ஞாயிறு, 27 நவம்பர், 2016

நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம்....
உடுமலை கோவை திருப்பூர் திண்டுக்கல் பகுதிகளை மையமாக வைத்து வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நமது கல்வி மற்றும் பொருளாதாரதை முன்னேற்றும் குழுமத்தின்  சங்கமம் மற்றும் கலந்துரையாடல் கார்த்திகை மாதம் 12ம் நாள் 27.11.2016ம் தேதி ஞாயிற்றுக்கிழைமை காலை 10.00மணியளவில் உடுமலை பெதப்பம்பட்டி அருகில் சோமவாரபட்டி அருள்மிகு கண்டியம்மன் கோவிலில் அருமையான நிகழ்வாக நடைபெற்றது..இதில் இன்று சிறப்பு விருந்தினராக திருப்பூர் வழக்கறிஞர் ச.முருகராஜ் அவர்கள் கலந்துகொண்டு நமது கல்வி குழுமத்தின் செயல்பாடுகள்,வளர்ச்சி திட்டங்கள் ,எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு, முன்னற்ற கருத்துக்களையும் ,வழிமுறைகளையும் ,நமது உறுப்பினர்களுக்கு ,பயனுள்ள தகவல்களையும் ,சரியான ஆலோசனைகளையும்  வழங்கி  நமது  குழுமத்திற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும்  அளித்தது..நாளுக்கு நாள் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் ,வருகையும் அதிகரித்தது  குழுமத்திற்கு மகிழ்வான நிகழ்வாக அமைந்தது.இன்று குழுமத்துக்கு புதிதாக வருகை தந்த பெண் வழக்கறிஞர் .செல்வி .ரஞ்சனி அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .நிகழ்வுகளை அருமையாக வழிநடத்திய ஒருங்கிணைப்பு குழுவிற்கு நன்றிகள் ...