சனி, 27 பிப்ரவரி, 2021

 கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 


Udhayakumar Raijakampalam is celebrating your special day.


கடந்த 21.2.2021 அன்று திண்டிவனம் L K Towers ல் நடைபெற்ற

மௌவல் கவிமன்றம் மற்றும்

அறக்கட்டளையின்  துவக்கவிழா

மற்றும் புத்தக வெளியீட்டுவிழா  

மற்றும் விருது வழங்கும்விழா  என

முப்பெரும் விழாவிற்க்கு 

தலைமையேற்று வழிநடத்தி  சென்ற

மதிப்பிற்குரிய கவிஞர் வெற்றிப்பேரொளி அய்யா அவர்களுக்கும்,  சிறப்பு விருந்தினராக 

கலந்துகொண்ட  அண்ணாமலை

பல்கலைக்கழக பேராசிரியர்

தங்கையன் அவர்களுக்கும்,  

மருத்துவ கவிஞர் கவிநிலா மோகன் 

அவர்களுக்கும், சிரம் தாழ்ந்த  

வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன் ...

அது சமயம் அவர்களது திருகரங்களால் 

கவிஞர் கண்ணதாசன் விருது 

மற்றும் தூவலின் சாரல் என்ற 

புத்தகத்தில் என் கவிவரிகள் 

இடம் பெற்றதற்க்கான சான்றிதழை

பெற்றுக் கொண்டதில் 

மட்டற்ற  மகிழ்ச்சி அடைகிறேன்...

விழாவை  சிறப்பிக்க வந்த 

கவிஞர் தனுஷ்கோடி அய்யா,

சுரேஷ், நடு நாட்டு தமிழன்,

தேவசேனா, மோகனகவி,

சிங்கை கார்முகிலன் மற்றும் அனைத்து 

கவி உறவுகளையும்  சந்தித்ததில்

மிக்க மகிழ்ச்சி...

இப்பொழுது உள்ள காலகட்டத்தில்

ஒருவிழாவினை நடத்துவது  என்பது

அவ்வளவு எளிதான விடயம்  இல்லை 

என்று அறிந்த போதிலும் சற்றும் 

தயக்கம்  காட்டாமல் இரவு பகல் பாராது தன் சுயவேலைகளை எல்லாம் 

ஒதுக்கி வைத்துவிட்டு மக்கள் நலனுக்காக தன்னை அற்பணித்துகொண்டு சீரும் சிறப்புமாக 

இவ்விழாவினை நடத்திய 

மௌவல் அறக்கட்டளையின் நிறுவனர்

திருமதி. சிவசங்கரி ஏந்திழை அவர்களுக்கும், அதற்க்கு  உறுதுணையாக இருந்து வழிநடத்தி  வரும் மௌவல் அறக்கட்டளையின்

தலைவர் அன்புக்கினிய  சோலை ராஜகுமாரன் சகோ அவர்களுக்கும் 

நன்றி என்ற ஒற்றை சொல்லில் சொன்னால் அது 

மிகையாகாது....

அதுமட்டுமல்லாமல் அருசுவை விருந்து 

வைத்து அன்பில் இணைந்த ஒரு 

கவிக்குடும்பமாக திகழ்ந்த  அந்த 

தருணத்தில் அகம் மலர கண்டேன்

பிரிய  மனமின்றி நகர்ந்தேன் 

பிரியாதொரு விழாவில் மீண்டும்

சந்திப்போம் என்று ...

என்றும் அன்புடன் உதயகுமாரன்...


கம்பளத்து கவிஞர் ....உதயகுமார் ...க்கு ,

உடுமலைப்பேட்டை கம்பளவிருட்சம் அறக்கட்டளை சார்பாக வாழ்த்துக்கள் 

புதன், 24 பிப்ரவரி, 2021


🌈ஒட்டன்சத்திரம் ..🌈 புது காளாஞ்சி பட்டி  ..🌈.என் அருமை மகள் .⛱️


🥰ஜெ .ராகவி B .E .MBA -எஸ் .பொன்ராம் -B .Sc .,D .Horti..,DGT .🥰,,

(உதவிதோட்டக்கலை அலுவலர் , சிவகங்கை)

நாள் :25-02-2021  இடம் :புலங்கட்டுநாயக்கனூர்🤝👍  



🌈கம்பளவிருட்சம் அறக்கட்டளை குழுமம் சார்பாக திருமண வாழ்த்துக்கள் 

உடுமலைப்பேட்டை 👍👍🥰🥰🌱🌳





ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

 டேபிள் மேனர்ஸ்...

இன்று நாம் பார்க்க போகும் சப்ஜெக்ட் டேபிள் மேனர்ஸ். இது மிகவும் முக்கியமான ஒன்றூ. சாதாரண ரெஸ்டாரன்டுக்கு போனாலும் நம் டேபிள் மேனர்ஸை கண்டிப்பாக பின்பற்றினால் மிகவும் நல்லது. முதலில் நம்மை டேபிளுக்கு அழைத்து சென்று அமர வைத்த உடன் நாம் டேபிளில் கானும் விஷயம் நேப்கின், ஃபோர்க், ஸ்பூன், கத்தி. முதலில் நாப்கினை மடியில் போட்டு கொள்ளவும். சிறியவர்களுக்கு கழுத்தில் சொருகிவிட்டு ஹாங்கிங் நாப்கின் போல் கட்டவும். டேபிளில் இருக்கு கத்தி,ஃபோர்க், ஸ்பூன் இடம் மாற்றாதீர்கள். முதலில் புஃபே சாப்பாடு பற்றி பார்ப்போம். முதலில் டேபிளில் ஒரு குவார்ட்டர் பிளேட் இருக்கும் இது பிரட், நான் போன்றவை வைக்கவேண்டும். முனியான்டி விலாஸ் மாதிரி எலும்பு, மீன் முள்ளை அதில் வைக்க வேண்டாம். இது மிக முக்கியம். நிறைய ஹோட்டல்களில் சாப்பிட்ட பிளேட்டை ரீஃபில் மற்றும் அடுத்த சர்விங்குக்கு அனுமதிக்க மாட்டார்கள். அதனால் சாப்பிட்ட பிளேட்டை டேபிளில் வைத்து ஸ்பூன் ஃபோர்க் கத்தி மட்டும் டேபிளில் எடுத்து தனியே வைத்து செல்லவும். புது பிளேட்டை எடுத்து திரும்பவும் லைனில் வரவு. கொஞ்சம் சாம்பார் மட்டும் தானே என்று லைனில் நிற்காமல் ஜம்ப் செய்யாதீர்கள். முதல் சூப் அல்ல்து சாலட் தனியே எடுத்து வந்து சாப்பிடுங்கள். புஃபே வைத்த காரணமே உணவை வேஸ்ட் பண்ணக்கூடது என்று தான். அதனால் சாலட், தந்தூரி, ஸ்டார்ட்டர்ஸ், நான், ரைஸ் எல்லாம் பரங்கிமலை போல் குவித்து எடுத்து வருவதை தவிர்க்கவும். முதலில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்த்து பிறகு பிடித்த உணவை மட்டும் நிறைய எடுத்து சாப்பிடவும். நான் ரொட்டியை சின்ன பிளேட்டில் எடுத்து வரவும். கடைசியில் டெஸர்ட்ஸ் அல்ல்து ஐஸ்கிரிமை அங்குள்ள சின்ன போல் அல்ல்து கப் அல்ல்து சிறிய தட்டுகளில் எடுத்து வந்து சாப்பிடுங்கள். சாப்பாடு தட்டில் எடுக்காதீர்கள், சிலர் குடுமபத்திற்க்கும் மொத்தமாக எடுத்து வந்து பிரித்து சாப்பிடுவார்கள் அது தவறூ. ஒவ்வொரு முறையும் பிளேட் மாற்றூம் விஷயம் நீங்கள் புஃபேக்கு சென்றால் மட்டுமே. ஒரு பார்ட்டி மற்றூம் கல்யான வீடுகள் ஹோட்டலில் நட்ந்தால் ஒரே பிளேட் தான் எடுக்க வேண்டும் இல்லயென்றால் நீங்கள் மூன்று பிளேட் மாற்றீனால் மூன்ற் ஆட்களுக்குகான சார்ஜ் அவர்களுக்கு போட்டு விடுவார்கள்.

