியம்மன் 🥰❤️ ..ஆன்மீக பயணம் ..
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள
சேத்துமடை அருள்மிகு தெய்வகுளம் காளியம்மன் கோவில்
பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த தலமாக நம்பப்படுகிறது. 🙏
இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால்,
அம்மன் குழந்தை வடிவில் காட்சியளிப்பது!
இந்த தலத்தில் வேண்டினால்:
✨ தொழில் முன்னேற்றம்
✨ குழந்தை வரம்
✨ வீடு கட்டும் ஆசை
நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர் 🙏
மேலும், சப்தகண்ணிமார்கள் சந்நிதியும் இங்கு உள்ளது.தமிழ்புத்தாண்டு, நவராத்திரி விழா🥰
இக்கோயிலில் தெய்வகுளம் காளியம்மன் சன்னதியும், கன்னிமார், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தமிழ்புத்தாண்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழா திருவிழாவாக நடைபெறுகிறது.📚🖋️📡🎙️🌈🤝🏠❤️🥰என்றும் அன்புடன் உடுமலை சிவக்குமார் 🌈🏠






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக