செவ்வாய், 15 செப்டம்பர், 2015

சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...

"சாதனை என்பது எல்லைகோடு ,அதில் அடங்கி போவதில் இல்லை எனக்கு ஈடுபாடு...இன்னும் வளர்வதே என்பாடு "  -முனைவர் க .இந்திரசித்து (கைபேசி -9944309188)

சேலத்து முத்துபிள்ளை....இப்போது உடுமலையின் தத்துப்பிள்ளை ...

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் ,உடுமலை வித்தியாசாகர் கலைஅறிவியல் கல்லூரி,மற்றும் அரசு கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி செய்து இப்போதுஓய்வு பெற்று வருகிறார் ...தமிழ்க்கு  ஏது  ஓய்வு ....!!!!!!

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் இதுவரை எட்டு நூல்களை வெளியிட்டு உள்ளார்,எட்டு நூல்களை பதிப்பித்து வெளிட்டுள்ளார் .ஒரு பன்னாட்டு கருத்தரங்கினையும்,எட்டு தேசிய கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார் .
ஏழு முனைவர் பட்ட மாணவர்களுக்கும் ,நாற்பது நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவர்களுக்கும் ,வழிகாட்டியாக இருந்து வருகிறார் .இவருடைய தமிழ்ப் பணியை பாராட்டி மலேசியா ,சிங்கப்பூர் ,பனாமா நாடுகளில் இயங்கி வரும் இலக்கிய அமைப்புகள் பரிசும் ,விருதுகளும் வழங்கியுள்ளன .இருபத்து ஒன்பது ஆண்டுகளாக சங்க இலக்கிய மன்றத்தையும் ,இருபத்து ஒன்று ஆண்டுகளாக தமிழ் இலக்கிய ஆராய்ச்சிப் பேரவையினையும் பொறுப்பேற்று நல் வழியில் நடத்தி வருகிறார் ...

முனைவர் க .இந்திரசித்து அவர்கள் தற்பொழுது எழுதிய

"தளி எத்தலப்ப மன்னர்" -நூல் அறிமுகம் ,

முனைவர் த .அருள்சோதி எழுதிய
"பகுத்தறிவுப் பாவலர் உடுமலை நாராயணகவி "




என இரு நூல்கள் வெளியிட்டு விழா ...

விழா முன்னிலை :
 உடுமலை வழக்கறிஞர் -சோமசுந்தரம் ,அவர்கள் ,
நீதி அரசர் -தங்கராசு,அவர்கள்  (பணி நிறைவு பெற்ற மாவட்ட நீதிபதி )-தேனி
திருமதி -வே .தெய்வநாயகி -தலைவர் ,தளி பேரூராட்சி 
 உடுமலையின் இரு பெரும் வரலாற்றுத் திருவிழா..

வரும் நாள் -20.09.2015 ஞாயிறு மாலை 4.30 மணி ...இடம் :பத்மாஸ்ரீ நாகராட்சி திருமண மண்டபம் -உடுமலைபேட்டை ...வாரீர் ....வாரீர் ....வாரீர் ...












   


வெள்ளி, 6 மார்ச், 2015

மேடை பேச்சு......
இன்று கொங்கு நாடு கல்லூரியின் சிறப்பு அழைப்பாளராக நானும் என் நண்பர் பிரபு அவர்களும் சென்றிருந்தோம்...பள்ளி மற்றும் கல்லூரி என்றாலே பயம் கலந்த மரியாதை...மனதில் ஓட்டிகொள்கிறது...நாமும் கல்லூரி வாழ்கையை கடந்தவர்கள் தானே .. கல்லூரியின் படிக்கட்டில் ஏறும் போதே ஒரு மாணவர் வணக்கம் சார்.......!!!!!! ஒருஇழு ..இழுத்து சொன்னார்...இருந்தாலும் பயத்தை வெளி காட்டிகொள்ளக்கூடாது என்று நடையை கட்டினோம் ..அதற்குள் நண்பர் வணிக மேலாண்மை துறை தலைவர் அவருடைய அறைக்கு அழைத்து கொண்டு போய்விட்டார்...பல பள்ளியில் ஆசிர்யர்களுக்கு என் துறை சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்சிகள் போதுகூட இந்த பயம் வருவதில்லை ...கல்லூரி என்றலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறது ..வணிக மேலாண்மை மாணவர்கள் பரஸ்பரநிதி ,தனி நபர் வருமானம், வீட்டுகடன் ,வாகனகடன் ,கல்வி கடன் ,காப்பீடு ,வைப்புத்தொகை ,இத்தனையும் பாடப்புத்தகத்தில் படித்ததை இன்று நடை முறை வாழ்க்கையோடு பாடம் நடத்தும் போது கவனமாக கேட்டார்கள் ...எதிர் காலத்தில் வேலைவாய்ப்பு எப்படி பெற போகிறோம் என்று இருந்த பயத்தை கொஞ்சம் போக்கினோம்...பேச வாய்ப்பு அளித்த கொங்கு நாடு கலை கல்லூரி-க்கும் வணிக மேலாண்மை துறை தலைவர் திரு.பிரபாகர் கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் என் நன்றிகள்.. .