ஃபோர்க் ஸ்பூன் கீழே விழுந்தால் எடுத்து வைத்துவிட்டு வேறு ஒன்றை கேட்கவும். தயவு செய்து காலியாக இருக்கு டேபிளில் இருந்து எடுக்கக்கூடாது. அது போக கம்ஃபோர்ட் இல்லயெனில் தயவு செய்து கையில் எடுத்து சாப்பிட தயங்காதீர்கள். அதே சமயம் ஒவ்வொரு சர்விங்குக்கு செல்லும் போது இடது கையில் எடுத்து பொடுங்கள் எச்சில் கையில் கரண்டிகளை எடுக்காதீர்கள். உணவு எடுத்தவுடன் தயவு செய்து மூடியை மூடவும். சுரன்டி, வழித்து எந்த பதார்த்தையும் எடுக்காதீர்கள். கேளுங்கள் ரிபிளனிஷ் செய்வார்கள்.சாப்ஸ்டிக் மூலம் சாப்பிட தெரிந்தவர்கள் மட்டும் வாங்கி சாப்பிடுங்கள் நிறைய பேர் அதை வைத்து சாப்பாடுடன் கொலைவெறியோடு சன்டை போட வேண்டாம்.

நேப்கின்னில் கை துடைத்துகொண்டு ஃபிங்கர் போல் கேளுங்கள். இல்லெயனில் வாஷ் ரூம் சென்று கை கழுவுங்கள். முடிந்த வரை 1 மணீ நேரம் மினிமம் இல்லயெனில் புஃபே வேஸ்ட் தான். பிரேக்ஃபாஸ்ட் புஃபே போது தோசை, ஆம்லெட் சொல்லிவிட்டு வந்து அமர்ந்தால் போதும் அங்கேயே நிற்க வேண்டாம். மினரல் வாட்டர், காஃபி, டீ, குளிர்பானங்கள், ஜூஸ் வைகைகள் எக்ஸ்ட்ரா..............

கடைசி டிப்ஸ் - நான் மதுபானம் அருந்தவதில்லை. ஒவ்வொரு சமயம் நண்பர்களூடன் பாருக்கோ சென்றால் அவர்கள் ஒரு இரண்டு ஸ்மால் அடிப்பதற்க்கு முன் நான் ஒரு அரை கிலோ சைடு டிஷ் சாப்பிட்டுவிடுவேன். ஒரு சமயம் லீமெர்டியன்  ஹோட்டலில் 6 பேர் போனோம். நான் வழக்கம் போல் குடிக்கமாட்டேன் என்பதால் எனக்கு பிடித்த மாக்டெயில் ஆர்டர் செய்ய சொன்னார்கள் நான் இடது மெனுவை பார்க்காமல் வலது சைடில் காஸ்ட்லியான் ஒரு ஜுஸை அர்ட்டர் செய்தேன் சுமார் 1300 ரூபாய். மொத்த பில் 2900. ஐந்து பேர் ஃபாரின் ஸ்காட்ச் மொத்தமும் சேர்த்து 1400 நான் குடித்த மாக்டெயில் 1300 டாக்ஸ் சேர்த்து 2900 வந்தவுடன் ஷாக் ஆன பிரன்ட்ஸ் அதில் இருந்து என்னை அவகள் உற்சாகபானம் அருந்தும் போது கூட்டி போவதில்லை........1300 .. மகா கேவலமாக கழுவி ஊத்தினமாதிரி இருந்தது இன்னொரு வேதனை...


செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..

காரில் பிரேக் பிடிக்காமல் போனால் பதற்றம் வேண்டாம்..
கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குக ளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்கு கிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது.
ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.
காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.
கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியாழன், 4 பிப்ரவரி, 2021

 கேள்வி : விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும் ?


என் பதில் ...


விவாகரத்து என்றதும் பலருக்கும் பெண்கள் ஞாபகம்தான் வரும். விவாகரத்தான பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? என்று கவலைப்படுவார்கள். அத்தகைய பெண்கள் மீது அனுதாபமும் கொள்வார்கள். ஆனால் எல்லா விவாகரத்துக்களிலும் ஒரு ஆணும் பாதிக்கப்படுகிறார். அந்த ஆணை நினைத்துப்பார்த்து யாரும் பரிதாபப்படுவதில்லை.


விவாகரத்தில் ஒரு பெண் பாதிக்கப்படுவது போன்று ஒரு ஆணும் பாதிக்கப்படத்தான் செய்கிறார். பெண்ணின் அளவுக்கு ஆணுக்கும் அது சோகத்தை தரவே செய்யும். கவலை, தனிமை, சமூக நிந்தனை, நிம்மதி இழப்பு போன்றவை ஆண்களுக்கும் உண்டு.


குடும்பம் என்றதும் அன்பு, கடமை, பாசம், அரவணைப்பு, அனுசரணை போன்ற அனைத்தும் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் பெண்களிடம் இருந்துதான் கிடைக்கும். பெண்கள் மட்டுமே அதற்கு பொருத்தமானவர்கள் என்று கருது கிறார்கள். ஆனால் அவை அனைத்தும் ஆண்- பெண் இருபாலருக்கும் பொருத்தமானவை. ஆண்களிடம் இருந்தும் அன்பு, பாதுகாப்பு, அனுசரணை போன்றவை கிடைக்கும்.


விவாகரத்து மட்டுமல்லாது வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவித இழப்புகளாலும் கவலை ஏற்படும். பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது ஆண்கள் கவலையை அதிகம் வெளிகாட்டிக் கொள்வதில்லை. பெண்கள் அழுவார்கள். புலம்புவார்கள். அவர்கள் சுபாவம் அப்படி. அழாத, புலம்பாத ஆண்களுக்கு வருத்தம் இல்லை என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.


ஆண்கள் உடலால் பலமானவர்கள். உள்ளத்தால் பலவீனமானவர்கள். பெண்கள் உடலால் பலவீனமானவர்கள். உள்ளத்தால் பலமானவர்கள். ஆண்கள் மனம் சோர்ந்து போகும்போது பெண்கள்தான் அவர்களுக்கு பலம் தருபவர்களாக இருக்கிறார்கள்.


பெரும்பாலான பெண்கள், தங்கள் கணவரிடம் ‘நான் இல்லாமல் நீங்கள் தனியாக அவஸ்தைப்பட வேண்டும். அதை நான் பார்த்து ரசிக்கவேண்டும். நான் விவாகரத்து செய்தால்தான் என் அருமை உங்களுக்கு புரியும்’ என்று சொல்கிறார்கள். மற்றவர்களைவிட தனக்கு அதிக மரியாதை தரவேண்டும் என்றும், அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்றும் பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாத பட்சத்தில் தான் இல்லாததால் தோன்றும் வெற்றிடத்தை உணரவைப்பதற்காக பிரிந்துசெல்ல விரும்பு கிறார்கள்.


பெண்கள் அதிகம் படித்து, நிறைய சம்பாதிப்பதால்தான் விவாகரத்து அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவிவருகிறது. ஆனால் அது முழுமையான உண்மை அல்ல. ஏன்றால், சுய சம்பாத்தியம் அதிகம் இல்லாத முந்தைய காலத்திலும் பெண்களின் மனநிலை அப்படித்தான் இருந்தது. கணவரிடம் கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டால் கணவர் தன்னைத் தேடி வந்து அழைத்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். சின்னச் சின்ன மோதல்கள் வந்தால் அதை காரணங்காட்டி முகத்தை உம்மென்றுவைத்துக்கொண்டு கணவரிடம் பேசாமல் ஒதுங்கியிருப்பார்கள். பின்பு கணவர் வந்து சமாதானம் செய்தால்தான் இறங்கிவருவார்கள்.


ஆண் தனக்கு பணிந்து போகவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் விவாகரத்து என்ற எல்லைவரைக்கும் கூட போய்விடுகிறார்கள். ‘தனக்கு விவாகரத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் மிகுந்த மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்’ என்று இன்முகம்காட்டவும் அவர்கள் தவறுவதில்லை. தனக்குள் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் அதை எல்லாம் மறைத்துக்கொண்டு, முகத்தில் சிரிப்பைக் காட்டுவதில் பெண்கள் எப்போதுமே கைதேர்ந்தவர்கள்.


என்ன தான் பெண்களுக்கு கல்வியறிவும், சுய சம்பாத்தியமும் இருந்தாலும் பெண்கள் தனித்து வாழ்வது போராட்டமான விஷயம். மற்றபடி மனநிலையைப் பொறுத்தவரை இருவருக்கும் ஒரே மாதிரியான வேதனை தான். சமூகத்தின் கேலிப் பார்வை, நண்பர்களின் கவலையான விசாரணை, மற்ற பெண்களின் சந்தேகப் பார்வை போன்றவைகளை எல்லாம் விவாகரத்தான ஆண்களும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆண்கள் வீரமானவர்கள். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுவதால் ஆண்களால் அடுத்தவர்கள் முன்பு அழ முடிவதில்லை. அழாததால் அவர்களது மனபாரம் குறையாது. மனஅழுத்தத்தோடுதான் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். அதனால் அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆனால் பெண்கள் அழுது அரற்றி, தோழிகள் பலரிடம் கூறி மன பாரத்தை இறக்கிவிடுவார்கள்.


விவாகரத்து ஆண்களை பொருளாதாரரீதியாகவும் நிலைகுலையவைத்துவிடுகிறது. விவாகரத்து பெறும் மனைவிக்கு ஜீவனாம்சம் என்ற பெயரில் ஒரு பெரிய தொகையை தரவேண்டி இருக்கும். இதற்காக அசையா சொத்துகளை விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கணவன்-மனைவி இருவர் பெயரில் இருக்கும் அசையா சொத்துகளை அவசரமாக விற்க வேண்டியதிருக்கும். அப்போது மன அழுத்தத்துடன், பண அழுத்தமும் சேர்ந்துகொண்டு அவர்களை வாட்டிவதைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து விவாகரத்து என்ற முடிவை எட்டுவதற்குள் ஆண்களுடைய சம்பாத்தியத்தில் பாதி கரைந்துவிடும். அவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழிலிலும் நெருக்கடி உருவாகிவிடும். அதனால் ஆண்களுக்கு விவாகரத்து என்பது பிரிவு மட்டுமல்ல பெரும் செலவும்கூட.


இந்திய ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு மனைவியை சார்ந்திருக்கிறார்கள். திடீரென்று மனைவி பிரிந்து சென்றுவிட்டால் அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீள வெகுநாட்களாகும். அதன் தாக்கம் அவர்களுடைய அலுவலக வாழ்க்கையையும் பாதிக்கும். வேலையில் பின்தங்கி கெட்டபெயர் வாங்க வேண்டியிருக்கும். வீட்டிற்குப் போகவும் பிடிக்காது. வேலையில் முன்புபோல ஈடுபாடும் இருக்காது.


விவாகரத்து, ஜீவனாம்சம் ஆகிய வழக்குகளில் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமல்ல. அப்பாவி ஆண்களும்தான் என்பதை மறுக்க முடியாது.


நன்றி ...